வெண்கடுகு குங்குமம் வைச்சு மாதம் ஒரு நாள் மட்டும் இதை செய்யுங்க. உங்க குடும்பம் உருப்படவே கூடாதுன்னு யார் என்ன கெடுதல் செஞ்சாலும் எதுவும் உங்க கிட்ட நெருங்க கூட முடியாது.

Amman Venkadugu Kungumam
- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் மனிதர்களின் மனம் மிகவும் சிறியதாக மாறி விட்டது. நாம் நன்றாக இருக்கிறோமோ இல்லையோ ஆனால் நம்மை சுற்றியுள்ளவர்கள் நன்றாக இருந்தால் அதை பார்க்க மனம் பொறுப்பதில்லை. அதிலும் சுற்றத்தாரும் வேலை செய்யும் இடங்களில் எல்லாம் இது போன்ற தொந்தரவுகள் மிக அதிகம். இப்படியான சூழ்நிலையில் நம் அருகில் இருப்பவர்களில் யார் நல்லவர் கெட்டவர் யாரிடம் எப்படி பழக வேண்டும் என்று யோசித்துக் கொண்டு இருக்க முடியாது. நம்மை நாம் தான் தற்காத்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் முன்னேற்றத்தை தடுக்க யார் என்ன செய்தாலும் உங்கள் குடும்பத்தை கஷ்டப்படுத்த வேண்டும் என எந்த விதமான தாந்திரீகங்களை செய்தாலும் கூட இந்த பரிகாரத்தை செய்யும் போது எதுவும் உங்களை ஒன்றும் செய்யாது என்று சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்து இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

கண் திருஷ்டி தீய சக்திகளில் இருந்து நம்மை காத்துக் கொள்ள
இந்த பரிகாரத்தை நீங்கள் எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம். இதை செய்வதற்கு முதலில் ஒரு அகலமான பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இது உரிலி போல இருக்க வேண்டும் இதற்கென பயன்படுத்த போகும் பாத்திரத்தை இனி வேறு எதற்காகவும் பயன்படுத்த கூடாது.

இப்போது இந்த பாத்திரம் நிறைய சுத்தமான தண்ணீரை நிரப்பிக் கொள்ளுங்கள். அதில் ஒரு கைப்பிடி அளவு வெண்கடுகு ஒரு கைப்பிடி குங்குமம் இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். இப்போது தண்ணீர் சிகப்பு நிறத்தில் மாறி இருக்கும். இந்த தண்ணீரை உங்கள் வீட்டின் வரவேற்பு அறையில் வைத்து விடுங்கள்.  இந்த தண்ணீரின் மேல் வாழை இலையை நறுக்கி மேலே மூடி போல வைத்து விடுங்கள். அதன் பிறகு ஒரு கற்பூரத்தை இந்த பாத்திரத்தில் அருகில் வைத்து ஏற்றிய பிறகு கொஞ்சம் மலர்களை அர்ச்சனை செய்வது போல இந்த பாத்திரத்தின் மேலே தூவி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த நேரத்தில் துர்க்கை அம்மனை மனதார வேண்டிக் கொண்டு உங்கள் வீட்டில் இருக்கும் நபர்களின் பெயர் நட்சத்திரம் ராசி போன்றவை எல்லாம் சொல்லி இந்த அர்ச்சனை செய்ய வேண்டும். அதன் பிறகு இந்த பாத்திரத்தை வாழை இலை போட்டு மூடியப் படியே வீடு முழுவதும் சுற்றி வாருங்கள். கடைசியாக வீட்டில் இருப்பவர்கள் அனைவரையும் வாசலுக்கு வர சொல்லி ஒரு முறை வீட்டையும் அவர்களையும் சேர்த்து திருஷ்டி சுற்றுவது போல சுற்றிய பிறகு இந்த தண்ணீரை வெளியில் யாரும் கால் படாத இடத்தில் ஊற்றி விடுங்கள்.

நீங்கள் வீட்டிற்குள் நுழைவதற்கு முன் இந்த பாத்திரம், உங்கள் கை, கால் முகம் முழுவதும் நன்றாக அலம்பிய பிறகு தலையில் கொஞ்சம் தண்ணீரை தெளித்து கொண்டு உள்ளே செல்லுங்கள். இந்த பாத்திரத்தையும் தனியாக எடுத்து விடுங்கள். மாதம் ஒரு முறை இது போல செய்தால் எந்த தீய சக்தியும் உங்களை நெருங்க முடியாது. நீங்கள் வாழவே கூடாது என நினைத்து ஏதேனும் தீய வழிகளில் உங்களுக்கு கெடுதல் செய்ய நினைத்தாலும் கூட அதுவும் உங்கள் கிட்ட நெருங்க கூட முடியாது.

இதையும் படிக்கலாமே: அடுத்தடுத்து எவ்வளவு பெரிய போராட்டம் வந்தாலும் வாழ்க்கையில் ஜெயித்துக் கொண்டே செல்லலாம். இந்த ஒரு வேரை மட்டும் தாயத்தில் போட்டு கழுத்தில் மாட்டிக்கோங்க.

கண் திருஷ்டி தீய சக்திகள் மட்டுமில்ல எந்த துர்சக்திகளும் உங்களை நெருங்காமல் காத்துக் கொள்ள இந்த பரிகாரம் பெரிதும் உதவியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த திருஷ்டி கழிக்கும் முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களும் இது போல செய்து உங்கள் குடும்பத்தை தீய சக்திகளில் இருந்து காத்து நல்ல முறையில் வாழ்க்கையில் முன்னேறலாம் என்ற தகவலுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -