அடுத்தடுத்து எவ்வளவு பெரிய போராட்டம் வந்தாலும் வாழ்க்கையில் ஜெயித்துக் கொண்டே செல்லலாம். இந்த ஒரு வேரை மட்டும் தாயத்தில் போட்டு கழுத்தில் மாட்டிக்கோங்க.

thayathu
- Advertisement -

வாழ்க்கையில் நம்மை முன்னேற விடாமல் தடுப்பதற்கு எவ்வளவு பெரிய தடைகள் வந்தாலும், தோல்விகள் வந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மேலும் மேலும் நம் வாழ்க்கையை முன்னோக்கி நகர்ந்தி செல்ல முயற்சிகளை செய்து கொண்டே இருக்க வேண்டும். தோல்வி அடைந்தவுடன் முயற்சிகளை கைவிட்டு விட்டால், அவனால் நிச்சயம் வாழ்க்கையில் ஜெயிக்க முடியாது. போராட்டங்களும் தோல்விகளும் தான் வெற்றிக்கு முதல் படி என்று நினைத்து அதையெல்லாம் கடந்து மீண்டும் மீண்டும் முயற்சி செய்பவர்கள் தான் வாழ்க்கையில் வெற்றி அடைகின்றான். ஆகவே உங்களுடைய வாழ்க்கையில் ஏதாவது கஷ்டம் வந்துவிட்டால் அந்த கஷ்டத்தையே நினைத்து துவண்டு போகாதீங்க. கஷ்டத்தை மிதித்து பின்னுக்குத் தள்ளும் போது தான், கஷ்டத்திற்கு பின்னாடி இருக்கும் சந்தோஷத்தை நம்மால் அனுபவிக்க முடியும்.

சொந்த பந்தங்களால் பிரச்சனை, எதிரிகளால் பிரச்சனை, என்னுடைய கணவரால் பிரச்சனை, மனைவியால் பிரச்சனை, உடம்பு சரியில்லை, ஆரோக்கியத்தில் பிரச்சனை மாமனார் மாமியார் பிரச்சனை என்று ஏதாவது ஒரு சாக்கு போக்கு சொல்லிக் கொண்டே இருக்கக் கூடாது. உங்கள் முன்னேற்றத்தை தடுக்கக்கூடிய – எல்லாம், + ஆக மாற்றுங்கள். முட்டி மோதி எப்படியாவது சாதித்தே ஆக வேண்டும் என்ற விதையை மனதில் விதையுங்கள். அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் நிச்சயம் வாழ்க்கையில் ஒருநாள் இல்லை என்றாலும் ஒரு நாள் நீங்கள் வெற்றி காண்பீர்கள்.

- Advertisement -

முன்னேற்றம் தரும் தாயத்து:
எல்லாம் சரிதான், ஆனால் நம்முடைய நேரமும் காலமும் நமக்கு சாதகமாக அமைய வேண்டுமே. வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் சாதிக்க வேண்டும் என்று நினைத்தவர்கள் எல்லாம் ஜெயிக்கவில்லையே. நம் பக்கமும் அதிர்ஷ்ட காற்று கொஞ்சம் வீச ஏதாவது ஆன்மீகத்தில் பரிகாரம் உண்டா. இதற்கு நிறைய பரிகாரங்கள் நமக்கு சொல்லப்பட்டிருந்தாலும், இன்று ஒரு அரிய பரிகாரத்தை பற்றி தான் நாம் பார்க்கப் போகின்றோம்.

இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்றால் நீங்கள் ஒரு வேரை கட்டாயமாக வாங்க வேண்டும். இது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். சொல்லி வைத்தால் அவர்களே சாப நிவர்த்தி செய்து அந்த வேரை 48 நாட்களுக்கு ஒரு முறை கொண்டு வந்து உங்களுக்கு கொடுப்பார்கள். அதற்கான தொகையை நீங்கள் கொடுத்து வாங்கிக் கொள்ளவும்.

- Advertisement -

வெள்ளை விஷ்ணு கிராந்தி என்ற ஒரு மூலிகை செடி உள்ளது. இந்த செடியின் வேரை சாப நிவர்த்தி செய்து எடுத்து வந்து மஞ்சள் தண்ணீரில் கழுவி நிழலிலேயே காய வைத்து, ஒரு வெள்ளி தாயத்தில் போட்டு கழுத்திலோ, கையிலோ கட்டிக் கொண்டால் வாழ்க்கையில் எந்த விஷயத்திற்கும் நீங்கள் சோர்ந்து போக மாட்டீர்கள். குலதெய்வத்தை நினைத்து இந்த தாயத்தை தாயார் செய்யவும்.

எதுவாக இருந்தாலும் அதில் போராடி வெற்றி காண வேண்டும். என்ற மன உறுதியோடு வாழ தொடங்கி விடுவீர்கள். எதிரிகளை கண்டு பயப்பட மாட்டீர்கள். உங்களை முன்னேற விடாமல் தடுப்பவர்களை கண்டு அஞ்ச மாட்டீர்கள். முன்னேற்றத்திற்கு தடையாக எந்த ஒரு விஷயம் வந்து நின்றாலும் அதை தூக்கி எறியும் அளவிற்கு மன தைரியம் கொண்டவர்களாக மாறுவீர்கள்.

இதையும் படிக்கலாமே: தீராத கஷ்டம் குடும்பத்தை துரத்தி துரத்தி அடித்தால், இதை மட்டும் ஒரு முறை செய்ய மறக்காதீங்க. இது உங்கள் குடும்பத்தை காப்பாற்றி கஷ்டத்தில் இருந்து மீட்டுக் கொண்டு வந்து கரை சேர்க்கும்.

ஆனால் சாப நிவர்த்தி செய்து இந்த வேரை எடுத்து கழுத்தில் போட்டுக் கொண்டால், அது 48 நாட்களுக்குத்தான் வேலை செய்யும். மீண்டும் பழைய வேரை நீங்கள் தூக்கிப் போட்டுவிட்டு புதியதாக ஒரு வேரை தாயத்தில் போட்டு கட்ட வேண்டும். இது கொஞ்சம் சிரமமான விஷயமாக இருந்தாலும் வாழ்க்கையில் ஜெயிப்பதற்கு இந்த வேர் உறுதுணையாக நிற்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. எளிமையான இந்த தாந்திரீகம் உங்களுக்கு நம்பிக்கை கொடுக்கும்படி இருந்தால் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -