இந்த ஒரு மந்திரத்தை மனதிற்குள் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருங்கள். கெட்ட சிந்தனை, கெட்ட கனவு, மறக்கவே முடியாத துயரத்தை கொடுக்கும் கெட்ட சம்பவங்கள், எதுவுமே நினைவுக்கு வராது.

sivan
- Advertisement -

கடவுள் நமக்கு தந்திருக்கக் கூடிய மிகப்பெரிய வரம் என்ன தெரியுமா. மறதி. நம் வாழ்க்கையில் நடந்த எந்தெந்த விஷயங்களை எல்லாம் மறக்க வேண்டுமோ, அதை எல்லாம் மறக்காமல் பத்திரமாக ஞாபகத்தில் வைத்திருப்போம். எந்தெந்த விஷயத்தை எல்லாம் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டுமோ, அதை எல்லாம் கண்டிப்பாக மறந்து விடுவோம். எல்லா மனிதர்களுக்கும் இது இயற்கையாக நடக்கக்கூடிய ஒரு விஷயம்தான். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், மறதி மட்டுமில்லை என்றால் நம்மால் வாழ்க்கையில் சந்தோஷமாக வாழவே முடியாது. சரி உங்களுக்கு அடிக்கடி கெட்ட கனவு வருதா. வரக்கூடிய கெட்ட கனவு எல்லாம் பலிப்பது போலவே சிந்தனை ஆக இருக்குதா. ராத்திரியில் நல்ல தூக்கம் இல்லையா. ஏதோ ஒரு எதிர்மறை சிந்தனை மனதில் தோன்றி கொண்டே இருக்கிறதா. அது உங்களை நிம்மதியாக வாழ விடவில்லையா.

இப்படிப்பட்ட பிரச்சனைகளை எல்லாம் மறக்க முடியாமல் நீங்கள் தவித்து வருபவர்களா. உங்களுக்காக சொல்லப்பட்டுள்ள ஆன்மீகம் சார்ந்த எளிய பரிகாரம் தான் இது. இந்த ஒரு வரி மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருந்தால் உங்களுக்கு இருக்கும் கெட்ட எண்ணங்கள் எல்லாம் மறந்து போகும். ராத்திரியில் வரக்கூடிய கெட்ட கனவு வராது. மனதில் எப்போதும் நிம்மதி பிறக்கும்.

- Advertisement -

கெட்ட ஆற்றலை நம் உடலில் இருந்து வெளியேற்ற சொல்ல வேண்டிய மந்திரம்:
எல்லாம் சிவமயம். இந்த உலகமே சிவமயம். இதை நீங்கள் நம்புகிறீர்களா. அப்போது நிச்சயம் இந்த மந்திரம் உங்களுக்கு உடனடியாக பலனை கொடுக்கும். பிரம்ம முகூர்த்த நேரத்தில் கண்விழிக்கும் பழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். எதிர்மறை ஆற்றலை உடம்பில் இருந்து விரட்ட வேண்டும் என்றால், பிரம்ம முகூர்த்த நேரத்தில் இறைவழிபாடு செய்வது கைமேல் பலனை கொடுக்கும்.

அதிகாலையில் எழுந்து நீங்கள் சுத்தபத்தமாக இருக்கும் பட்சத்தில், பல் தேய்த்து முகம் கழுவி, கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து, அமைதியாக இருக்கக்கூடிய இந்த பிரபஞ்சத்தில் உங்களை ஒன்றிணைத்துக் கொள்ளுங்கள். மனதை ஒருநிலைப்படுத்துங்கள். சிவனை மட்டும் மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

என்னதான் இந்த பூமியில் நாம் ஆட்டம் போட்டாலும் இந்த ஒரு கைப்பிடி சாம்பல் தான் என்ற உண்மையை மனதில் நினைத்து திருநீற்றை எடுத்து நெற்றியில் பூசிக் கொள்ளுங்கள். கண்களை மூடி ‘ஓம் சிவசிவ ஓம்’ என்ற மந்திரத்தை மட்டும் மனதில் சொல்லுங்கள். கணக்கு கிடையாது. உங்களால் எத்தனை முறை சொல்ல முடியுமோ சொல்லுங்கள். எவ்வளவு நேரம் மனதை ஒருநிலைப்படுத்தி சொல்ல முடியுமோ, இந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருங்கள்.

10 நிமிடம், 15 நிமிடம் தியான நிலையில் அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லிவிட்டு பிறகு நீங்கள் தூங்க செல்லலாம் தவறு கிடையாது. பிறகு கண் விழித்துக் குளித்துவிட்டு அன்றாட வேலையை தொடங்கிவிட்டு, நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த மந்திரத்தை மனதில் சொல்லலாம். உங்கள் உடம்பில் இருக்கும் எதிர்மறை ஆற்றல், எதிர்மறை சிந்தனை அனைத்தும் உங்கள் உடம்பை விட்டு வெளியேறுவதற்கு இந்த எளிமையான மந்திரமே போதும். நேர்மறை சிந்தனை வந்து விட்டாலே நிம்மதியான தூக்கமும் வரும். கெட்ட கனவும் வரவே வராது.

இதையும் படிக்கலாமே: நிலை வாசலில் பிறர் பார்வை படும்படி இதை கட்டி தொங்க விட்டால் போதும். மகாலட்சுமி தாயாரின் அனுகிரக பார்வை உங்கள் மீது பட்டு, போதும் போதும் என்கிற அளவிற்கு செல்வம் அதிகரித்துக் கொண்டே செல்லும்.

சரி பிரம்ம முகூர்த்த நேரம் என்றால் சரியாக எந்த நேரத்தில் இந்த மந்திரத்தை உச்சரிப்பது. அதிகாலை 3.00 மணியிலிருந்து 5.00 மணிக்கு முன்பாக இந்த மந்திரத்தை நீங்கள் எந்த நேரத்தில் உச்சரித்தாலும் முழுமையான நேர்மறை ஆற்றலை உங்களால் பெற முடியும் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -