திடீர் கெட்ட நேரத்தால் பெரிய பணக்கஷ்டத்தில் முடங்கி போய் விட்டீர்களா? பச்சை கற்பூரத்தை உள்ளங்கையில் இப்படி வையுங்கள். கெட்ட நேரம் சொல்லாமல் கொள்ளாமல் உங்கள் உடம்பை விட்டு அடித்துப் பிடித்து தூரம் ஓடிப் போய்விடும்.

pachai-karpooram1
- Advertisement -

இது நாள் வரை நல்லா தாங்க இருந்தேன். நல்ல சம்பளம், நல்ல வேலை, நல்ல தொழில், நல்ல குடும்பம், மனைவி பிள்ளை என்று என்னுடைய வாழ்க்கையில் பெரியதாக எந்த குறையும் இருந்ததில்லை. அளவோடு பணம் இருந்தாலும், சந்தோஷமாக வாழ்ந்த குடும்பம் எங்கள் குடும்பம். ஆனால் திடீரென்று யார் கண்ணு பட்டது போல எல்லாவற்றையும் இழந்து, கையில் இருந்த செல்வத்தையும் இழந்து, குடும்பத்தைப் பிரிந்து கஷ்டப்படுகின்றேன். எதனால் இந்த துரதிஷ்டம் என்னை துரத்துகிறது என்றே தெரியவில்லை. இப்படிப்பட்ட கஷ்டத்தில் நீங்களும் சிக்கிக் கொண்டீர்களா. உங்களுடைய கெட்ட நேரத்தை, நல்ல நேரமாக மாற்றக்கூடிய அற்புதமான ஆன்மீகத்தில் சொல்லப்பட்டிருக்கும் எளிய பரிகாரத்தை தான் இன்று நான் பார்க்கப் போகின்றோம்.

கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றும் பச்சை கற்பூரம்:
எல்லா கெட்டதும், எல்லா எதிர்மறை ஆற்றலும் நம்முடைய இரண்டு உள்ளங்களில் தான் போய் தங்கி இருக்கும். நாம் தொட்டது எல்லாம் துலங்காமல் போக நம்முடைய உள்ளங்கையும் ஒரு காரணம். அதை சுத்தம் செய்து விட்டால் போதும். வாழ்வில் மீண்டும் நல்ல நிலைமைக்கு வந்து விடலாம். அதாவது உள்ளங்கை வழியாக உடம்பில் இருக்கும் அத்தனை துர் சக்திகளையும் இழுத்து வெளியே தள்ள முடியும்.

- Advertisement -

நீங்கள் கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள். ஒரு தட்டு நிறைய கல் உப்பை பரப்பி வைத்து விட்டு, இரண்டு கையாளும் அந்த கல்லுப்பை அள்ளி எடுத்துக் கொள்ளுங்கள். கையில் அள்ளிய இந்த உப்புக்கு மேலே, ஒரு பச்சை கற்பூரத்தை வைத்து, அந்த பச்சை கற்பூரத்தை ஏற்றி விட வேண்டும். இந்த பரிகாரத்திற்கு நிச்சயம் இன்னொருவரின் துணை தேவைப்படும். ஆனால் கல் உப்பில், உதவி செய்பவர்களுடைய கை படக்கூடாது. பச்சை கற்பூரத்தை மட்டும் கல் உப்பின் மேல் வைத்து அதில் நெருப்புப் பொருத்த சொல்லுங்கள்.

உங்களுடைய கையில் சூடு இறங்காத அளவுக்கு கைநிறைய கல் உப்பை அள்ளிக் கொள்ளுங்கள். பச்சை கற்பூரம் முழுவதும் எரிந்து முடிய வேண்டும். சின்ன துண்டு பச்சை கற்பூரமாக அந்த கல்லுப்பின் மேல் வைக்க வேண்டும். கை வலிக்காமல் இருக்க கையை அப்படியே தொடை மீது வைத்துக் கொண்டாலும் தவறு கிடையாது. ஆனால் இதில் நெருப்பு பற்ற வைப்பதால் நீங்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.

- Advertisement -

அலட்சியமாக இந்த பரிகாரத்தை செய்யக்கூடாது. அந்த பச்சை கற்பூரம் எரிந்து முடிந்த பின்பு கையில் இருக்கும் உப்பை அப்படியே கொண்டு போய் ஒரு பெரிய பக்கெட் தண்ணீரில் போட்டு கரைத்து விடுங்கள். அவ்வளவுதான். உங்களுடைய கெட்ட நேரம் முடிந்தது உங்கள் உடம்பில் இருக்கும் அத்தனை எதிர்மறை ஆற்றலையும் இந்த கல்லுப்பு தன்னகத்தே ஈர்த்துக் கொண்டு இருக்கும். அந்த பச்சை கற்பூரம் உங்களுக்கு நேர்மறை ஆற்றலை கொடுத்திருக்கும்.

இதையும் படிக்கலாமே: குலதெய்வ கோவிலில் இந்த வழிபாடு செய்தால் உங்கள் குலத்திற்கு நல்லது மட்டுமே நடக்கும். கெடுதல் உங்கள் குடும்பத்தை நெருங்க கூட முடியாது.

இந்த பரிகாரத்தை 3 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். எந்த கிழமையில் வேண்டுமென்றாலும் செய்யலாம். காலை எழுந்தவுடன் இந்த பரிகாரத்தை செய்து முடித்துவிட்டு, குளித்து விடுங்கள். முகம் கை கால் கழுவி பரிகாரத்தை செய்ய வேண்டும். பரிகார முடிந்தவுடன் குளிக்க வேண்டும். இதை செய்தால் நிச்சயமாக நீங்கள் இழந்த அத்தனையும் மீண்டும் உங்களை வந்து சேரும். உங்கள் உடம்பிலிருந்து அந்த துர் சக்தி கெட்ட நேரம் எல்லாம் வெளியே ஓடிவிடும். இழந்ததை மீட்பதற்கு ஆன்மீகம் சொல்லும் எளிய பரிகாரங்களில் இதுவும் ஒன்று. நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -