கெட்ட நேரமும் நல்ல நேரமாக மாற வழிபாடு

vinayagar valipadu
- Advertisement -

விநாயகப் பெருமானின் பாதத்தில் சரணாகதி அடைந்த ஒரு நபருக்கு அவர்கள் வாழ்க்கையில் எப்பொழுது நல்ல நேரம் வருமோ அதைவிட விரைவிலேயே வந்துவிடும் என்று கூறப்படுகிறது. எந்த ஒரு காரியத்தையும் நாம் விரைவில் எந்தவித தடைகளும் இல்லாமல் செய்து முடிக்க வேண்டும் என்றால் நமக்கு விநாயகப் பெருமானின் அருள் பரிபூரணமாக வேண்டும். அந்த வகையில் கெட்ட நேரத்தையும் நல்ல நேரமாக மாற்றி பிரச்சினையிலிருந்து வெளியே வருவதற்கு விநாயகப் பெருமானை வழிபடும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

ஒருவருக்கு கெட்ட நேரம் என்பது ஆரம்பித்து விட்டால் அவர் எதுவுமே செய்யாமல் அமைதியாக வீட்டில் இருந்தாலும் அவரைத் தேடி பிரச்சினைகள் வர ஆரம்பிக்கும். அதிலும் மிகவும் குறிப்பாக கடன் பிரச்சனையை கூறலாம். கடன் வாங்காவிட்டாலும் பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஜாமின் கையெழுத்து என்ற வகையில் போட்டு கடனில் மாட்டிக் கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.

- Advertisement -

இதே போல் பல பிரச்சனைகள் நம்மை தேடி வந்து கொண்டே இருக்கும். இவை அனைத்தும் அவர்களுக்கு ஏற்படக்கூடிய கெட்ட நேரத்தின் காரணமாகவே திகழ்கிறது. இந்த கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டோம் என்றால் கண்டிப்பான முறையில் நமக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் அனைத்துமே நீங்க ஆரம்பித்து விடும். சரி இதற்கு என்ன செய்யலாம் என்று பார்ப்போம்.

இந்த பிரச்சனைகள் தீர வேண்டும், கெட்ட நேரம் நல்ல நேரமாக மாற வேண்டும் என்று நினைப்பவர்கள் விநாயகப் பெருமானை வழிபட வேண்டும். ஞாயிற்றுக்கிழமையில் வரக்கூடிய எமகண்ட நேரமான மதியம் 12 மணியிலிருந்து 1.30 மணிக்குள் அருகில் இருக்கக்கூடிய விநாயகர் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது ஒரு கைப்பிடி கொள்ளை எடுத்துச் செல்ல வேண்டும். இந்த கொள்ளை விநாயகரின் பாதத்தில் வைத்துவிட்டு விநாயகருக்கு இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து அவரை ஒரு முறை வலம் வர வேண்டும்.

- Advertisement -

பிறகு அந்த கொள்ளை எடுத்து நம்முடைய தலையை இடமிருந்து வலமாக மூன்று முறை சுத்தி ஆலயத்திலேயே கால் படாத இடமாக பார்த்து போட்டு விட வேண்டும். இப்படி செய்த பிறகு விநாயகப் பெருமானை மனதார வழிபட்டு விட்டு வீட்டிற்கு திரும்பி வரவேண்டும். தொடர்ச்சியாக 11 வாரங்கள் விநாயகரை இந்த முறையில் வழிபட நம்முடைய கெட்ட நேரமும் நல்ல நேரமாக மாறிவிடும். நமக்கு இருக்கக்கூடிய அனைத்து விதமான பிரச்சனைகளும் நீங்கிவிடும்.

இதோடு மட்டுமல்லாமல் தினமும் காலையில் சுத்தமாக குளித்து முடித்துவிட்டு விநாயகப் பெருமானை மனதார நினைத்து “ஓம் கம் கணபதியே நமஹ” என்னும் மந்திரத்தை 27 முறை உச்சரிக்க எதை நினைத்து நாம் இந்த மந்திரத்தை உச்சரித்தோமோ அது விரைவிலேயே நடைபெறும்.

இதையும் படிக்கலாமே: குடும்ப பிரச்சினை தீர துர்க்கை அம்மன் வழிபாடு

முழு நம்பிக்கையுடன் விநாயகப் பெருமானை இந்த முறையில் வழிபட்டால் கண்டிப்பாக முறையில் நமக்கு எப்பேற்பட்ட கெட்ட காலமாக இருந்தாலும் அவை அனைத்தும் மாறி நல்ல காலம் ஏற்பட்டு மகிழ்ச்சியான நிறைவான வாழ்க்கையை வாழ முடியும்.

- Advertisement -