உங்கள் கெட்ட நேரத்திற்கு ஒரு முடிவு கட்ட, வீட்டிற்குள் சந்தோஷமும் ஐஸ்வரியமும் கொட்டோ கொட்டென கொட்ட, வாசலில் கட்ட வேண்டிய 2 பொருள் என்னென்ன?

vasal-kathavu-kuladheivam
- Advertisement -

நமக்கு கெட்ட நேரம் வந்து விட்டாலே நம்மை தேடி வரும் நல்லது கூட, கெட்டதாக மாறிவிடும். நல்ல நேரம் நடக்கும் போது, நம்மை தேடி வரும் கெட்டது கூட நமக்கு நன்மை செய்து விட்டு போகும். இந்த கெட்ட நேரத்தில் வரும் துன்பங்களை துயரங்களை நம் வீட்டிற்குள் வரவிடாமல் தடுக்க செய்ய வேண்டிய ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம். மனது சரியில்லை, உடம்பு சரியில்லை, வீட்டில் இருப்பவர்களுக்கு பிரச்சினை மேல் பிரச்சனை, வீண் விறைய செலவு, செலவுக்கு மேல் செலவு, பிரச்சனைக்கு மேல் பிரச்சனை. தலை தூக்கவே முடியவில்லை. நம்முடைய வேலைகளை கூட சரிவர செய்ய முடியவில்லை. இதற்கெல்லாம் கெட்ட நேரம் ஒரு பக்கம் காரணமாக இருந்தாலும், நம்மை சுற்றி இருக்கும் தீய சக்திகளின் ஆட்டம் தலை தூக்கி இருக்கும். இதையெல்லாம் ஒழித்து கட்ட தான் இந்த எளிமையான பரிகாரம் நமக்கு சொல்லப்பட்டுள்ளது.

ஒரு காவலாளி நம் வீட்டு வாசலில் நின்று நம் குடும்பத்தை காப்பது போலவே ஒரு உணர்வு நமக்கு ஏற்படும். இந்த இரண்டு பொருட்களை தாண்டி நம் வீட்டிற்குள் எந்த கெட்ட சக்தியும் நுழையாது. நல்லதை மட்டும் நம் வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வரக்கூடிய அந்த இரண்டு பொருட்கள் என்னவாக இருக்கும். தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

கெட்ட நேரத்திற்கு ஒரு முடிவு கட்ட, வாசலில் கட்ட வேண்டிய 2 பொருள்:
முதலில் அந்த இரண்டு பொருட்கள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். வசம்பு அருகம்புல். விஷத்தன்மையை முறிக்கக் கூடிய சக்தி இந்த 2 பொருட்களுக்கும் உண்டு. நம் வாழ்க்கையில் நம்மை சுற்றி, நம் வீடு நிரம்பி இருக்கும் எதிர்மறை சக்தியை தான் விஷம் என்று சொல்கின்றோம். மருத்துவத்திற்கு இந்த இரண்டு பொருட்களும் எந்த அளவுக்கு பயன்படுத்தப்படுகிறதோ, அதே அளவு மகத்துவத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. இன்று இந்த இரண்டு பொருட்களின் மகத்துவத்தை பற்றி தான் பார்க்கப் போகின்றோம்.

ஒரு சிறிய துண்டு வசம்போடு, இரண்டு அருகம்புல்லை வைத்து, ஒரு மஞ்சள் நிற நூல் போட்டு கட்டி, அதை அப்படியே நிலை வாசலில் மாட்டி வைத்து விடுங்கள். வெளியாட்கள் கண்ணனுக்கு தெரியும் படி, இந்த 2 பொருட்கள் இருந்தாலும் பரவாயில்லை. ஒரு வாரத்திற்கு, ஒரு முறை அந்த வசம்பில் இருக்கும் அருகம்புல்லை மட்டும் எடுத்து கால் படாத இடத்தில் போட்டு, மீண்டும் புது அருகம்புல்லை வைத்து கட்டிவிடலாம். தினமும் விளக்கு ஏற்றும்போது ஊதுவத்தியை மட்டும் இந்த வசம்புக்கு காட்டி வாருங்கள். உங்கள் குலதெய்வத்தை வேண்டி இந்த பரிகாரத்தை செய்யுங்கள். இந்த இரண்டு பொருட்களும் நிலை வாசலில் காவல் தெய்வமாகவே நிற்கும்.

- Advertisement -

உங்கள் வீட்டில் இருக்கும் பிரச்சினைகளை படிப்படியாக குறைக்கும். வீட்டிற்குள் சந்தோஷத்தையும் மன நிம்மதியையும் கொண்டு வந்து சேர்க்கும். கடன் சுமை குறைவும். எல்லா வகையான பிரச்சனைக்கும் தீர்வு தரக்கூடிய எளிமையான பரிகாரம் இது. நாள் கிழமை நேரம் எதுவுமே பார்க்க வேண்டாம். நீங்கள் பரிகாரத்தை செய்த அந்த நொடிப் பொழுதிலிருந்து உங்களுக்கு நல்ல நேரம் ஆரம்பித்து விடும்.

இதையும் படிக்கலாமே: வெறும் 11 ரூபாய் இருந்தால், 11 லட்சம் கூட சுலபமாக சம்பாதிக்கலாம். நீங்கள் மனதில் நினைத்ததை சாதிக்க இதோ ஒரு தந்திர வித்தை.

வசம்பு அவ்வளவு எளிதில் கெட்டுப் போகக்கூடிய பொருள் அல்ல. ஆகவே அதை வருடத்திற்கு ஒருமுறை மாற்றினால் கூட போதுமானது. சமயத்தில் அருகம்புல் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. வெறும் வசம்பை மட்டும் நிலை வாசல் படியில் மாட்டி வையுங்கள். ஆனால் அருகம்புல் நிலை வாசல் படியில் இருக்கும் போது வீட்டின் ஒட்டு மொத்த வாஸ்து பிரச்சனைகளை கூட சரி செய்யும். அதன் மூலம் குடும்பத்தில் குழப்பம் இருந்தாலும் நிவர்த்தியாகும். உங்களின் கெட்ட நேரத்திற்கு ஒரு முடிவு கட்டும் வேலையை அந்த வசம்பு பார்த்துக் கொள்ளும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -