கெட்ட சக்தியிடம் இருந்து நம்மை பாதுகாக்கும் மை தயார் செய்யும் முறை

amman3
- Advertisement -

நாம நம்ம வீட்ல சந்தோஷமா இருந்தா, நம்ம பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு அது பிடிக்காது. அலுவலகத்தில் நல்லா வேலை செஞ்சா, நம்ம பக்கத்து சீட்ல இருக்க சக ஊழியருக்கே பிடிக்காது. இப்படி ஒவ்வொரு இடத்திலும் எதிரிகளை பக்கத்திலேயே வைத்துக் கொண்டுதான் இந்த வாழ்க்கையை கடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கிறது.

நமக்கு தொல்லையாக சில பேர் எதிரிகளாக இருப்பார்கள். பல பேர் வாழ்க்கைக்கு நாமும் கூட எதிரியாக தெரிவோம். ஆக எதிரிகள் என்பவர்கள் ஒரு மனிதனுக்கு கட்டாயம் இருக்கத்தான் செய்வார்கள். எதிரிகளைப் பார்த்து நாம் பயப்படத் தேவையில்லை. ஆனால் ஒரு சில எதிரிகள் தனக்கு போட்டியாக வருபவர்களை அழித்தே ஆக வேண்டும் என்று முடிவு கட்டி விடுவார்கள். இதற்காக எதிர்மறையான சில விஷயங்களை செய்ய தொடங்கி விடுவார்கள்.

- Advertisement -

அதுதான் இந்த ஏவல் பில்லி சூனியம் செய்வினை போன்ற பிரச்சனைகள் வருவதற்கு முதல் காரணமாக அமைவது. உங்களுக்கும் இது போன்ற பிரச்சனைகள் இருக்கிறதா. அதிலிருந்து விடுபட வேண்டும் என்று நினைப்பவர்கள், ஆன்மீகம் சொல்லும் இந்த எளிய பரிகாரத்தை பின்பற்றி பாருங்கள். படிப்படியாக உங்களுக்கு இருக்கக்கூடிய எதிரி பிரச்சனை குறையும். செய்வினை பாதிப்புகள் இருந்தாலும் அதிலிருந்து வெளி வருவதற்கு உண்டான வாய்ப்புகள் கிடைக்கும்.

கெட்ட சக்தியிடம் இருந்து விடுபட

இந்த பரிகாரத்திற்கு நமக்குத் தேவையான பொருட்கள் மூன்று. இலுப்பெண்ணை, வேப்பெண்ணை, வசம்பு. இந்த மூன்று பொருட்களையும் கடையிலிருந்து வாங்கிக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டு பக்கத்தில் இருக்கக்கூடிய உக்கிரமான தெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டும். பத்திரகாளியம்மன் கோவில், அங்காள ஈஸ்வரி கோவில், பிரத்தியங்கிரா கோவில், வாராகி அம்மன் இப்படி எந்த கோவிலாக இருந்தாலும் சரி, அந்த கோவிலுக்கு செல்லுங்கள்.

- Advertisement -

நீங்கள் கையில் வைத்திருக்கும் மூன்று பொருட்களையும் அர்ச்சகரிடம் கொடுத்து அந்த அம்பாளின் பாதத்தில் வைத்து உங்கள் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்திற்கு தொல்லை தரும் எதிரிகள் எல்லாம் விலக வேண்டும் எதிரியால் ஏவி விடப்பட்ட கெட்ட சக்திகள் எல்லாம் உங்களை விட்டும், உங்கள் குடும்பத்தை விட்டும் நீங்க வேண்டும் என்று பிரார்த்தனை வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இந்த மூன்று பொருட்களையும் அம்பாள் பாதத்தில் இருந்து எடுத்து தரச் சொல்லி, வீட்டுக்கு வாங்கிட்டு வந்துருங்க.

வாங்கி வந்த வசம்பை நல்லெண்ணையில் நனைத்து, அப்படியே நெருப்பில் சூடு செய்யுங்கள். வசம்பு நெருப்பில் சுட்டால் கருப்பு நிறத்தில் கறியாக நமக்கு கிடைக்கும். அதை தூள் செய்து ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள். இந்த வசம்பு தூளில் தேவையான அளவு மட்டும் இலுப்பென்னையையும், வேப்பெண்ணையையும் சரிசமமாக ஊற்றி கலக்க வேண்டும்.

- Advertisement -

அம்பாளின் பாதத்தில் வைத்து எடுத்து வந்தீர்கள் அல்லவா. அந்த எண்ணெயை ஊற்றி, இந்த கறியை கலந்தால் கருப்பு நிறத்தில் ஒரு மை கிடைக்கும். அதை சேகரித்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இரும்பு டப்பாவில் மட்டும் இதை போடக்கூடாது பிளாஸ்டிக் டப்பா கூட பயன்படுத்தலாம்.

இந்த மையை பூஜை அறையிலேயே வைத்துக் கொள்ளுங்கள். தினமும் காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு வேலைக்கு கிளம்பும்போது இந்த மையிலிருந்து ஒரு சொட்டு எடுத்து உங்களுடைய நெற்றியில் வைத்துக் கொள்ளலாம். இல்லையென்றால் உச்சம் தலையில் ஒரு சொட்டு தடவிக் கொள்ளலாம்.

இந்த மையை தினமும் இட்டு வர உங்கள் உடம்பை பிடித்த கெட்ட சக்தி, உங்கள் குடும்பத்தை பிடித்த கெட்ட சக்தி விலகும். இதை யார் வேண்டுமென்றாலும் இட்டுக்கொள்ளலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதை பயன்படுத்தலாம். பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கும் இதை வைக்கலாம்.

இதையும் படிக்கலாமே: துளசி செடி அபிஷேக பரிகாரம்

அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசமாக இந்த மை செயல்படும். எதிரி தொல்லை விலக, கெட்ட சக்தியிலிருந்து விடுபட ஆன்மீகம் சொன்ன இந்த எளிய பரிகாரம் அனைவருக்கும் பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -