அமாவாசை பௌர்ணமி தினத்தில் மட்டும் இதை செய்தால் போதும். நம்முடைய உடம்பில் கெட்ட சக்தியால் தங்கவே முடியாது. கெட்ட சக்தி ஊர் எல்லையைத் தாண்டி ஓடிவிடும்.

pournami
- Advertisement -

கெட்ட சக்திகள் வந்து தங்குவதற்கு ஒரு கூடு தேவை. அந்த கூடாகத்தான் நம்முடைய உடம்பை, கெட்ட சக்திகள் பயன்படுத்திக் கொள்ளும். எதிர்மறை ஆற்றல், கெட்ட சக்தி என்று சொல்லக்கூடிய இந்த விஷயங்களை நாம் பல வேறு பெயர்களை வைத்து சொல்லுகின்றோம். கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம், பேய், பிசாசு, செய்வினை என்று எத்தனை பெயர் வைத்தாலும் அது ஒரு நெகட்டிவ் எனர்ஜி. அது எந்த ரூபத்தில் வேண்டும் என்றாலும் வந்து நம்முடைய உடம்பில் அமர்ந்து கொண்டு நம்மை ஆட்டிப் படைக்கும். சில பேருக்கு இது உடல் உபாதைகளாக கூட வெளிப்படும்.

இப்படி நம்முடைய உடம்பை வந்து பிடித்துக் கொள்ளும் எதிர்மறை சக்திகளையும் கெட்ட ஆற்றலையும் எப்படி விரட்டி அடிப்பது. தாந்திரீகத்தில் நமக்கு ஒரு அருமையான பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது. ஒரு வேர் பரிகாரம் இது. இந்த பரிகாரத்துக்கு எந்த வேரை எப்படி பயன்படுத்த வேண்டும். அமாவாசை பௌர்ணமி தினங்களில் அந்த பரிகாரத்தை முறைப்படி நமக்கு நாமே எப்படி செய்து கொள்வது என்பதை பற்றிய விரிவான ஆன்மீகம் சார்ந்த பதிவு இதோ உங்களுக்காக.

- Advertisement -

உடம்பிலிருந்து கெட்ட சக்தியை விரட்டி அடிக்கும் மிளகாய் வேர்:
இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒரு மிளகாய் செடியின் வேர் தேவை. இதற்கு காப்பு கட்டி தான் இந்த வேரை எடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. பரிகாரத்திற்கு வேரை எடுக்கும் போது செடியை ஒருமுறை வணங்கிக் கொண்டு, நன்மைக்காகத்தான் இந்த வேர் பயன்படுத்தப்படும் என்று சொல்லிவிட்டு அதன் பிறகு அந்த பேரை கிள்ளி எடுத்துக் கொள்ளுங்கள்.

பரிகாரத்திற்கு முந்தைய நாள் இந்த வேரை எடுத்து வந்து நம் வீட்டில் வைத்துக் கொள்ளலாம். தவறு கிடையாது. இதே வேரை வைத்து ஒரு வருடத்திற்கு நாம் பரிகாரம் செய்து கொள்ளலாம். அமாவாசை இரவு 9 மணிக்கு மேல் கிழக்கு பார்த்த வாரு அமர்ந்து கொள்ளுங்கள். குலதெய்வத்தை மனதார நினைத்துக் கொள்ளுங்கள். இந்த வேரை உங்கள் உச்சந் தலையில் வைத்து அமர வேண்டும். உச்சந்தலையில் வேரை வைத்து விட்டு, கையை எடுத்து விடுங்கள். உடம்பில் இருக்கும் எந்த கெட்ட சக்தி கண்திருஷ்டியாக இருந்தாலும் அது உடம்பை விட்டு நீங்க வேண்டும் என்று 5 நிமிடம் கண்களை மூடி தியானம் செய்யுங்கள்.

- Advertisement -

பிறகு உச்சந்தலையில் இருக்கும் இந்த வேரை எடுத்து ஒரு டப்பாவில் போட்டு, மூடி வைத்துவிடலாம். பிறகு பௌர்ணமி இரவு 9 மணிக்கு மேல் நிலா வெளிச்சம் உங்கள் மேல் படும்படி ஒரு இடம் இருந்தால், அந்த இடத்தை தேர்ந்தெடுத்து அமர வேண்டும். இதே வேரை உச்சந் தலையில் வைத்து நெகட்டிவ் எனர்ஜி வெளியேற வேண்டும் என்று ஐந்து நிமிடம் மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் செய்ய வேண்டும். மீண்டும் அந்த வேரை எடுத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வருடத்திற்கு இதே போல மாதத்தில் இரண்டு நாள் இந்த வேரை உச்சந் தலையில் வைக்கும் போது உங்கள் உடம்பில் இருக்கும் அத்தனை எதிர்மறை ஆற்றலையும் கெட்ட சக்தியையும் இந்த வேர் ஊடுருவி வெளியே தள்ளிவிடும்.

இதையும் படிக்கலாமே: இரவு படுத்த உடனேயே நல்ல தூக்கம் வர உங்கள் கால்களில் இந்த எண்ணெயை பூசிக் கொண்டால் போதும். ஆழ்ந்த தூக்கம் உங்களுக்கு சொர்க்கத்தை கொடுக்கும்.

மிளகாய் வேருக்க்கு அத்தனை பவர் உண்டு. அமாவாசை பௌர்ணமி நாளில் மட்டும் தான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். அப்போதுதான் முழு பலனை நம்மால் பெற முடியும். மற்ற நாட்களில் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் பெரிய பலன் இருக்காது. (கட்டாயம் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து இதை செய்ய வேண்டும் என்று அவசியம் கூட கிடையாது. உங்களுக்கு பிரச்சனை வரும்போது ஒரு மாத பௌர்ணமி, அமாவாசை தினத்தில் இந்த பரிகாரத்தை செய்தாலே பலன் கிடைத்துவிடும்.)  நம்பிக்கை உள்ளவர்கள் இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பார்த்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -