இரவு படுத்த உடனேயே நல்ல தூக்கம் வர உங்கள் கால்களில் இந்த எண்ணெயை பூசிக் கொண்டால் போதும். ஆழ்ந்த தூக்கம் உங்களுக்கு சொர்க்கத்தை கொடுக்கும்.

hanuman-sleep
- Advertisement -

யார் ஒருவருக்கு மனது குப்பைத் தொட்டியாக இருக்கிறதோ, அவர்களுக்கு இரவில் நிம்மதியான நல்ல தூக்கம் என்பது நிச்சயம் இருக்காது. மனதை எப்போதும் புது புத்துணர்ச்சியோடு சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். எல்லா விஷயங்களையும் போட்டு மனதில் குழப்பிக் கொண்டு, மனதில் எல்லா விஷயங்களையும் புதைத்து வைத்திருந்தால் மன அழுத்தம் தான் ஏற்படும். நிம்மதியான தூக்கம் நிச்சயம் வராது. இதுதாங்க முதல் விஷயம்.

முதலில் மனதை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள். இன்று பார்க்க போகும் இரண்டு எளிமையான பரிகாரங்களில் முதலில் சொல்லப் போவது எண்ணெய் பரிகாரம். இரண்டாவது சொல்லப்போவது முத்திரை பரிகாரம். தேவைப்படுபவர்கள் இரண்டையும் பின்பற்றி பலன் பெறலாம். முடியாதவர்கள் ஏதாவது ஒரு பரிகாரத்தை பின்பற்றி கொள்ளலாம்.

- Advertisement -

தூக்கம் வர பரிகாரம்:
இந்த பரிகாரத்திற்கு தேங்காய் எண்ணெய் பச்சை கற்பூரம் தேவை. லேசாக அடுப்பில் தேங்காய் எண்ணெயை வைத்து சூடு செய்து அதில் இரண்டு சிட்டிகை பச்சை கற்பூரத்தை போட்டால் அந்த கற்பூரம் எண்ணெயிலேயே நன்றாக கரைந்து விடும். சூடு ஆறிய பின்பு இதை ஒரு பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இரவு தூங்க செல்வதற்கு முன்பு இந்த எண்ணெயை எப்படி எல்லாம் பயன்படுத்துவது என்று பார்ப்போம்.

இரவு தூங்க செல்வதற்கு முன்பு முதலில் முகம் கை கால்களை தண்ணீரில் நன்றாக கழுவிக் கொள்ளுங்கள். அதன் பின்பு ஈரம் காயட்டும். இந்த எண்ணெயை லேசாக எடுத்து உங்களுடைய காதுகளில் மேல் பக்கத்தில் தடவி அப்படியே வருடி கொடுக்கவும். (2 நிமிடம் காதை மசாஜ் செய்தாலே தூக்கம் வந்துவிடும்.) அடுத்து பாதங்களில் இருக்கும் 10 விரல்களிலும் லேசாக இந்த எண்ணெயை தடவி, லேசாக அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்யவும். அதன் பிறகு தேவைப்பட்டால் உள்ளங்கால்களில் கொஞ்சமாக இந்த எண்ணெயை தடவி அனுமனை நினைத்து மனதை ஒருநிலைப்படுத்தி தூங்க சென்றால் நிச்சயம் தூக்கம் வரும். இது முதல் வழி.

- Advertisement -

தூக்கம் தரும் சூனிய முத்திரை:
தூக்கம் இன்மை பிரச்சனைகளுக்கு எளிமையான முறையில் தீர்வு தரக்கூடிய சக்தி இந்த முத்திரைக்கு உண்டு. நல்ல தூக்கத்தை பெறுவதற்கு இந்த சூனிய முத்திரையை நாம் பயன்படுத்தலாம். முதுகு தண்டு வடம் நேராக இருக்கும் படி கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு, கையில் சூனியமுத்திரையை பிடித்து தொடைமேல் வைத்துக் கொள்ளுங்கள்.

ஐந்து நிமிடம் மனதை ஒருநிலைப்படுத்தி நன்றாக தூக்கம் வர இறைவனை பிரார்த்தனை செய்ய வேண்டும். சூனிய முத்திரை எப்படி பிடிப்பது என்பது மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தை பார்த்தாலே உங்களுக்குத் தெரியும். தினமும் இந்த முத்திரையை தொடர்ந்து பிடித்து வர மனசு லேசாகும். நிம்மதியான தூக்கத்தை பெற முடியும்.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் அனைத்தும் பஞ்சாய் பறந்து போக இந்த வழிப்பாட்டை செய்தால் போதும். எந்த பிரச்சனையும் உங்களை அண்டவே விடாமல் தகர்த்தெறியும் சக்தி வாய்ந்த பஞ்சகுண சிவ மூர்த்தி வழிபாடு.

மேல் சொன்ன இந்த இரண்டு எளிமையான முறைகளை பின்பற்றி பாருங்கள். வயதானவர்கள் தீராத வியாதியால் அவதிப்படுபவர்கள் என்று பல பிரச்சனையில் சிக்கி இருந்தாலும் உங்களுக்கு இரவு நிம்மதியான தூக்கம் கிடைக்கும். சிறு வயதில் உள்ள இளைஞர்கள் ஓரளவு நடுத்தர வயதை கொண்டவர்கள் கூட, மன அழுத்தத்திலிருந்து விடுபட இந்த இரண்டு பரிகாரங்களை பின்பற்றி பார்க்கலாம். தூக்கத்தை தரும் இந்த எளிமையான ஆன்மீகம் பரிகாரங்கள் உங்களுக்கு நன்மை பயக்கும் வகையில் அமைந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடமும் இந்த விஷயத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.

- Advertisement -