வீட்டில் இருக்கும் தீய சக்திகள் விலகி ஓடவும், தெய்வசக்தி குடியேறவும் வீட்டு நிலை வாசலில் இந்த இரண்டு பொருட்களை ஒன்றாக சேர்த்து வைத்து விடுங்கள்.

vasal
- Advertisement -

நம் வாழும் இந்த உலகில் நன்மை தீமை என இரண்டும் கலந்து இருப்பது இயற்கை தான். இதில் நல்லதை கொண்டு நல்ல முறையில் வாழ தான் நாம் முயற்சி செய்ய வேண்டும். இதே போல தான் நம்மைச் சுற்றியும் நல்ல சக்தி தீய சக்தி என்று இரண்டும் இருக்கத் தான் செய்கிறது. இதில் நல்ல சக்தி மட்டும் நம் வீட்டில் தங்க வேண்டும் என்பதற்காகத் தான் வீட்டில் பூஜை செய்வது கோவிலுக்கு செல்வது போன்ற வற்றை செய்து வீட்டில் தெய்வசக்தி அதிகரிக்கிறோம். இருப்பினும் சில நேரங்களில் தீய சக்திகள் ஆக்கிரமித்து தெய்வ சக்திகளை வர விடாமல் செய்து விடும். அதை சரி செய்வதற்கான ஒரு எளிய பரிகாரத்தை பற்றி தான் இப்போது இந்த ஆன்மீகம் குறித்து பதிவு நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

வீட்டில் இருக்கும் தீய சக்தி வெளியேறி தெய்வ சக்தி குடியேற
பொதுவாக நம் முன்னோர்கள் காலத்திலிருந்து ஒரு வழக்கு சொல் உள்ளது. தெய்வத்திற்கு கட்டு போடப்பட்டுள்ளது தெய்வம் உங்கள் வீட்டில் இல்லை என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் தெய்வத்தை யாரும் கட்ட முடியாது. தெய்வம் வீட்டில் இல்லை என்பது வேண்டுமானால் உண்மையாக எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் வீட்டில் தீய சக்திகள் அதிகரித்திருக்கும் போது நாம் தெய்வ சக்தியை கொண்டு வருவதற்கான முயற்சிகளை செய்ய முடியாது. ஆகையால் தெய்வம் வீட்டிற்குள் வராமல் வெளியில் நிற்குமே ஒழிய தெய்வத்தை யாரும் தடுக்க முடியாது.

- Advertisement -

இதை சரி செய்வதற்கான ஒரு எளிய பரிகாரமாக தான் இதை நாம் செய்ய வேண்டும். இந்த செய்யும் போது வீட்டில் இருக்கும் தீய சக்திகள் தானாக வெளியேறுவதுடன் தெய்வ சக்தி உள்ளே வரவும் மற்ற எந்த துர்சக்திகளும் நம்மை நெருங்காது நம்மை பாதுகாக்கவும் இந்த பரிகாரம் பெரிய அளவில் உதவி செய்யும். இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவை கைப்பிடி பச்சரிசி, கொஞ்சம் மஞ்சள், ஐந்து மிளகு இவ்வளவே.

ஒரு தட்டில் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் பச்சரிசியை போட்டு அதில் மஞ்சளையும் சேர்த்து நன்றாக கலந்து விடுங்கள். இது அர்ச்சதை போல தயார் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் மிளகையும் சேர்த்து கலந்த பிறகு உங்கள் வீட்டு நிலை வாசலுக்கு வந்து இரண்டு பிறமும் கைகளில் இந்த பச்சரிசி எடுத்து வைக்க வேண்டும். இதை வைக்கும் போது இந்த ஒரு மந்திரத்தையும் சொல்லுங்கள்.

- Advertisement -

ஓம் பைரவாய நமக
என்ற இந்த மந்திரத்தை சொல்லியபடி இரண்டு புறமும் இந்த பச்சரிசியை மிளகுடன் சேர்த்து வைத்து விடுங்கள். இது இரவு முழுவதும் அப்படியே இருக்கட்டும். மறுநாள் காலையில் இதை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். வீட்டில் அதிக அளவில் பிரச்சனை இருப்பதாக தோன்றினால் சில நாட்களுக்கு இதை தொடர்ந்து செய்யுங்கள். அப்படி இல்லாத பட்சத்தில் வாரத்திற்கு ஒரு முறை இப்படி செய்வதை வழக்கமாக வைத்திருங்கள். எந்த துர் சக்தியும் நெருங்காது.

இதையும் படிக்கலாமே: பணம் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான வேண்டுதல்களும் நிறைவேற இந்த முத்திரையை உபயோகித்து பாருங்கள்.

தீய சக்திகளை விரட்ட செய்யக் கூடிய இந்த பரிகார முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் இந்த எளிய பரிகாரத்தை நீங்களும் செய்து தீய சக்திகள் ஆக்கிரமிப்பில் இருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காத்து தெய்வ அனுகிரகத்தை பெற்று நிம்மதியுடன் வாழ வழி தேடி கொள்ளலாம் என்ற கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -