இந்த ஒரு தீபத்தை தொடர்ந்து மூன்று நாட்கள் ஏற்றினால் வீட்டில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட கெட்ட சக்தியாக இருந்தாலும் ஒன்றுமில்லாமல் போய் வீடு சுபிட்சமாக இருக்கும்.

kastam vilakku
- Advertisement -

நல்லதும் கெட்டதும் சேர்ந்தது தான் வாழ்க்கை. நம்மை சுற்றி நல்ல சக்திகள் இருக்கும் பொழுது நமக்கு நன்மைகள் நடக்கும். அதேபோல் தீய சக்திகள் இருக்கும் போது தீமைகள் நடக்கும் என்று கூறப்படுகிறது. இந்த தீய சக்திகளை நாம் கெட்ட சக்திகள் என்றும் கூறலாம். பிறர் நம்மை கெடுப்பதற்காக செய்யக்கூடிய சக்தியை தான் நாம் கெட்ட சக்தி என்று சொல்கிறோம். அப்படிப்பட்ட கெட்ட சக்தி நம் வீட்டில் இருந்தால் நம்மால் எந்த வகையிலும் முன்னேற முடியாது. இந்த கெட்ட சக்தியை எப்படி ஒரு தீபத்தை ஏற்றுவதன் மூலம் வீட்டிலிருந்து விரட்ட முடியும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வீட்டில் கெட்ட சக்திகள் அதிகமாக இருந்தால் உடல் நலனில் பாதிப்பு ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் தோல்விகள் ஏற்படும். தொழிலில் லாபங்களுக்கு பதிலாக நஷ்டங்கள் ஏற்படும். வீட்டில் எப்போதும் சண்டை சச்சரவுகள் ஏற்படும். நிம்மதியான ஒரு சூழலே இருக்காது. சுப காரியங்களில் தடைகள் ஏற்படும். இப்படி அனைத்து விஷயங்களிலும் கெடுதலே நடைபெறும். இதை சரி செய்வதற்கு ஒரே ஒரு தீபம் போதும்.

- Advertisement -

இந்த தீபத்தை நாம் ஏற்ற ஆரம்பிக்கும் நாள் ஞாயிற்றுக்கிழமை ஆக இருந்தால் மிகவும் விசேஷமாக இருக்கும். இந்த தீபத்தை ஏற்றுவதற்கு நமக்கு ஒரு இரும்பு அகல் விளக்கு தேவைப்படுகிறது. இதற்கு நாம் இலுப்பை எண்ணெயும், வேப்ப எண்ணெயும் சமமான அளவு இருக்கும் படி கலந்து கொள்ள வேண்டும். அதனுடன் திரவிய பட்டை பொடியையும் கலந்து கொள்ள வேண்டும். இவை அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

அடுத்ததாக இதில் போடக்கூடிய திரிக்காக நாம் சிவப்பு நிற துணியை தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த துணியை நன்றாக துவைத்து அலசி காய வைக்க வேண்டும். பிறகு அந்த துணியை எருக்கஞ்செடி பாலில் நன்றாக நனைத்து நிழலில் காய வைக்க வேண்டும். பிறகு தான் இதை திரியாக உபயோக படுத்த வேண்டும். இந்த விளக்கை நாம் நம் வீட்டு ஹாலில் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

விளக்கேற்றுவதற்கு முன்பு இந்த விளக்கில் சிறிது அளவு வெண்கடுகையும் சிறிதளவு வால் மிளகையும் போட்டு ஏற்ற வேண்டும். இவ்வாறு நாம் தொடர்ந்து மூன்று நாட்கள் செய்ய வேண்டும். முதல் நாள் உபயோகப்படுத்திய திரியையும், எண்ணெயையும் மறுநாள் உபயோகப்படுத்த கூடாது. விளக்கை சுத்தம் செய்து பிறகு புதிதாக திரியையும் எண்ணெயும் போட்டு விளக்கேற்ற வேண்டும்.

இதையும் படிக்கலாமே: மூன்று விரலி மஞ்சள் உங்கள் கையில் இருந்தால் கையில் பணம் இல்லையே என்ற கவலையே இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம். திடீர் பணவரவை ஏற்படுத்தும் அதிசய பரிகாரம்.

இவ்வாறு நாம் நம் இல்லத்தில் செய்வதன் மூலம் நம் இல்லத்தில் இருக்கக்கூடிய கெட்ட சக்திகளின் தன்மைகள் படிப்படியாக குறைந்து நமக்கு நன்மைகள் நடைபெறும்.

- Advertisement -