துஷ்ட சக்திகளை தூசு போல விரட்டி அடிக்க, உங்களுடைய வீட்டில் இந்த 4 பொருளை கொண்டு தூபம் போட்டாலே போதும்.

dhupam
- Advertisement -

ஏவல், பில்லி, சூனியம், செய்வினை இதிலெல்லாம் சில பேருக்கு நம்பிக்கை இருக்கும். சில பேருக்கு நம்பிக்கை இருக்காது. வாழ்க்கையில் எதிர்பாராத கஷ்டங்கள் நம்மை பின் தொடர்ந்து வரும் போது, சில பேர் அந்த கஷ்டங்கள் எதனால் வருகிறது என்று அலசி ஆராய்ந்து பார்த்து, அதற்கான தீர்வினை தேடி கண்டுபிடித்து விடுவார்கள். சில பேர் நமக்கு இந்த கஷ்டங்கள் எல்லாம் விதியின் பயனால் தான் வருகின்றது. கெட்ட சக்தி எல்லாம் உலகத்தில் எதுவுமே இல்லை என்று அலட்சியமான போக்கில் செல்வார்கள். ஆனால் பின் விளைவுகள் பெரியதாக இருக்கும். சில பேர் இந்த எதிர்மறை ஆற்றலின் தாக்கத்தால் வாழ்க்கையே இழந்திருப்பார்கள். சில பேர் தங்களுடைய உயிரை கூட இழக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும்.

இப்படிப்பட்ட கெட்ட சக்திகளின் பாதிப்பு ஒருவருக்கு இருப்பதை முதலில் நாம் எப்படி தெரிந்து கொள்வது. நம்மால் இரவில் நிம்மதியாக தூங்க முடியாது. யாரோ நம்மை எதிர்பாராமல் அடிப்பதுபோல சிலருக்கு தோன்றும். சிலருக்கு யாரோ நம்மிடம் வந்து பேசுவது போல தோன்றும். சில பேருக்கு இரவு தூங்கும் போது யாரோ வந்து அழுத்துவது போல தோன்றும். நிம்மதியாக சாப்பிட முடியாது. நிம்மதியாக தூங்க முடியாது. நிம்மதியாக நம்முடைய வேலையை செய்ய முடியாது. ஏதோ ஒன்று நம்மை செயல்பட விடாமல் தடுக்கும். மன அழுத்தம் அதிகரிக்கும்.

- Advertisement -

சில பேருக்கு திடீர் திடீரென்று எதிர்பாராமல் ரத்த காயம் ஏற்படும். முகம் எல்லாம் பொலிவிழந்து பேயடித்தது போல காணப்படும். யாராவது நமக்கு நேரடியாகவே செய்வினை வைத்தால் தான் இப்படிப்பட்ட கஷ்டங்கள் எல்லாம் ஏற்படுமா என்று கேட்டால் நிச்சயம் கிடையாது. வீதியில் நடந்து செல்கின்றோம், யாரோ யாருக்கோ வைத்த செய்வினையை காலால் மிதித்து விட்டாலும் இப்படிப்பட்ட பாதிப்புகள் நமக்கு ஏற்படும். யாரோ யாருக்கோ வைத்த செய்வினையை நாம் தாண்டி விட்டால் கூட சில பேருக்கு பிரச்சனைகள் வந்து தொற்றிக் கொள்ளும்.

கழிப்பு என்று சொல்லுவார்கள் அல்லவா. கழிப்பை தாண்டி விட்டீர்கள் என்று சில ஜோதிடர்கள் குறிப்பிட்டுச் சொல்வார்கள். எதிர்பாராமல் நம்முடைய கெட்ட நேரம் இதுபோல ஏதோ ஒரு பிரச்சினையில் சிக்கி விட்டால் என்ன செய்வது. உங்களுக்கு நல்ல ஜோதிடர் அல்லது நல்ல மாந்திரீகர்கள் தெரிந்தால் அவர்களிடம் போய் இதற்கான தீர்வை கேட்டு பயன் பெறலாம்.

- Advertisement -

எங்களுக்கு யாருமே தெரியாது என்பவர்கள் பின் சொல்லக்கூடிய பரிகாரத்தை செய்து பலனடையுங்கள். நாட்டு மருந்து கடைக்குச் செல்லுங்கள் ஜடா மஞ்சள், சமித்து கட்டை, மருதாணி விதை, வில்வ பொடி இந்த நான்கு பொருட்களையும் வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு சிறிய மண் சட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சமித்துகுச்சிகளை போட்டுவிட்டு, ஒரு கற்பூரத்தை போட்டு நெருப்பு மூட்டி மேலே சொன்ன ஜடா மஞ்சள், மருதாணி விதை, வில்வ பொடி எல்லாவற்றையும் ஒவ்வொரு கைப்பிடி எடுத்து அந்த நெருப்பில் போட்டவுடன் நன்றாக புகை வரும்.

இந்தப் புகையை உங்கள் வீடு முழுவதும் காண்பிக்க வேண்டும். இந்தப் புகையை வீட்டின் போடும்போது யார் செய்வினையால் அதிகப்படியாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்களோ அவர்கள் வீட்டில் நிச்சயம் இருக்க வேண்டும். இந்த புகையை சுவாசித்தால் நம்முடைய உடம்பில் ஒட்டி இருக்கும் துஷ்ட சக்திகள் நம்மை விட்டு ஓடிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகையை ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 7 மணிக்கு மேல் உங்களுடைய வீட்டில் போடுவது நல்லது. நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் பரிகாரத்தை செய்து பலனடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -