வெண்கடுகை வீட்டில் இப்படி வைத்தால், வெளியில் இருந்து எந்த பிரச்சனையும் வீட்டுக்குள் நுழையாது. கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம், செய்வினை வரை நம் வீட்டுக்குள் வர பயப்படும்.

bairavar
- Advertisement -

சில வீடுகளில் ஒன்றன்பின் ஒன்றாக பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். ஒரு பிரச்சனையை சமாளித்து முடிப்பதற்குள், அடுத்த பிரச்சனை, அந்த பிரச்சனையை ஓய்வதற்குள் மற்றொரு பிரச்சனை, என்று நம்மை எப்போதும் பரபரப்பாகவே வைத்திருக்கும். அடுத்து என்ன நடக்குமோ என்ற பயம் நம் ஆழ்மனதில் வரும் அளவிற்கு பிரச்சனைகள் தீவிரமடையும். ஓயாத பிரச்சனை ஒரு மனிதனுக்கு இருந்தால் என்ன தான் செய்வது. இப்படிப்பட்ட பிரச்சனைகளுக்கு காரணம் அடுத்தவர்களுடைய கொடிய பார்வை கண்திருஷ்டியாக நம் மேல் விழுந்து இருக்கலாம். அப்படி இல்லையென்றால் எதிரிகளின் மூலம் ஏவி விடப்படக்கூடிய கெட்ட சக்திகள் அமானுஷ்யமான சில கெட்ட சக்திகள் நம் குடும்பத்தில் பிரச்சனையை உண்டு பண்ணிவிடும்.

இதை அனுபவரீதியாக உணர்ந்தவர்கள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள். சரி, உங்களுடைய வீட்டிலும் இப்படி தொடர் பிரச்சனைகள் தலைவிரித்து ஆடினால், என்ன செய்வது. பெரிய அளவில் பணம் காசு செலவு செய்ய முடியாது. நமக்கு நாமே ஏதாவது எளிமையான பரிகாரம் செய்து கொள்ள முடியுமா. நிச்சயம் முடியும். இதற்கு நமக்கு தேவையானது ஒரே ஒரு பொருள்தான். வெண்கடுக்கு. காவல் தெய்வமான பைரவரை நினைத்து இந்த எளிமையான ஆன்மீகம் சொல்லும் பரிகாரத்தை செய்யுங்கள் போதும். பிரச்சனைகள் எல்லாம் பட்டென உடைந்து நிம்மதி பிறக்கும்.

- Advertisement -

கண் திருஷ்டியை விரட்டும் வெண்கடுகு பரிகாரம்:
தேவையான அளவு வெண்கடுகை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டிற்கு வெளியே வீட்டை வட்டம் போட்டது போல, இந்த வெண்கடுகை தூவ முடியும் என்றால் துவலாம். மனதில் பைரவரை நினைத்து குல தெய்வத்தை நினைத்து, வெண்கடுகை கையில் எடுத்து அப்படியே குனிந்தபடி நிலத்தில் வீட்டை சுற்றி ஒரு வட்டம் போட்டு விடுங்கள். இப்படி செய்தால் அந்த பைரவர் காவல் தெய்வமாக வெண்கடுகு ரூபத்தில் நின்று உங்கள் வீட்டை பாதுகாப்பார். எல்லோராலும் வீட்டை சுற்றி இப்படி ஒரு வட்டம் போட முடியாது.

அதற்கு வசதி இல்லாதவர்கள் என்ன செய்வது. வீட்டிற்கு உள்ளேயே எட்டு திக்கிலும் இந்த வெண்கடுகை லேசாக தூவி விட வேண்டும். வீட்டின் மூளை முடுக்குகளில் அப்படியே தரையிலேயே இந்த வெண்கடுகை போடலாம். தவறு கிடையாது. மூளையில் அது பாட்டுக்கு இருந்து கொள்ளட்டும். வீட்டிற்கு உள்ளே வெண்கடுகை போட்டாலும் பைரவரை மனதார நினைத்து வெண்கடுகை தூவி விடுங்கள். இந்த பரிகாரத்தை குறிப்பாக செவ்வாய்க்கிழமை இரவு 9.00 மணிக்கு மேல் செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.00 மணிக்கு மேல் செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த செவ்வாய்க்கிழமை வெண்கடுகை இந்த வாரம் தூவிவிட்டால், அடுத்த செவ்வாய் கிழமை வரை வீட்டிற்குள்ளேயே அந்த வெண்கடுகு இருக்கலாம். வெண்கடுகு அப்படியே இருக்கட்டும். இல்லை உங்களுக்கு தரையில் அந்த வெண்கடுகு இருப்பது சரிப்பட்டு வரவில்லை என்றால், சின்ன சின்ன கிண்ணத்தில் திறந்தபடி வெங்கடகை போட்டு வீட்டின் ஆங்காங்கே மூளை முடுக்கில் வைத்து விடுங்கள். ஒரு வாரம் கழித்து அந்த வெண்கடுகை ஒரு கவரில் கொட்டி குப்பைத்தொட்டியில் போட்டு விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: வெந்தயத்தை இந்த இடத்தில் வைத்தால், கைநழுவி சென்ற பணம் கூட கையோடு வந்து சேரும்.

இந்த வெண்கடுகு இருக்கக்கூடிய இடத்தில் எதிர்மறை சக்தி தாங்காது. இது மட்டுமல்லாமல் செவ்வாய் வெள்ளி வீட்டில் பூஜை செய்யும் போது, சாம்பிராணி தூபத்தில் வெண்கடுகு போட்டு தூபம் போடுவது, வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியை விரட்டி அடித்து விடும். திடீரென்று தீர்க்க முடியாத பிரச்சினை வீட்டிற்குள் போகும்போது, இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் நிச்சயமாக பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்கு ஒரு வழியை அந்த இறைவன் உங்களுக்கு காண்பித்துக் கொடுப்பான். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -