கர்ம வினை தீர முருகன் வழிபாடு

murugan pray lady
- Advertisement -

ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்நாளில் அனுபவிக்க கூடிய இன்பம் துன்பம் அனைத்திற்கும் பூர்வ ஜென்மத்தின் பலனே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. பலர் வாழ்க்கையில் எல்லா நேரமும் பிரச்சினையிலே உழன்று கொண்டு இருப்பார்கள். அவர்களை சுற்றி நிம்மதி என்ற வார்த்தைக்கு கூட வழியில்லாமல் வாழ்வார்கள்.

இதற்கெல்லாம் கிரக அமைப்புகள் ஓரளவிற்கு காரணமாக இருந்தாலும், முன் ஜென்ம கர்ம வினை தான் அதிகப்படியான காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த கிரக அமைப்புகளும் கர்மாக்களும் நீங்கி நாம் நிம்மதியாக வாழ இறைவழிபாட்டை தவிர வேறு சிறந்த வழி கிடையாது.

- Advertisement -

அந்த வகையில் இந்த பிரச்சனைகள் தீர முருகப்பெருமானை வழிபடலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அந்த வழிபாட்டை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

கர்ம வினை தீர முருக பெருமான் வழிபாடு

இன்றளவும் நாம் பலரை சந்திக்கும் போது மனதில் தோன்றும் ஒரே எண்ணம் இவர்கள் மட்டும் நன்றாக இருக்கிறார்கள். நமக்கு மட்டும் ஏன் இப்படி பிரச்சனைகளாக வருகிறது என்று தான். இத்தனைக்கும் அவர்கள் ஆலயம் செல்ல மாட்டார்கள். எந்த நல்ல காரியங்களும் செய்ய மாட்டார்கள். அப்படி இருந்தும் அவர்கள் நன்றாக சுகபோகமாக வாழ்வார்கள்.

- Advertisement -

இதற்குக் காரணம் அவர்கள் முன் ஜென்ம புண்ணிய பலனே என்று சொல்லப்படுகிறது. அதே தான் ஒரு மனிதன் நல்ல எண்ணங்களுடன் இறை பக்தியுடன் வாழும் போதும் பலவிதமான அவமானங்களையும் துன்பங்களையும் பட்டுக் கொண்டே இருப்பார்கள். இன்னும் சிலரோ பிடிக்காத ஒரு வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

இன்னும் சிலர் செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள். இந்த தவறுக்கு எல்லாம் தான் காரணம் இல்லை என தெரிந்தும் அவர்களால் அதை மீறி வெளியில் வர முடியாமல் அதில் உணர்ந்து கொண்டிருப்பார்கள். இதற்கெல்லாம் கர்ம வினைகள் ஒரு புறம் காரணமாக இருந்தாலும் மற்றொரு புறம் கேது பகவானின் அனுகிரகம் கிடைக்காததும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

- Advertisement -

ஒரு மனிதன் தீர்க்க முடியாத கடன் பிரச்சனையால் துன்பப்படுவது இந்த இரண்டு காரணங்கள் தான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆக ஒருவன் தன் வாழ்நாளில் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக்கு கிரகங்களினால் வரக்கூடிய இந்த காரணமாக இருந்தாலும் சரி கர்மாவினால் ஏற்படக்கூடிய துன்பமாக இருந்தாலும் சரி இரண்டையும் போக்கக் கூடிய கண்கண்ட தெய்வமாக விளங்குபவர் இந்த கந்த கடவுள்.

இவரை வணங்கும் போது நம்முடைய இத்தனை துன்பங்களும் தூள் தூளாகும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இப்படியான துன்பத்தில் இருப்பவர்கள் மலைமீது இருக்கும் முருகனை வழிபாடு செய்ய வேண்டும். இந்த முருகனுக்கு தொடர்ந்து நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் போது கர்ம வினைகளும் கிரக கோளாறுகளும் குறைய தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.

அது மட்டும் இன்றி மலை மீது இருக்கும் குரங்குகளுக்கு வாழைப்பழங்களை வாங்கி தருவது நம்முடைய கர்மாக்களை பெரும் அளவு கிடைக்கும். அதே போல யானைகளுக்கு கரும்புகளை வாங்கி கொடுக்க வேண்டும். இதுவும் நம்முடைய கிரக கோளாறுகளை நீக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

கடன் தொல்லையால் தீராத துன்பத்தில் அவதிப்படுபவர்கள் பழனி மலை முருகனை தரிசித்து அவர்களும் இது போல தானங்களை செய்ய வேண்டும்.இந்த வழிபாட்டை ஒரு முறை இரண்டு முறை செய்து விட்டு நம்முடைய பிரச்சனைகள் தீர்ந்து விடும் என்று நினைத்தால் அது சரி ஆகாது. இதை நாம் தொடர்ந்து செய்து கொண்டு இருக்க வேண்டும்.

கடன் கர்மா தீர்ந்து உங்களுடைய வாழ்க்கையில் வினைகள் மாற்றங்கள் உருவாகும் வரை இந்த வழிபாட்டையும் தானத்தையும் செய்து வாருங்கள். நாம் வாழும் வாழ்க்கையில் முடிந்த வரையில் நல்லது செய்ய வேண்டும் அப்படி செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை தீமைகளை செய்யாமல் வாழ்ந்தாலே இப்பிறவியில் மட்டுமல்ல எப் பிறவியிலும் எந்த துன்பமும் இன்றி நிம்மதியாக வாழலாம்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் துளசி செடி வைக்கும் திசை

இதுவரை உள்ள கர்ம வினைகள் தீர இந்த இறை வழிபாட்டுடன் இனிவரும் காலங்களில் நல்ல முறையில் வாழ முயலலாம் என்ற இந்த கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -