நீங்கள் எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றியடைந்து புகழனின் உச்சிக்கு செல்ல எலுமிச்சைத்தில் இதை எழுதி பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

lemon pooja room
- Advertisement -

ஒரு மனிதன் நல்ல முறையில் வாழ்கிறான் என்பது அவன் சம்பாதிக்கும் பணம், பெயர், அந்தஸ்து இவை அனைத்தையும் விட அவர் எடுத்த காரியத்தை சிறப்பாக முடிந்து வெற்றியாளனாக திகழ்வது தான் பெருமை சேர்க்கும் விஷயமாக கருதப்படுகிறது. அப்படி ஒரு காரியத்தில் வெற்றி பெற வேண்டுமெனில் அதற்கான முயற்சி தன்னம்பிக்கை அனைத்தும் வேண்டும். இவற்றுடன் சேர்ந்து நம்முடைய கிரக நிலைகளும் சூழ்நிலைகளும் நமக்கு சாதகமாக அமைய வேண்டும். அப்படியான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கான ஒரு எளிய பரிகார முறையை தான் இப்போது இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நம்முடைய கிரக நிலைகளின் படி ஜாதகம் அதற்கான நேரம் நம்முடைய தசா புத்தி, கர்மபலன் இப்படி அனைத்தும் கலந்த கலவை தான் நம்மை ஒவ்வொரு கட்டத்திற்காக நகர்த்திக் கொண்டு செல்கிறது. அவற்றில் ஏதேனும் ஒன்று கொஞ்சம் சரியில்லாத போனாலும் நாம் எடுக்கும் காரியம் எல்லாமே தடங்கலாக தான் முடியும். அது மட்டும் இன்றி நம்மால் எந்த ஒரு காரியத்தையும் முழு சிரத்தையோடு செய்யவே முடியாது. இந்த ஒரு பரிகாரம் அந்தப் பிரச்சனைகளை அறவே தீர்க்கும் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

வாழ்க்கையில் வெற்றி அடைய செய்ய வேண்டியது
இந்த பரிகாரத்தை செய்ய நமக்கு ஒரே ஒரு எலுமிச்சை பழம் மட்டும் தான் தேவை. அந்த எலுமிச்சை பழம் நல்ல நிலையில் இருக்க வேண்டும். மேலே கரும்புள்ளி இல்லாமலும் வாடி வதங்கிய பழமாகவோ இருக்கக் கூடாது. இதை மட்டும் கவனமாக பார்த்து வாங்கிக் கொள்ளுங்கள். இந்த எலுமிச்சை பழத்தின் மீது (9 27) ஒன்பது என்று எண்ணெய் எழுதி கொஞ்சம் இடைவெளி விட்ட பிறகு 27 என்ற எண்ணெய் எழுத வேண்டும்.

இதை எழுதிய பிறகு நம்முடைய பூஜை அறையில் வைத்து தினமும் பூஜை செய்யும் போது இந்த எலுமிச்சை பழத்திற்கும் தீபராதனை காட்ட வேண்டும். ஒன்பது என்பது கிரகங்களையும் 27 என்பது நட்சத்திரங்களையும் குறிக்கும். அதே போல் எலுமிச்சை பழத்தை மட்டும் தான் ராஜ கனி, தெய்வக் கனி என்ற சிறப்பு பெயர்களால் சொல்வார்கள். அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்தப் பழத்தில் இந்த எண்ணையும் எழுதி வைக்கும் போது நம்முடைய கிரகம் சம்பந்தமான அனைத்து தோஷங்களும் விலகும்.

- Advertisement -

இந்த எலுமிச்சை பழம் கொஞ்சம் வாட ஆரம்பிக்கும் போதே அதை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விட்டு வேறு ஒரு எலுமிச்சை பழத்தை மாற்றி இதே போல எழுதி வைத்து விடுங்கள். இந்த பரிகாரத்தை அமாவாசை அன்று தொடங்கலாம் அல்லது அமாவாசை தொடர்ந்து வரும் வளர்பிறை நாட்களில் செய்யலாம் வெள்ளி செவ்வாய் எல்லாம் இதற்கு மிக உகந்த நாட்களாக சொல்லப்படுகிறது இவற்றில் உங்களுக்கு எந்த நாள் வசதி படுகிறதோ அதில் இது போல செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: மலை போல குவிந்த கடன் பிரச்சனை கூட மடுப்போல குறைந்து காணாமல் போக மலையை தூக்கி சுமக்கும் ஆஞ்சநேயர் படத்தை வைத்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

இதன் பிறகு உங்கள் புத்தி தெளிவடைந்து நீங்கள் எடுக்கும் எந்த ஒரு காரியமும் சிரத்தையுடன் செய்ய முடியும் என்றும், உங்களுக்கு இருக்கும் தடங்கல்கள் நேரம் சரியில்லாதால் ஏற்படும் பிரச்சனைகள் என் கண் திருஷ்டி கெட்ட சக்திகளால் ஏற்படும் தீமைகள் கூட விலகும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்யலாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -