மலை போல குவிந்த கடன் பிரச்சனை கூட மடுப்போல குறைந்து காணாமல் போக மலையை தூக்கி சுமக்கும் ஆஞ்சநேயர் படத்தை வைத்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

hanuman cash
- Advertisement -

இந்த கடன் பிரச்சனை தீர நாம் என்னென்னவோ வழிபாடுகள் பரிகாரங்கள் என தெரிந்ததை எல்லாம் செய்து கொண்டே தான் இருக்கிறோம். ஆனாலும் ஒரு சிலருக்கு ஒரு சில வழிபாடுகள் பலனைத் தரும். அதே போல தான் பரிகாரங்களும், ஒரு சில பரிகாரங்கள் சிலருக்கு பலனை தரும் சிலருக்கு தராது. இது அவரவர் கர்மாவை பொறுத்து அமையும். ஆனால் கடன் பிரச்சனை தீர இந்த ஆஞ்சநேயர் பரிகாரம் நிச்சயம் அனைவருக்கும் நல்ல பலனை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. அப்படியான ஒரு பரிகாரத்தை பற்றி ஆன்மீகம் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கடன் தீர பரிகாரம்
இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையை சுமந்து செல்வது போல் உள்ள ஒரு படம் வேண்டும். உங்கள் வீட்டில் இருந்தால் பயன்படுத்திக் கொள்ளுங்கள் இல்லை என்றால் புதிதாக வாங்கிக் கொள்ளுங்கள். அடுத்ததாக 12 வெற்றிலை ஐந்து முழு கிராம்பு உடையாத நிலையில் உள்ளதாக பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் இரண்டு அகல் விளக்கு, பசு நெய், பஞ்சு திரி போன்றவற்றை எல்லாம் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை தொடங்க நீங்கள் நாள் கிழமை என்று எதையும் பார்க்க வேண்டாம். முடிந்தால் தினமும் கூட இந்த பரிகாரத்தை நீங்கள் செய்து வரலாம் .அந்த அளவிற்கு ஒரு எளிமையான பரிகாரம் தான். இந்த பரிகாரத்தை செய்வதற்கு முதலில் ஆஞ்சநேயர் படத்துக்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து கொள்ளுங்கள். அடுத்ததாக இந்த 11 வெற்றிலையும் எடுத்து மாலையாக தொடுக்க வேண்டும். ஒவ்வொரு இலைகளிலும் ஸ்ரீராமா என்ற ராம நாமத்தை வெள்ளை நிற மார்க்ரால் எழுதி விடுங்கள். இப்படி எழுதிய வெற்றிலை மாலையாக தொடுத்து ஆஞ்சநேயர் படத்திற்கு போட்டு விடுங்கள்.

அதே போல் ஆஞ்சநேயர் படத்திற்கு கீழே ஒரு வெற்றிலையை வைத்து விட்டு அதற்கு முன்பாக இரண்டு அகல் விளக்கை வைத்து நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். இப்போது இந்த கிராம்பை உங்கள் கைகளில் எடுத்து வைத்துக் கொண்டு ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரத்தை சொல்லியபடி ஒவ்வொரு கிராம்பாக வைக்க வேண்டும்.

- Advertisement -

ஸ்ரீ ஆஞ்சனேயர் காயத்ரி மந்திரம்
ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ ஹனுமத் ப்ரசோதயத்

இந்த ஆஞ்சநேயர் மந்திரத்தை நீங்கள் தொடர்ந்து சொல்ல சொல்ல உங்களுடைய கடன் பிரச்சனைகள் குறைய ஆரம்பிக்கும் மலையளவு நீங்கள் பிரச்சினையில் இருந்தாலும் கூட அது காணாமல் போகக் கூடிய வாய்ப்புகள் மிக விரைவில் உங்களைத் தேடி வரும். ஆகையால் கடனை அடைக்க இனி எந்த ஒரு முயற்சியும் நம்பிக்கையுடன் எடுங்கள் நிச்சயமாக பலன் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: தினமும் குளிக்கும் நீரில் இந்த இரண்டு பொருட்களை கலந்து குளித்தால், நமக்கு ஏற்பட்டிருக்கும் பணத்தடைகள் அனைத்தும் விலகி, கையில் பணம் தாராளமாக புழங்க ஆரம்பிக்கும்.

இது வரை எந்த பரிகாரமும் செய்து பலன் இல்லையே என்று வருந்துபவர்கள் கூட இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து பாருங்கள் நிச்சயம் கடனிலிருந்து மீள்வதற்கான வழியை ஆஞ்சநேயர் காட்டுவார். இந்த பதிவில் உள்ள பரிகார முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையலாம் என்ற கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -