கோடீஸ்வர யோகம் பெற சஷ்டி விரத பரிகாரம்

Murugan
- Advertisement -

முருகா என்று அழைத்தவுடன் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து அருள் புரிபவர் இந்த கந்த கடவுள். அப்படியான இவரை சஷ்டி விரத காலத்தில் நம்பிக்கையுடன் வழிபட்டால் நம் வாழ்வில் உள்ள அனைத்து துன்பங்கள் நீங்கி நம்மை ஒரு ராஜ வாழ்க்கை வாழ வைப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விரதங்களிலே கடுமையான விரதம் எனில் அது சஷ்டி விரதம்.

இந்த ஆறு நாட்களும் உண்ணாமல் விரதம் இருந்து சூரசம்காரம் முடிந்து முருகனின் திருக்கல்யாண வைபவத்தை பார்த்த பின்பு விரதத்தை முடிப்பார்கள். இந்த விரதத்தை ஏற்று கந்தனை வழிபடுபவர்கள் என்ன கேட்டாலும் கந்தன் நிச்சயம் அருளுவார் என்பது முன்னோர் வாக்கு. அப்படி விரதம் இருக்கக் கூடிய இந்த காலக்கட்டத்தில் நாம் செய்யக் கூடிய ஒரு செயலால் நம்முடைய வாழ்வில் பெரிய மாற்றத்தை பெறலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இந்த பரிகார முறையை விரதம் இருப்பவர்கள் இல்லாதவர்கள் ஆண் பெண் என அனைவருமே செய்யலாம். அத்தகைய அற்புதமான யோகத்தை தரக்கூடிய இந்த பரிகாரத்தை எப்படி செய்வது எங்கு செய்வது என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கோடீஸ்வர யோகம் பெற

இந்த பரிகாரத்தை ஆலயத்தில் சென்று தான் செய்ய வேண்டும். அந்த ஆலயமானது நீங்கள் படி ஏறி சென்று வணங்கும்படி இருக்க வேண்டும். அதாவது ஆலயம் குன்றின் மேல் இருக்க வேண்டும் அல்லது படிகள் ஏறி முருகனை தரிசிப்பது போல் அமைந்த ஆலயமாக இருக்க வேண்டும். இதை மட்டும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அந்த ஆலயத்திற்கு நீங்கள் மலர் மாலையும் தேனும் வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். அப்படி வாங்கக் கூடிய மலர்களில் கதம்பமலர், காந்தாள் மலர், முல்லை மலர், சாமந்தி, ரோஜா இந்த ஐந்து மலர்களில் உங்களுக்கு எந்த மலர்கள் கிடைக்கிறதோ அதை வாங்கி உங்கள் கைகளாலே அதை மாலையாக தொடுக்க வேண்டும். அந்த மாலையை முருகப்பெருமானுக்கு சாற்றி வணங்க வேண்டும்.

அப்படி வணங்கக் கூடிய வேளையிலே கோவிலுக்கு அரை லிட்டர் தேன் வாங்கி கொடுக்க வேண்டும். இந்த தேனால் முருகனை அபிஷேகம் செய்த பிறகு நீங்கள் தொடுத்த மாலையை அவருக்கு சாற்றி வழிபாடு செய்த பிறகு முருகனுடைய ஆலயத்தை ஒரே ஒரு முறை மட்டும் வளம் வர வேண்டும். அதன் பிறகு ஆலயத்தில் சிறிது நேரம் அமர்ந்து இருக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நீண்ட நாள் நோய்கள் நீங்க சுற்றி போடும் முறை

அந்த நேரத்தில் ஓம் சரவண பவ என்ற இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை 54 முறை ஜெபிக்க வேண்டும். இப்படி சொல்லும் போது உங்களுக்கான குறைகளையும் முருகனிடம் மனதார சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள். இந்த வழிபாடை செய்த சில தினங்களுக்குள்ளாகவே நல்ல அதிர்ஷ்ட யோகங்கள், பணம் பல வழியில் வரக்கூடிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த பரிகார முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்யலாம்.

- Advertisement -