கொடுத்த பணம் திரும்ப கிடைக்க தீப வழிபாடு.

deepam
- Advertisement -

மனிதர்கள் அனைவரையும் ஆட்டிப்படைக்க கூடிய ஒரே ஒரு பொருள்தான் பணம். இந்த பணம் யாரிடம் அதிகமாக இருக்கிறதோ அவர்களுக்கு அனைத்து விதமான சுகபோகங்களும் கிடைக்கும். யாரிடம் இல்லையோ அவர்கள் பல கஷ்டங்களை அனுபவிப்பார்கள். அப்படி கஷ்டங்களை அனுபவிக்கும் பொழுது தெரிந்த நபர்களிடம் இருந்து பணங்களை கடனாக வாங்குவார்கள். பிறரின் கஷ்டத்தை தாங்க முடியாமல் சிலரோ தாங்கள் சேமித்து வைத்திருக்கும் பணத்தை கொடுத்து உதவி செய்ய வேண்டும்.

அப்படி உதவி செய்தவர்களுக்கு திரும்ப அந்த பணத்தை தர வேண்டும் என்ற எண்ணம் துளி கூட இல்லாமல் தங்களின் பிரச்சினையிலேயே கவனம் செலுத்தி பணத்தை ஏமாற்றுபவர்கள் பலர் இருக்கிறார்கள். ஆபத்திற்காக உதவி செய்து தங்கள் பணத்தை இழந்து வருத்தப்பட்டு கொண்டு இருப்பவர்கள் அந்த பணத்தை திரும்ப பெறுவதற்காக பல வழிபாடுகளையும் பரிகாரங்களையும் செய்வார்கள். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் கொடுத்த பணத்தை திரும்பப் பெறுவதற்கு எந்த தீப வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

நம்முடைய கடன் பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும் அதை தீர்ப்பதற்கு நமக்கு உறுதுணையாக இருந்து துணை புரிபவர் தான் காலபைரவர். காலத்தினால் நாம் செய்த உதவியை திரும்ப நாம் பெறுவதற்கு உதவக்கூடியவரும் காலபைரவர் தான். அப்படிப்பட்ட காலபைரவருக்கு உகந்த நாளாக தேய்பிறை அஷ்டமி விளங்குகிறது. இந்த தேய்பிறை அஷ்டமி அன்று மாலையிலோ அல்லது ராகு காலத்திலோ கால பைரவருக்கு நாம் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

ஒரு வெள்ளை நிற துணியை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 66 மிளகுகளை சரியாக எண்ணி ஒரு மூட்டையாக கட்டி, நல்லெண்ணையில் ஊற வைக்க வேண்டும். பிறகு அதை கோவிலுக்கு எடுத்துச் சென்று கால பைரவர் சன்னதியில் நல்லெண்ணெய் ஊற்றி அந்த மூட்டையை வைத்து தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அவ்வாறு வழிப்படும் பொழுது கால பைரவருக்கு செவ்வரளி பூக்களை வாங்கி தர வேண்டும்.

- Advertisement -

பைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனையை செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி அன்றும் நாம் தொடர்ந்து 66 மிளகுகளை வைத்து தீபம் ஏற்றி வழிபட்டு வந்தோம் என்றால் நமக்கு வரவேண்டிய பணத்தை நம்மை தேடி வர வைக்க கால பைரவர் அருள் புரிவார். நமக்கு கடன் பிரச்சினை அதிகமாக இருக்கிறது அதை தீர்க்க வேண்டும் என்று நினைத்தாலும் இதே பரிகாரத்தை நாம் செய்யலாம்.

இதையும் படிக்களாமே: குழந்தை பாக்கியம் கிடைக்காமல் வருத்தப்படுபவர்கள் பச்சரிசியை வைத்து இப்படி பரிகாரம் செய்து பாருங்கள்.

கடன் தொடர்பாக எந்த பிரச்சனையாக இருந்தாலும் அந்த பிரச்சினையை சரி செய்வதற்கு கால பைரவருக்கு இந்த தீபத்தை ஏற்றி நாம் வழிபடலாம். விரைவில் பிரச்சனை தீர்ந்துவிடும்.

- Advertisement -