குழந்தை பாக்கியம் கிடைக்காமல் வருத்தப்படுபவர்கள் பச்சரிசியை வைத்து இப்படி பரிகாரம் செய்து பாருங்கள்.

pacharisi pariharam
- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் பல முக்கியமான நிகழ்வுகள் நடைபெறும். அந்த நிகழ்வுகள் பல தடைகளை தாண்டி நிகழக்கூடிய நிகழ்வாக இருக்கும் பொழுது அதனால் பல அவமானங்களையும் வருத்தங்களையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அப்படிப்பட்ட நிகழ்வுகளில் மிகவும் முக்கியமான நிகழ்வாக கருதப்படுவது தான் குழந்தை பேறு. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் குழந்தை பேறை தடை செய்யும் தோஷங்களை நீக்க பச்சரிசியை வைத்து எப்படி பரிகாரம் செய்ய வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

திருமணம் ஆன தம்பதிகளை பார்த்து விசேஷம் இருக்கிறதா என்று கேட்கும் பொழுது விசேஷம் இல்லாத தம்பதிகள் மிகவும் மன வருத்தப்படுவார்கள். சிலர் வேண்டுமென்றே குழந்தை பேறை தள்ளிப்போடுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இது ஒரு பெரிய விஷயமாக தெரியாது. ஆனால் குழந்தை செல்வத்திற்காக ஏங்கி நிற்கும் பலருக்கும் இந்த கேள்வி மிகவும் மன வருத்தத்தை ஏற்படுத்தும்.

- Advertisement -

குழந்தை பாக்கியம் தள்ளிப் போவதற்கு முன் ஜென்ம பாவங்கள் காரணமாக இருக்கலாம். அதுமட்டுமல்லாமல் ஜாதகத்தில் யாருடைய தோஷம் இருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். முறையாக மருத்துவ பரிசோதனையும் மேற்கொண்டு ஜாதகத்தையும் பார்த்து அதற்கேற்ற பரிகாரத்தை செய்யும் பொழுது விரைவிலேயே குழந்தை பேறு கிடைக்கும்.

ஜாதகத்தை பொருத்தவரை ராகு கேது, குருபகவான் மற்றும் சனிபகவானின் தோஷங்களால் குழந்தை பேறு தள்ளி போகும். எந்த கிரகத்தால் தோஷம் ஏற்பட்டிருக்கிறதோ அந்த கிரகத்துக்குரிய நாளில் பரிகாரம் செய்தோம் என்றால் அந்த தோஷம் விரைவிலேயே நிவர்த்தி ஆகும். நம் வீட்டில் இருக்கக்கூடிய பச்சரிசியை மட்டுமே வைத்துக் கொண்டு இந்த பரிகாரத்தை நாம் செய்து முடிக்கலாம். ராகு கேது தோஷம் இருந்தால் தம்பதிகள் செவ்வாய்க்கிழமை அன்று தங்கள் கைகளில் சிறிது பச்சரிசியை எடுத்துக்கொண்டு சூரிய உதயத்தின் பொழுது சூரியனை பார்த்து வழிபட வேண்டும். அவ்வாறு வழிபடும் பொழுது “எங்களுடைய பாவங்கள் எதுவாக இருந்தாலும் அதை நீக்கி எங்களுக்கு குழந்தை செல்வத்தை அருள வேண்டும்” என்று மனதார வேண்டிக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

அப்படியே அரச மரத்தடியில் இருக்கும் விநாயகரை சென்று வழிபட வேண்டும். அப்பொழுதும் அந்த அரிசியை தங்கள் கைகளிலேயே வைத்துக் கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். விநாயகரிடமும் தங்களுடைய கோரிக்கைகளை வைத்துவிட்டு ஒன்பது முறை விநாயகரை வலம் வர வேண்டும். ஒன்பதாவது முறை வலம் வரும் பொழுது தங்கள் கைகளில் இருக்கும் பச்சரிசியை விநாயகரை சுற்றி ஒரு வட்டமாக போட வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் எறும்புகள் அந்த பச்சரிசியை தங்கள் உணவாக எடுத்துக் கொண்டு அதை சேமித்து வைத்து உண்ணும் பொழுது நம்முடைய தோஷங்களும் பாவங்களும் நீங்க பெற்று குழந்தை செல்வம் என்பது விரைவிலேயே கிடைக்கும். குரு பகவானால் தோஷம் ஏற்பட்டால் வியாழக்கிழமையும், சனி பகவானால் தோஷம் ஏற்பட்டிருந்தால் சனிக்கிழமையும் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். எந்த கிரகங்களால் தோஷம் ஏற்பட்டது என்று தெரியவில்லை என்பவர்கள் செவ்வாய்க்கிழமையும், வெள்ளிக்கிழமையும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: திருமண தடை நீங்குவதற்கு நவதானியத்தை வைத்து இந்த முறையில் பரிகாரம் செய்து பாருங்கள். விரைவிலேயே திருமணம் கைகூடும்.

கணவன் மனைவி இருவரும் ஒன்று சேர்ந்து இந்த பரிகாரத்தை செய்தால் தான் அதன் முழுமையான பலனையும் அடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -