கொடுத்த பணம் திரும்ப வர பரிகாரம்

money return
- Advertisement -

நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பலரும் தங்களுடைய உழைப்பிலிருந்து சிறுக சிறுக சேமித்து வைத்து ஒரு தொகையை சேர்த்து வைத்திருப்பார்கள். அந்த தொகையை நம்பிக்கைக்குரியவர்களாக இருப்பவர்கள் கேட்கும் பொழுது அதை கொடுத்து உதவி புரிவார்கள். அப்படி உதவி செய்வதற்காக கொடுத்த பணத்தை தங்களால் திரும்ப வாங்க முடியாத சூழ்நிலையும் ஏற்படுவதுண்டு.

இது மட்டுமல்லாமல் வீட்டில் பணத்தை சேர்த்து வைத்தால் செலவாகி விடுமோ என்ற எண்ணத்தில் நம்பிக்கைக்குரியவர்களிடம் யாருக்கும் தெரியாமல் கொடுத்து வைத்தும் ஏமாந்து போறவர்கள் பலர் இருக்கிறார்கள். இப்படி கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த பணத்தை பிறரிடம் நம்பிக் கொடுத்து திரும்பக் கிடைக்கவில்லை என்று வருத்தப்படுபவர்கள் புதன்கிழமை தோறும் மகாலட்சுமியை நினைத்து செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

வட்டிக்காக கடன் கொடுத்து அந்த வட்டியை வாங்கி கொடுத்த அசல் பணத்தையும் திரும்ப வாங்கக்கூடிய தன்மை பலருக்கும் இருக்கிறது. அதே சமயம் வட்டிக்காக இல்லாமல் பழகிய பழக்கத்திற்காகவும் நம்பிக்கையின் பெயரில் எந்த வித ஆதாரமும் இன்றி பலரும் பலருக்கு பணங்களை கொடுத்து இருப்பார்கள். அதை திரும்பி கேட்கும் பொழுது வாங்கியவர் திருப்பி தராத சூழ்நிலையில் யாரிடம் போய் முறையிடுவது என்று தெரியாமல் வருத்தப்படுவார்கள். அப்படிப்பட்டவர்கள் செய்யக்கூடிய எளிமையான பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.

இப்படி ஏமாற்றப்பட்டோம் என்று தெரிந்த பிறகு அவர்களை சபிக்காமல் செவ்வாய்க்கிழமை தோறும் அருகில் இருக்கும் கால பைரவர் சன்னதிக்கு சென்று அவருக்கு இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து என்னிடம் பணம் வாங்கியவர் விரைவிலேயே எனக்கு பணத்தை திரும்பத் தர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். இப்படி வேண்டிக் கொள்வதன் மூலம் அவர் பணத்தை ஏமாற்ற வேண்டும் என்று நினைத்தால் கூட காலபைரவரின் அருளால் அவர் மனம் மாறி நம்மிடம் வந்து பணத்தை திரும்பி தந்து விடுவார். இதை தவிர்த்து விட்டு அவருக்கு நாம் சாபம் கொடுப்பதன் மூலம் நம்முடைய பணமானது நம்மிடம் திரும்ப வருவதற்கு வாய்ப்புகளே இல்லாமல் போய்விடும்.

- Advertisement -

இப்படி நாம் செவ்வாய்க்கிழமை காலபைரவரை வழிபட்டுவிட்டு புதன்கிழமை அன்று காலையில் எழுந்து வாசல் தெளிக்கும் பொழுது வாசல் தெளிக்கும் தண்ணீரில் ஒரு கைப்பிடி அளவு கல் உப்பு, ஒரு ஸ்பூன் அளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கரைத்து வாசலில் தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளிக்கும்பொழுது மகாலட்சுமி தாயே என் வீட்டிற்கு வர வேண்டும். நான் கொடுத்த பணம் திரும்ப வர வேண்டும் என்று மகாலட்சுமி தாயாரை மனதார வழிபட்டுக் கொண்டே இந்த தண்ணீரை வாசலில் தெளித்து கோலம் போட வேண்டும்.

ஒருவருடைய வீட்டிற்குள் மகாலட்சுமி தாயார் வந்துவிட்டால் கண்டிப்பான முறையில் அவர்களுடைய கஷ்டங்கள் எல்லாமே குறைய ஆரம்பிக்கும். இந்த உப்பு, மஞ்சள் தண்ணீரும் மகாலட்சுமி தாயாரை வீட்டிற்குள் அழைக்கக்கூடிய ஒரு முக்கியமான பொருளாக கருதப்படுகிறது. மேலும் வீட்டிற்குள் மகாலட்சுமியின் சகோதரி இருந்தாலும் இந்த தண்ணீரை தெளிப்பதன் மூலம் அவர்கள் வெளியேறி விடுவார்கள் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: தீராத பிரச்சனையை தீர்த்து வைக்கும் சப்பாத்திக்கள்ளி

மிகவும் எளிமையான இந்த இரண்டு வழிமுறைகளையும் நாம் பின்பற்றும் பொழுது கண்டிப்பான முறையில் நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் நம்மை வந்து சேரும்.

- Advertisement -