கொடுத்த பணம் திரும்ப கிடைக்க தீப பரிகாரம்

varahi valipadu
- Advertisement -

கடன் அன்பை முறிக்கும் என்று கூறி கேள்விப்பட்டிருக்கிறோம். அது முற்றிலும் உண்மையான ஒரு வாசகம் தான். பலரும் தங்களின் வாழ்க்கையில் கண்ட அனுபவமாக ஒரு வார்த்தை. நெருங்கிய நண்பர் தன்னுடைய கஷ்டத்திற்காக பணத்தைக் கேட்கிறார் என்று கொடுத்தால் திரும்ப நம்மால் கேட்க முடியாமல் சங்கடப்படுவோம். அவர்கள் சொன்ன நேரத்தில் அவர்களால் கொடுக்க இயலாமல் போகும்பொழுது அதனால் மன வருத்தம் ஏற்படுகிறது. அந்த உறவே முடிந்தது முடிந்துவிடும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் கொடுத்த பணத்தை திரும்பப் பெறுவதற்கு வராகி அம்மனை நினைத்து எப்படி தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்று தான் பார்க்க போகிறோம்.

சப்த கன்னிகளில் ஒருவராக திகழக்கூடியவர் தான் வாராகி தாயார். இவரை பஞ்சமி திதிகளில் மனதார வழிபடுபவர்களின் வாழ்க்கையை புரட்டிப் போடும் அளவிற்கு சக்தி வாய்ந்த தெய்வமாக இருக்கிறார். எதிரிகளின் தொல்லை, கடன் பிரச்சனை, வாழ்க்கையில் பிரச்சனை என்று கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் அனைத்து விஷயங்களையும் நிவர்த்தி செய்வதற்குரிய அற்புதமான தெய்வம் தெய்வமாக வாராகி அம்மன் திகழ்கிறார். அப்படிப்பட்ட அம்மனிடம் கொடுத்த பணத்தை திரும்ப பெறுவதற்கு எப்படி வழிபாடு செய்வது என்று தான் பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை சனிக்கிழமை அன்றைக்கு செய்ய வேண்டும். அதுவும் இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் அதாவது சனி ஹோரையில் செய்ய வேண்டும். வீட்டில் வாராகி அம்மன் படம் இருந்தால் படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் இட்டு வாராகி அம்மனுக்கு பூக்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். இல்லை என்றாலும் பரவாயில்லை. புதிதாக ஒரு அகல் விளக்கு ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். இந்த விளக்கை இந்த தீபத்தை ஏற்றுவதற்கு மட்டும் பயன்படுத்திக் கொள்வது நன்மையை தரும்.

பிறகு கரு நீலத்துணியை வாங்க வேண்டும். இந்த துணியை சதுர வடிவில் நறுக்கிக் கொண்டு அதில் வெண்கடுகை போட்டு கருநீல நூலால் கட்டி மூட்டையாக தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி இந்த மூட்டையை போட்டு வாராகி அம்மனை நினைத்து தீபம் ஏற்ற வேண்டும். பிறகு இந்த தீபத்திற்கு முன்பாக அமர்ந்து யாரிடமிருந்து பணம் வரவேண்டுமோ அவர்களை நினைத்து அவர்கள் விரைவிலேயே பணத்தை தந்து விட வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்படி சனிக்கிழமை தோறும் இந்த தீபத்தை ஏற்றி வாராகி தாயாரை நாம் வழிபட்டால் கண்டிப்பான முறையில் வாராகி தாயாரின் அருளால் கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும் தர மாட்டேன் என்று பிரச்சனை செய்தவர்கள் கூட சுமூகமாக வந்து பணத்தை திரும்ப தருவார்கள்.

இதையும் படிக்கலாமே: குழந்தைகள் எதிர்காலம் சிறப்பாக இருக்க வழிபாடு

எந்த பிரச்சினையாக இருந்தாலும் முழு மனதுடன் நம்பிக்கை வைத்து வாராகி தாயாரை வழிபடும் பொழுது அந்த பிரச்சினை கண்டிப்பாக முறையில் நம்மை விட்டு விலகும்  என்பது உறுதி.

- Advertisement -