கொடுத்த பணம் திரும்ப கிடைக்க கிராம்பு பரிகாரம்

kirambhu panam
- Advertisement -

பணத்தை சம்பாதிப்பது எவ்வளவு கஷ்டமோ அதைவிட கஷ்டம். சம்பாதித்த பணத்தை பத்திரமாக பாதுகாப்பது ஏனில் நம்மிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது என்று தெரிந்தாலே நம்மை சுற்றி உள்ளவர்கள் ஏதோ ஒரு காரணத்தை சொல்லி நம்மிடம் பணத்தை வாங்கி விடுவார்கள். அது கடனாகவும் இருக்கலாம் கைமாற்றாகவும் இருக்கலாம். ஆனால் பணத்தை வாங்கிய பிறகு அவர்களிடம் இருந்து அந்த பணத்தை நாம் வாங்க பெரும் பாடுபட வேண்டியது இருக்கும்.

பணத்தை வாங்கக் கூடிய எல்லோருமே இப்படித்தான் ஏமாற்றுகிறார்கள் என்று சொல்வதற்கில்லை. ஆனால் ஒரு சிலர் அப்படித் தான் செய்கிறார்கள். அவர்களின் சூழ்நிலை கருதி இரக்கப்பட்டு பணத்தை கொடுத்து விட்டு திரும்ப அவர்களிடமிருந்து பணத்தை வாங்க துன்பப்படும் எத்தனையோ பேரை நாம் பார்க்க தான் செய்கிறோம்.

- Advertisement -

அப்படி கொடுத்து ஏமாந்த பணத்தை திரும்ப பெற இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதெல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.

கொடுத்த பணத்தை திரும்ப பெற பரிகாரம்

பணத்தை எவ்வளவு பாடுபட்டு சம்பாதிக்கிறோமோ அதைவிட அதிக அக்கறையுடன் அதை பாதுகாக்கவேண்டும். வெறும் இரக்கப்பட்டு மட்டும் பணத்தை கொடுத்து விட்டு பிறகு பணம் வரவில்லை என்று புலம்புவதில் எந்த பலனும் கிடையாது. சரி எப்படியோ பணத்தைக் கொடுத்து விட்டீர்கள் இப்போது அதை திரும்ப பெற என்ன செய்ய வேண்டும்என்று பார்க்கலாம்

- Advertisement -

இந்த பரிகாரத்தை அமாவாசை அல்லது பௌர்ணமி தினங்களில் செய்ய வேண்டும். இதற்கு 11 கிராம்பு எடுத்துக் கொள்ளுங்கள். கிராம்பு கொஞ்சம் கூட உடைந்து சேதமாகி இருக்கக் கூடாது. நல்ல நிலையில் உள்ளதாக பார்த்து 11 கிராம்பு எடுத்துக் கொள்ளுங்கள். இதே பரிகாரத்தை 24 கிராம்பு வைத்தும் செய்யலாம் அது உங்களுடைய விருப்பம்.

இப்போது ஒரு அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஐந்து கற்பூரத்தை போடுங்கள். 11 கிராம்பு எடுத்திருந்தால் ஐந்து கற்பூரம் போதும். அதற்கு மேலும் கிராம்பு எடுத்து இருந்தால் கற்பூரத்தை கூடுதலாக போடுங்கள். முதலில் இந்த கற்பூரத்தை பற்ற வையுங்கள். கற்பூரம் எரியும் போது நீங்கள் கையில் வைத்திருக்கும் கிராம்புவை இந்த நெருப்பில் போடுங்கள்.

- Advertisement -

நெருப்பில் கிராம்பு எரியும் போது நீங்கள் யாருக்கு பணம் கொடுத்தீர்கள், அவர்கள் எவ்வளவு பணம் உங்களுக்கு திருப்பி தர வேண்டும் என்பதையெல்லாம் மனதார சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள். அந்த பணம் திரும்ப கிடைத்தால் உங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள் என்று மகாலட்சுமி தாயாரின் மனதார நினைத்து பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

இதை கற்பூரம் எரிந்து முடியும் வரை அதன் முன்பு அமர்ந்து நீங்கள் வேண்டிக் கொண்டே இருக்க வேண்டும். இப்படி வேண்டும் போது தராமல் இழுத்து அடிக்கிறார்கள் என்று புலம்பாமல் அவர்கள் விரைவில் தர வேண்டும் தந்தால் என்னுடைய இந்த தேவைகளை பூர்த்தி செய்வேன் என்று நேர்மறையாக வேண்டுங்கள். அதன் பிறகு தெரிந்த இந்த துகளை கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள்.

இதை மேற் சொன்ன தினங்களில் காலை மாலை இரவு என எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் ஆனால் வரவேற்பு அறையில் வைத்து செய்யுங்கள். பூஜை அறையில் செய்யக் கூடாது. இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: தங்கம் சேர பரிகாரம்

இதை தொடர்ந்து ஆறு அல்லது ஏழு முறை இந்த பரிகாரத்தை செய்வதற்கு உள்ளாகவே உங்களுடைய பணம் திரும்ப கிடைப்பதற்கான வாய்ப்புகள் உங்கள் புலப்படும். நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் இந்த பரிகாரத்தை செய்து பலனை அடையலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -