கிராம்பை இந்த பொருளுடன் சேர்த்து எடுத்து சென்றால் வெகுநாட்களாக பணத்தை தராமல் இழுத்து அடித்தவர்கள் கூட உங்களை பார்த்ததும் ஓடி வந்து பணத்தை திருப்பி தந்து விடுவார்கள்.

cash kirambhu
- Advertisement -

பல நாட்களாக கடன் கொடுத்த தொகை வராமல் இருக்கும் பொழுது, நமக்கு அதுவே மிகப்பெரிய மன வேதனையை தரும். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் நம் தேவைக்கு உபயோகப்படுத்த முடியவில்லையே என்று மன வருத்தம் ஏற்படும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் கீழ்கண்ட இந்த பரிகாரத்தை நாம் செய்வதன் மூலம் நமக்கு பண ஈர்ப்பு ஏற்பட்டு, வாராத கடனும் வந்தடையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. அப்படிப்பட்ட பரிகாரம் என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் பார்ப்போம்.

கொடுத்த பணத்தை திரும்ப பெற:
ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்துக் கொள்வோம். இதை நாம் ராஜகனி என்று கூறுவோம். மேலும் இது தீய சக்தியை தன்னுள் உச்சரித்துக் கொள்கிறது என்பதற்காகத் தான் கண் திருஷ்டி எடுக்க இந்த எலுமிச்சம்பழத்தை உபயோகிக்கிறோம். இதனுடன் மகாலட்சுமிக்கு உகந்த பொருளான நம் வீட்டு சமையலறையில் இருக்கக் கூடிய மருத்துவ குணம் கொண்ட 4 கிராம்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இப்பொழுது அந்த எலுமிச்சம் பழத்தில் நான்கு ஓட்டைகளை போட்டு, அதனுள் இந்த 4 கிராமையும் சொருக வேண்டும். இந்த கனியை நம்முடன் எடுத்துக் கொண்டு வாராத கடனை வசூலிக்க சென்றால் கண்டிப்பாக முறையில் நம் கடன் தொகை நமக்கு திரும்ப கிடைக்கும். மேலும் நாம் வீடு திரும்பும் பொழுது இந்த கனியை கால் படாத இடத்தில் தூக்கி எறிந்து விட்டு வர வேண்டும். ஏனெனில் இந்த கனியில் அனைத்து கெட்ட சக்திகளும் உத்திரவிக்கப்பட்டு இருக்கும் என்பதால் இதனை திரும்பவும் வீட்டிற்குள் கொண்டு வரக் கூடாது.

நம் வீட்டிற்குள் பணத்தை ஈர்க்கும் சக்தியை உண்டாக்க கீழ்காணும் பரிகாரத்தை செய்யலாம். இதற்கு நாம் செவ்வாய்க் கிழமை மாலை 6:30 மணிக்கு மேல் ஒரு சிவப்பு நிற பட்டு துணியை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த துணியை தண்ணீரில் சிறிது பன்னீர் கலந்து நனைத்து காய வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் நான்கு கிராம்பை வைத்து ஒரு மூட்டையாக கட்டி, நம் வீட்டு வாசலின் நடுவில் இந்த மூட்டையை கட்ட வேண்டும்.

- Advertisement -

இந்த மூட்டையை ஆறு மாதத்திற்கு ஒரு முறை நாம் கட்டாயமாக கட்டாயமாக. இவ்வாறு செய்வதால் நம் வீட்டிற்குள் பணமானது ஈர்க்கப்பட்டு எப்பொழுதும் நம் வீட்டில் பணம் நிறைந்திருக்கும்.

இதையும் படிக்கலாமே: சுக்கிரனுடைய பரிபூரண அருளை பெற்று நம்முடைய செல்வ வளத்தை அதிகரித்துக் கொள்ள வீட்டிற்கு வருவோருக்கு இந்த பொருளை தானமாக தாருங்கள். பண வரவிற்கு வட இந்தியர்கள் பயன்படுத்தும் சூட்சும பரிகாரம்.

பல மருத்துவ குணங்களைக் கொண்ட இந்த கிராம்பை வைத்து அற்புதமான எளிய பரிகாரத்தை நாம் மேற்கொண்டு கொடுத்த கடனை வசூலிப்பதுடன் பணத்தை ஈர்த்து வளமான வாழ்க்கையை வாழலாம். இந்த பரிகார முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இதை செய்து பலன் அடையலாம்.

- Advertisement -