கறுத்துப் போன பழைய வெள்ளி கொலுசை பத்து நிமிசத்துல புதுசு போல மாத்துற இந்த டிப்ஸ் மட்டும் உங்களுக்கு தெரிஞ்சா போதும். ஒரு முறை வாங்குன கொலுசை உங்க வாழ்நாள்ல மாத்தவே மாட்டீங்க.

- Advertisement -

காலில் கொலுசு அணிவது நம்முடைய பாரம்பரியமான பழகத்தில் ஒன்று. சிறு பிள்ளை முதலே இந்த பழக்கத்தை நம் முன்னோர்கள் நமக்கு ஏற்படுத்தி இருப்பார்கள். காலில் கொலுசு அணிந்து இருப்பது ஆரோக்கியம் சார்ந்த விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. அப்படி ஆன இந்த கொலுசை நாம் வாங்கும் போது எப்படி புதுசாக பள பளவென்று வாங்கி அணிந்தோமோ அதே போல காலத்திற்கும் புதுசாகவே வைத்திருக்கக் கூடிய ஒரு அருமையான டிப்ஸ் பற்றி தான் இந்த வீட்டுக் குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

பழைய வெள்ளி கொலுசை புதுசு போல மாற்ற
இதற்கு ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது நீங்கள் எடுத்திருக்கும் கொலுசு மூழ்கும் அளவிற்கு அந்த தண்ணீர் இருக்க வேண்டும். அதை அடுப்பில் வைத்து சூடு படுத்துங்கள். தண்ணீர் சூடானதும் ஒரு ஸ்பூன் டீத்தூளை சேர்த்து கொதிக்க விடுங்கள். அத்துடன் ஒரு ஸ்பூன் ஷாம்புவை சேர்த்து கலந்து கொதிக்கும் போது உங்களுடைய பழைய கொலுசை அதில் போட்டு விடுங்கள்.

- Advertisement -

இந்தத் தண்ணீரில் கொலுசு மூன்று நிமிடம் வரை கொதிக்க வேண்டும். அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டு ஒரே ஒரு ஸ்பூன் சமையல் சோடாவை அதில் சேர்த்து பிறகு மீண்டும் ஒரு இரண்டு நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு அந்த தண்ணீரை ஒரு சிறிய கிண்ணத்தில் வடிகட்டிக் கொள்ளுங்கள். இப்பொழுது டீ தூள் கொலுசு எல்லாம் பாத்திரத்திலே தங்கி விடும். இந்த தண்ணீர் மட்டும் வேறு கிண்ணத்தில் இருக்கும்.

மறுபடியும் கிண்ணத்தில் உள்ள கொலுசை எடுத்து வடித்து வைத்திருக்கும் தண்ணீரில் போட்டு மீண்டும் 2 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். இந்த கொலுசு தண்ணீர் எல்லாம் ஓரளவிற்கு சூடு ஆறி கை பொறுக்கும் பதத்திற்கு வந்த பிறகு அதிலிருந்து கொலுசை எடுத்து மீண்டும் கொஞ்சமாக கொலுசின் மீது ஷாம்பு தடவி லேசாக தேய்த்து விடுங்கள்.

- Advertisement -

நாம் டிகாஷன் தண்ணீரில் கொதிக்க விட்டிருந்தால் அதன் கறைகள் இந்த கொலுசின் மீது தங்கி விடக் கூடாது. அது மட்டும் இன்றி இது வரை செய்த ப்ராசஸ் கொலுசில் உள்ள அழுக்கு கறைகள் நீங்கும். இந்த முறை கொலுசு பாலிஷ் போட்டது போல பளபளப்பாக மாறி விடும்.

இதையும் படிக்கலாமே: என்னங்க எப்படி அரைச்சு வச்சாலும் மருதாணி உங்க கையில செவக்கவே இல்லையா? இனி மருதாணி அரைக்கும் போது இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க வச்ச ஒரு மணி நேரத்திற்கெல்லாம் கை செக்கச் செவேர்ன்னு சிவந்திடும்.

இதையெல்லாம் செய்த பிறகு நல்ல சுத்தமான தண்ணீரில் கொலுசை அலசிய பிறகு ஒரு காட்டன் துணியில் கொலுசை துடைத்து சிறிது நேரம் ஆற வைத்து எடுத்து அதன் பிறகு அணிந்து கொள்ளுங்கள். இந்த முறையில் நீங்கள் சுத்தம் செய்யும் போது கொலுசு எப்போதும் கடையில் புதிதாக வாங்கும் போது எப்படி இருந்ததோ அதே போல இருக்கும். இந்த டிப்ஸ் உங்களுக்கு பிடித்திருந்தால் ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -