இந்த பொட்டு மட்டும் தினமும் நெற்றியில் வைத்துக் கொண்டால் போதும் உங்கள் துணை உங்கள் பேச்சை கேட்க இனி மறுக்கவே மாட்டாங்க!

fight-korosanai
- Advertisement -

கணவன் மனைவியின் சொல்லை கேட்டும், மனைவி கணவனின் சொல்லைக் கேட்டும் நடந்தால் தான் அந்த குடும்பம் சுபிட்சமாக இருக்கும். ஆனால் நீ என்ன சொல்வது? நான் என்ன கேட்பது? என்று ஒருவருக்கொருவர் சலிக்காமல் போட்டி போட்டுக் கொண்டிருந்தால், பிரச்சனைகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான பிரச்சனைகளை எளிதாக முறியடிக்க கூடிய தன்மை குங்குமம் மற்றும் விபூதிக்கு இணையான இந்த ஒரு பொருளில் இருக்கிறது. இது எங்கு கிடைக்கும்? இதை என்ன பண்ண வேண்டும்? என்பது போன்ற ஆன்மீக குறிப்பு ரகசியங்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பசுவில் இருந்து கிடைக்கக்கூடிய இந்த பொருள் கோரோசனை என்று கூறுவார்கள். இது நாட்டு மருந்து கடை மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் குறைந்த விலைகளில் கிடைக்கப் பெறுகிறது. இது தெய்வீக சக்தி கொண்ட ஒரு மூலிகை பொருளாக இருக்கிறது. இதை நெற்றியில் இட்டுக் கொள்பவர்களுக்கு எவ்விதமான பகைவர்களின் தொல்லையும் இருக்காது என்று கூறப்படுகிறது.

- Advertisement -

தினமும் காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு குலதெய்வத்தை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். கோரோசனையை பூஜை அறையில் எப்பொழுதும் வைத்து இருப்பது நல்லது. குலதெய்வத்தை வணங்கிய பிறகு இந்த கோரோசனையை வலது கை மோதிர விரலால் எடுத்து, அதில் உங்களுடைய இஷ்ட தெய்வத்தை மனதில் நினைத்து பார்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதை தினமும் நெற்றியில் இட்டுக் கொள்ள வேண்டும். இப்படி செய்வது மூலம் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்குமாம். தெய்வ வாசனை நம் மீது இருப்பதால் வெற்றிகள் பல குவியும் என்று நம்பப்படுகிறது.

அதே போல கணவன் மனைவி உறவுக்குள் இருக்கும் சிக்கல்களையும் இந்த கோரோசனை தீர்த்து வைக்கும் என்று நம்பப்படுகிறது. கணவனின் சொல்லை கேட்காமல் மனைவி தன் இஷ்டத்துக்கு செயல்பட்டு கொண்டிருந்தாலும், மனைவி பேச்சைக் கேட்காமல் கணவன் இஷ்டத்திற்கு தன் விருப்பம் போல எதையாவது செய்து கொண்டு இருந்தாலும் அவர்களை வசியம் செய்வதற்கு இந்த கோரோசனையை பயன்படுத்தலாம்.

- Advertisement -

பூஜை அறையில் எப்பொழுதும் இது இருக்குமாறு வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் காலையில் எழுந்து குளித்து முடித்ததும் சிறிதளவு தேனில் இந்த கோரோசனையை உரைத்து நெற்றியில் இட்டுக் கொள்ளுங்கள். இப்படி செய்து வருவதன் மூலம் உங்களிடம் உங்கள் துணை வசியம் பெறுவதாகவும், இதனால் நீங்கள் சொல்வதை அவர்கள் கேட்பதாகவும் ஐதீகம் உண்டு. இதற்கு அத்தகைய சிறப்பு மிக்க பலன்களும் இருப்பதாக ஆன்மீகத்தில் குறிப்பிடப்படுகிறது. கோரோசனைக்கு இவ்வளவு ஒரு சக்தி இருப்பதால் தான் இதனை தெய்வீக ஆலய அபிஷேகங்களில் கூட பயன்படுத்தப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:
அள்ள அள்ள குறையாத செல்வம் சேர அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும் 10 எளிய பரிகாரங்கள்! இதை செய்தாலே வாழ்வில் பணக் கஷ்டமே வராது தெரியுமா?

கணவன் மனைவிக்குள் பிரச்சனை, குடும்ப பிரச்சனை போன்ற தொந்தரவுகள் இருப்பவர்கள் கோரோசனையை அபிஷேகம் செய்யக்கூடிய சுவாமிகளுக்கு அபிஷேக பொருளாக நீங்கள் வாங்கியும் கொடுக்கலாம். இதனால் குடும்ப பிரச்சினைகள் தீர்ந்து ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதிக்கும், மகிழ்ச்சிக்கும் குறைவிருக்காது. இந்த கோரோசனை நம் உடம்பில் இருக்கும் பொழுது நம்மை தீய சக்திகள் அண்டாது. தெய்வ சக்தி நம்மை பாதுகாப்பதாக ஒரு நம்பிக்கை உண்டு. இதனால் தான் எல்லாவிதமான நன்மைகளும் நடக்கிறது. விபூதி, குங்குமம் எப்படி நாம் இட்டுக் கொள்கிறோமோ, அதே போல இந்த கோரோசனையையும் நெற்றியில் இட்டுக் கொள்வதால், பலவிதமான பயன்களை பெறலாமே!

- Advertisement -