கொசுக்களை விரட்ட இப்படி ஒரு வழி இருப்பது உங்களுக்கு தெரியுமா? மின்சார தைலம். இதுவரைக்கும் நீங்க கேள்விப்படாத இந்த குறிப்பை மிஸ் பண்ணாதீங்க.

mosquitoes
- Advertisement -

பெரும்பாலும் கொசுவை விரட்டுவதற்கு வேப்ப எண்ணெய், கற்பூரம், வேப்ப இலை, இப்படி சில பொருட்களை நாம் பயன்படுத்துவோம். அப்படி இல்லை என்றால் கடைகளில் விற்கும் ஆல் அவுட், குட் நைட் போன்ற கொசு விரட்டிகளை பயன்படுத்துகிறோம். இதையெல்லாம் தாண்டியும் கொசு வீட்டிற்குள் வர தான் செய்கிறது. கூடுமானவரை செயற்கையாக கடைகளில் விற்கும் கொசு விரட்டிகளை அதிகம் பயன்படுத்தாதீர்கள். அந்த புகையை சுவாசிக்கும் போது நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு பிரச்சினை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக சின்ன குழந்தைகள் இருக்கும் வீட்டில் காற்று வெளியே போக முடியாத, ஜன்னல் இல்லாத இடத்தில் கொசுவத்தியை பயன்படுத்துவது ரொம்ப ரொம்ப தவறு

இயற்கையான முறையில் கொசுவை விரட்ட நம் வீட்டில் இருந்தபடியே ஒரு லிக்விடை தயாரிப்பது எப்படி என்பதை பற்றித்தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இதற்கு நமக்கு தேவையான பொருட்கள் 4. மென்தால் (புதினா உப்பு) – 25 கிராம், தைமால் (ஓமவல்லி உப்பு) – 25 கிராம், பச்சைக் கற்பூரம் 10 – கிராம், தேங்காய் எண்ணெய் – 1/4 லிட்டர்.

- Advertisement -

புதினாவில் இருந்து எடுக்கப்பட்ட உப்பைதான் மென்தால் என்று சொல்வார்கள். கற்பூரவள்ளி(ஓமவல்லி) இலை இதிலிருந்து எடுக்கப்பட்ட உப்பை தான் தைமால் என்று சொல்லுவார்கள். இந்த இரண்டு உப்பும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு சிறிய கிண்ணத்தில் மென்தால் தைமால் இந்த இரண்டு உப்பையும் போட்டு நன்றாக கலக்கி, சுடு தண்ணீரிலோ அல்லது நல்ல வெயிலிலோ வைத்தால் உருகி தைலம் போல நமக்கு கிடைத்துவிடும்.

இந்த தைலத்தில் பச்சை கற்பூரத்தை நன்றாக நசுக்கி போட்டு கலந்து விட்டால், பச்சை கற்பூரம் தைலத்தோடு கலந்து கரைத்து விடும். அவ்வளவு தான். நமக்குத் தேவையான தைலம் தயார். இந்த தைலத்தில், எடுத்து வைத்திருக்கும் தேங்காய் எண்ணெய் 1/4 லிட்டரை கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

ஒரு அகல் விளக்கில் இந்த எண்ணெயை ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்து விட்டால், இதில் வரும் புகை கொசுவை விரட்டி அடித்து விடும். அப்படி இல்லை என்றால் இந்த எண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக சூடு செய்யும்போது புகை வெளியேறும் அந்த புகைக்கும் கொசு வீட்டிற்குள் வராது.

இதையும் படிக்கலாமே: இந்த விஷயம் தெரிஞ்சா, இனி இந்த டைப்பரை பெரியவங்க கூட வாங்கி வீட்ல ஸ்டோர் செஞ்சு வச்சுப்பீங்க. உங்க வீட்ல குழந்தைகள் இல்லையென்றாலும் கூட.

மென்தால், தைமால், பச்சை கற்பூரம் மூன்றும் சேர்த்து தைலம் இருக்குது அல்லவா, அதில் தேங்காய் எண்ணெயை கலக்காமல் அப்படியே வைத்திருந்தால் பல வகையான பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். இந்த மூன்று பொருட்கள் சேர்த்த தைலத்தை மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் மூட்டு வலி உடனடியாக குணமாகும். தலைவலி மூக்கடைப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால் தலையில் நீர் கோர்க்கக் கூடிய பிரச்சனைகள் இருந்தால், சுடுதண்ணீரில் இந்த தைலத்தை மிகக் குறைந்த அளவில், 1/2 ஸ்பூன் அளவு விட்டு ஆவி பிடித்தால் தலைவலி உடனே குணமாகும். (இந்த தைலத்தை நிறைய சேர்த்துட்டால் கண்கள் எரியும்.) இதை சில பேர் மின்சாரம் தைலம் என்று கூட சொல்லுவார்களாம். உங்களுக்கு மேலே சொன்ன குறிப்பு பயனுள்ளதாக இருந்தால் நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாம்.

- Advertisement -