உங்கள் முகத்தில் இருக்கும் அனைத்து விதமான பிரச்சனைகளுக்கும் ஒரு முடிவு கட்ட குப்பையில் தூக்கிப் போடும் இந்த ஒரு பொருள் போதும். 48 நாளில் வானத்திலிருந்து இறங்கி வந்த தேவதை போல மாறிவிடுவீர்கள்.

girl
- Advertisement -

அழகு சம்பந்தப்பட்ட விஷயத்தை பேசினாலே ஏகப்பட்ட பிரச்சனைகள். முகத்தில் சில பேருக்கு கரும்புள்ளிகள், முகப்பரு, கருந்திட்டுக்கள் உள்ளது. சில பேருக்கு சின்ன வயசிலேயே முகத்தில் நிறைய சுருக்கம் வருகிறது. சில பேருக்கு கொப்பளங்கள் வருகிறது. இப்படி அடுக்கிக் கொண்டே செல்லலாம். பிரச்சினைகள் பலவிதம். ஆனால் இந்த எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரே ஒரு தீர்வு உள்ளது. அதுவும் இயற்கையான முறையில். இயற்கையாக நமக்கும் கிடைக்கும் ஒரு பொருளை வைத்து, இன்றைக்கு ஒரு சூப்பர் ரெமடியை பார்க்க போகின்றோம்.

இன்றைக்கு இந்த ரெமடியை முயற்சி செய்தால், நாளைக்கு பலனை எதிர்பார்க்க முடியாது. 48 நாட்கள் விடாமல் இதை தொடர்ந்து பின்பற்றி வரும்போது, நிச்சயமாக ஒரு நல்ல பலன் தெரியும். ஏனென்றால் இது இயற்கை வைத்தியம் அல்லவா. சரி, அழகு குறிப்புகள் செல்வோம். இந்த குறிப்புக்கு நாம் பயன்படுத்த போக்கும் பொருள் கொட்டாங்குச்சி.

- Advertisement -

அழகு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் கொட்டாங்குச்சி:
கொட்டாங்குச்சிக்கு மேலே இருக்கக்கூடிய அந்த நாரையெல்லாம் சுத்தமாக நீக்கிவிடுங்கள். ஒரு கத்தியை வைத்து தேய்த்து விட்டாலும் சரிதான். கொட்டாங்குச்சிகளை நான்கு ஐந்து துண்டுகளாக உடைத்துக் கொள்ளுங்கள். ஒரு பெரிய சொம்பு அளவு தண்ணீர், 1 லிட்டர் தண்ணீர் என்று வைத்துக் கொள்வோம். அதை பாத்திரத்தில் ஊற்றி உடைத்த இந்த நான்கு ஐந்து துண்டு கொட்டாங்குச்சிகளை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

தண்ணீர் கொதிக்கத் தொடங்கும். கொட்டாங்குச்சியில் இருக்கக்கூடிய சாறு அனைத்தும் அந்த தண்ணீரில் இறங்க வேண்டும். தண்ணீரில் லேசாக சிவப்பு நிறமாக மாறி வரும்போது அடுப்பை அணைக்க வேண்டும். அதிகபட்சம் ஒரு மணி நேரம் தண்ணீர் கொதிக்க வேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள். பிறகு வடிகட்டிய தண்ணீரை நன்றாக ஆற வைத்து பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும். ஃப்ரிட்ஜில் வைக்கவும். 10 நாட்கள் வரை இந்த தண்ணீரை பயன்படுத்தலாம். இதை முகம் முழுவதும் தினமும் ஸ்ப்ரே செய்யலாம். இரவு தூங்க செல்வதற்கு முன்பு கூட முகத்தில் ஸ்பிரே செய்துவிட்டு, அது காய்ந்தவுடன் தூங்க செல்லலாம்.

- Advertisement -

உங்களுடைய முகத்தில் தழும்புகள் முகப்பருக்கள் அதிகமாக எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்தில் கொஞ்சம் கவனம் எடுத்து ஒரு பஞ்சில் இந்த தண்ணீரை தொட்டு வையுங்கள். சில நிமிடங்கள் அந்த பஞ்சையும் அந்த முகப்பருக்கு மேல் வைத்து அந்த தண்ணீரை சருமம் உறிஞ்சும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: வயசு ஏறிக் கொண்டே போனாலும் இளமையும், அழகும் அப்படியே இருக்க நீங்க என்ன செய்யனும் தெரியுமா? இது தெரிஞ்சிக்கோங்க இனி வயசு கூடுதுன்னு புலம்பவே வேண்டாம்!

48 நாள் தினமும் இதை தொடர்ந்து செய்து வந்தால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது. படிப்படியாக உங்கள் சரும பிரச்சனை குறையும். வயதான தோற்றத்தை தள்ளிப் போடக்கூடிய சக்தி இதற்கு உண்டு. உங்களுக்கு சருமத்தில் சுருக்கமே வந்திருந்தாலும், அந்த சுருக்கத்தை படிப்படியாக குறைக்கும். 48 நாட்களுக்குப் பிறகு தொடர்ந்து பயன்படுத்தலாமா. தாராளமாக பயன்படுத்தலாம். இந்த கொட்டாங்குச்சி தண்ணிக்கு பயங்கர பவர். நீங்க என்றைக்குமே இளமையாக அழகான சருமத்தோடு இருக்க வேண்டும் என்றால் இந்த அழகு குறிப்பு உங்களுக்காக. நீங்களும் தேவதை போல மாற விருப்பமானால் இந்த குறிப்பை முயற்சி செய்து பலன் பெறலாம்.

- Advertisement -