கோடீஸ்வர யோகம் தரும் வழிபாடு

koteeswara yogam
- Advertisement -

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்றுதான் விரும்புவார். அந்த விருப்பத்தை நிறைவு செய்வதற்காக தான் அனுதினமும் கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள். இப்படி உழைக்கும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியமோ பலனோ கிடைக்காத பட்சத்தில் அவர்களால் அவர்கள் நினைத்த வாழ்க்கையை வாழ முடியாத சூழ்நிலை உண்டாகும். இப்படி இருப்பவர்கள் மகாலட்சுமி தாயாரை எந்த முறையில் வழிபட்டால் அவர்கள் நினைத்த கோடீஸ்வர யோகம் கிடைக்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்றால் அவர் செய்யும் தொழிலோ அல்லது வேலையோ சிறப்பாக இருக்க வேண்டும். இப்படி அவர்களின் வேலை சிறப்பாக இருப்பதற்கும் தொழில் லாபகரமாக நடப்பதற்கும் மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக வேண்டும். இந்த ஒரு வழிபாட்டை நாம் செய்தால் மகாலட்சுமி தாயாரின் அருளோடு வேலையிலும் சிறந்து விளங்க முடியும் அதே சமயம் தொழில் செய்பவர்களுக்கும் லாபகரமான தொழில் ஏற்படும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை மகாலட்சுமி தாயாருக்குரிய கிழமையான வெள்ளிக்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். அதுவும் சுக்கிர கோரையில்தான் செய்ய வேண்டும். முடிந்த அளவிற்கு காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் செய்ய வேண்டும். அன்றைய தினம் மகாலட்சுமி தாயாரின் படத்தை சுத்தம் செய்து அவர்களுக்கு மஞ்சள் குங்குமம் வைத்து கொள்ள வேண்டும். பிறகு வாசனை மிகுந்த மலர்களால் மகாலட்சுமி தாயாரின் படத்தை அலங்காரம் செய்து கொள்ள வேண்டும்.

அடுத்ததாக மகாலட்சுமி தாயாருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். 27, 58, 108 என்ற எண்ணிக்கையில் நல்ல ஏலக்காயாக பார்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த ஏலக்காயை வைத்து “ஓம் ஸ்ரீ மகாலட்சுமியே நமஹ” என்னும் மந்திரத்தை கூறி மகாலட்சுமி தாயாருக்கு ஏலக்காயால் அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு மகாலட்சுமி தாயாருக்கு பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற பருப்புகளுடன் தேனை கலந்து நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். இப்படி நெய்வேத்தியம் வைத்தபிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்ட வேண்டும்.

- Advertisement -

இவை அனைத்தும் செய்து முடித்த பிறகு நாம் அர்ச்சனை செய்த ஏலக்காய்களை எடுத்து அதனுடன் சிறிது பச்சை கற்பூரம், சிறிது கஸ்தூரி மஞ்சள் தூள், சிறிது குங்குமம் இவற்றையும் சேர்த்து நன்றாக இடித்துக் கொள்ள வேண்டும். இடித்த இந்த பொடியை வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். தொழில் செய்பவர்களாக இருந்தால் கல்லாப்பெட்டியில் வைத்துக் கொள்ள வேண்டும். நெய்வேத்தியமாக வைத்த பருப்புகளை தொழில் செய்பவராக இருந்தால் அவர்களிடம் பணியாற்றும் பணியாளர்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும்.

மற்றவர்கள் தங்கள் வீட்டில் இருக்கும் நபர்களிடம் பகிர்ந்து கொடுக்கலாம். இப்படி தொடர்ந்து வாராவாரம் மகாலட்சுமி தாயாரை வழிபட வேலையிலும் தொழிலிலும் சிறந்து விளங்குவதோடு செல்வ செழிப்பு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் அதிகமாகவே ஏற்படும். அடுத்த வாரம் இதே போல் செய்யும் பொழுது முதல் வாரம் செய்து வைத்த அந்த ஏலக்காய் தூளை எடுத்து துளசி செடியிலோ அல்லது வேறு ஏதாவது செடிகளிலோ போட்டுவிட்டு புதிதாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ திருஷ்டி கழிக்கும் முறை

மிகவும் சக்தி வாய்ந்த இந்த மகாலட்சுமி தாயாரின் வழிபாட்டை நம்பிக்கையுடன் செய்பவர்களுடைய வாழ்க்கையில் கண்டிப்பான முறையில் கோடீஸ்வர யோகம் என்பது ஏற்படும்.

- Advertisement -