கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ திருஷ்டி கழிக்கும் முறை

poondu
- Advertisement -

சில குடும்பங்களில் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் வராது. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து இல்லற வாழ்க்கையை அவ்வளவு அழகாக நடத்தி வருவார்கள். குழந்தை குட்டிகள், குடும்பத்தில் இருக்கும் உறவுகள் என்று எல்லோரையும் அனுசரித்து ஒரு குடும்பம் ஓடிக்கொண்டிருக்கும்.

ஆனால் திடீரென்று ஒரு நாள் அந்த குடும்பத்தில் ஒரு பெரிய பூகம்பம் வெடிக்கும். கணவன் மனைவிக்குள் பெரிய பிரளயமே உண்டாகும். எதனால் சண்டை வந்தது என்று பார்த்தால் மூல காரணம் எதுவுமே இருக்காது. சின்னதா ஆரம்பிச்ச பிரச்சனை பெருசாக வெடித்து கணவன் மனைவி பிரிவு வரை சென்றிருக்கும்.

- Advertisement -

இதற்கு காரணம் என்னவாக இருக்கும். எப்படி தேடிப் பார்த்தாலும் இதற்கு முதல் காரணம் கண் திருஷ்டி தான். இவர்கள் இருவரும் எங்கேயாவது வெளியிடங்களுக்கு ஜோடியாக போயிட்டு வந்திருப்பாங்க. யார் கண்ணிலியாவது பட்டிருப்பாங்க. பாரு கணவன் மனைவியா வாழ்ந்தால் இதுபோல வாழனும். இப்படி ஒரு மனைவி கிடைக்க, கணவர் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

இப்படி ஒரு கணவர் கிடைக்க மனைவி கொடுத்து வச்சிருக்கணும் அப்படின்னு சில பேர் வாயால் சொல்லி இருப்பார்கள். நல்ல எண்ணத்தோடு இப்படி சொன்னால் தவறு கிடையாது. ஆனால் இது போல வாழ்க்கை நமக்கு அமையவில்லையே என்று பொறாமை படக்கூடிய சில பேரும் இந்த பூமியில் இருக்கிறார்கள்.

- Advertisement -

அந்த கண் திருஷ்டி, அடுத்தவர்களுடைய பொறாமை கண்ணோட்டம், ஒற்றுமையாக இருக்கும் கணவன் மனைவி மீது படும்போது நிச்சயமாக அவர்களுக்குள் விரிசல் ஏற்படும். இதனால் தான் அந்த காலத்திலேயே முன்னோர்கள் இப்படி கணவனும் மனைவியும் சந்தோஷமாக வெளியில் சென்று வந்தால் அவர்களுக்கு திருஷ்டி சுற்றி போடும் வழக்கத்தை வைத்திருந்தார்கள்.

கணவன் மனைவியின் மீது பட்ட கண் திருஷ்டியை நீக்க

கணவன் மனைவி பிள்ளைகள் எல்லாம் சந்தோஷமாக ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு சென்று வீடு திரும்பியதும் அவர்களுக்கு வீட்டில் இருக்கும் பெரியவர்கள் திருஷ்டி சுற்றி போட வேண்டும். வீட்டில் பெரியவர்கள் இல்லையா. கவலையே படாதீங்க. 3 வர மிளகாய், 3 வெள்ள பூண்டு, 1 ஸ்பூன் சமையலுக்கு தாளிக்கும் கடுகு.

- Advertisement -

இந்த மூன்று பொருட்களை ஒன்றாக எடுத்து, இடது உள்ளங்கைகளில் வைத்து, உங்கள் குழந்தைகளுக்கு முதலில் திருஷ்டி சுற்றி விடுங்கள். பிறகு நீங்களும் உங்கள் கணவரும் உங்களுக்கு நீங்களே திருஷ்டியை சுற்றிக் கொள்ளுங்கள். எரிகின்ற நெருப்பில் இந்த மூன்று பொருட்களையும் போட்டு எரித்து விடுங்கள். திருஷ்டி சுற்ற எல்லாருக்கும் தெரியும் அல்லவா. இடது பக்கம் மூன்று முறை, வலது பக்கம் மூன்று முறை, ஏற்ற இறக்கமாக மூன்று முறை.

இதையும் படிக்கலாமே: கடன் அடைய கிராம்பு பரிகாரம்

வீட்டுக்கு வெளிப் பக்கம் ஒரு கொட்டாங்குச்சியில் கட்டி கற்பூரத்தை வைத்து நெருப்பு மூட்டி அந்த கொட்டாங்குச்சிக்கு உள்ளே இந்த திருஷ்டி கழித்த மூன்று பொருட்களையும் போட்டு எறிய விட்டு விடுங்கள். வாரத்தில் ஒரு நாள் செவ்வாய்க்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை இந்த பரிகாரத்தை செய்தால் குடும்பத்தில் இருக்கும் கண் திருஷ்டி நீங்கும். இதை செய்தால் குடும்பத்தில் தேவை இல்லாத நேரத்தில் தேவையில்லாத சண்டை சச்சரவுகள் வருவதும் தடுக்கப்படும். கணவன் மனைவி பிரிவினையும் ஏற்படாது. எளிமையான ஆன்மீகம் பரிகாரம் தான். நம்பிக்கை உள்ளவர்கள் இதை பின்பற்றி பலன் பெறவும்.

- Advertisement -