இந்த தாயத்தை கழுத்தில் கட்டிக் கொண்டால் எந்த ஒரு கெட்டதும் அவ்வளவு எளிதாக உங்களை நெருங்க முடியாது. செலவே இல்லாமல் நம்மை பாதுகாக்கும் செக்யூரிட்டி தாயத்து இது.

thayathu
- Advertisement -

சந்தோஷமாக வாழ வேண்டும் நிம்மதியாக வாழ வேண்டும் நோய்நொடி இல்லாமல் வாழ வேண்டும் என்றால் நமக்கு நாமே ஒரு பாதுகாப்பு வட்டத்தை போட்டுக்கொள்ள வேண்டும். அந்த பாதுகாப்பு வட்டத்தை போட்டுக்கொள்ள அதிக செலவும் ஆகக்கூடாது. சொல்லப்போனால் செலவு இல்லாத செக்யூரிட்டியை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். கண்ணுக்குத் தெரிந்த எதிரி, கண்ணுக்குத் தெரியாத எதிர்மறை ஆற்றல் என்று இப்படி பல வகைப்பட்ட பிரச்சினையில் இருந்து நம்மை நாமே பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றால் இந்த தாந்திரீக பரிகாரத்தை முயற்சி செய்து பார்க்கலாம். இந்த தாயத்தை நீங்களே தயார் செய்து உங்கள் கழுத்தில் கட்டிக் கொண்டால் உங்களை எந்த ஒரு கெட்ட சக்தியாலும் நெருங்க முடியாது.

கெட்ட சக்தியிடம் இருந்து விடுபட கொத்தமல்லி வேர் தாயத்து:
உதாரணத்திற்கு, ஒரு குழந்தை நன்றாக தான் படித்துக் கொண்டிருந்தது. இடையே ஏதோ ஒரு கெட்ட சேர்க்கை, அவன் படிப்பை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டது. அவனை மீண்டும் நன்றாக படிக்க வைக்க கெட்ட நபர்களின் சாவுகாசத்தில் இருந்து விடுபட வைக்க இந்த தாயத்தை கட்டிவிடலாம். சில குழந்தைகள் ரொம்பவும் பயந்த சுபாவம் ஆக இருக்கும். 12 மணி நேரத்தில் வெய்யிலில் சென்று வந்தால் உடனடியாக அந்த பிள்ளைக்கு ஏதாவது உடல் உபாதை ஏற்பட்டுவிடும். இப்படிப்பட்ட பிள்ளைகளுக்கும் இந்த பரிகாரம் செய்யலாம்.

- Advertisement -

ராஜ வசியம் உங்களுக்கு தேவையா. எங்கு சென்றாலும் ராஜ மரியாதை கிடைக்க வேண்டுமா. வாழ்வாங்கு வாழ இந்த தாயத்தை கழுத்தில் கட்டிக் கொள்ளலாம். நேரம் கெட்ட நேரத்தில் வீட்டிற்கு வரக்கூடிய சூழ்நிலை உங்களுக்கு இருக்குதா. முச்சந்தி, 4 ரோடு சந்திக்கும் இடம், சுடுகாடு என்று பலவிதமான வழிகளைக் கடந்து நடு இரவில் வீட்டுக்கு வருபவர்களும் பாதுகாப்பிற்காக இந்த தாயத்தை கட்டிக் கொள்ளலாம்.

இப்படி சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள் முதல் பெண்கள் வரை இந்த தாயத்தை கழுத்தில் கட்டிக் கொள்ளலாம். உங்களுக்கு வேண்டாத விஷயங்கள் உங்களை நெருங்காது. சரி அப்படி என்னங்க அற்புதம் வாய்ந்த தாயத்து இது. அதில் என்னதான் போட வேண்டும். எதுவுமே இல்லைங்க உங்கள் வீட்டிற்கு சமைப்பதற்கு பயன்படுத்தும் கொத்தமல்லி தழை இருக்கிறதல்லவா, அதில் இருக்கும் வேர் தான் இந்த பரிகாரத்திற்கு தேவை.

- Advertisement -

கொத்தமல்லி தழை வேரை சிறிதளவு உங்கள் கையாலேயே கிள்ளி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இருக்கும் ஈரத்தன்மை போகும் படி துடைத்துக் கொள்ளுங்கள். பூஜை அறைக்கு வந்து குலதெய்வத்தை நினைத்து விளக்கு ஏற்று வைத்து விட்டு, ஒரு தாயத்துக்கு உள்ளே இந்த கொத்தமல்லி வேரை போட்டு கூடவே ஒரு சின்ன துண்டு பச்சை கற்பூரத்தை வைத்து கொஞ்சம் விபூதி போட்டு மூடிவிடுங்கள்.

செம்பு தாயத்து, வெள்ளி தங்கம் என்று எந்த தாயத்தை வேண்டும் என்றாலும் இதற்கு பயன்படுத்தலாம். இதை ஒரு சிவப்பு கயிறில் கட்டி உள்ளங்கையில் வைத்து குலதெய்வத்தின் பெயரை 108 முறை உச்சரித்து யார் கழுத்தில் வேண்டும் என்றாலும் நீங்கள் கட்டலாம். உங்கள் கழுத்தில் வேண்டும் என்றாலும் கட்டிக் கொள்ளலாம். உங்கள் கையில் வேண்டும் என்றாலும் கட்டிக் கொள்ளலாம். இடுப்பில் மட்டும் இந்த தாயத்தை கட்ட வேண்டாம்.

இதையும் படிக்கலாமே: தன தானியத்தை அள்ளித் தரும் தாந்திரீக பரிகாரங்கள். இந்த சூட்சமங்களை நீங்கள் அறிந்து கொண்டாலே போதும் செல்வ செழிப்புடன் வாழ்வது உறுதி

இந்த தாயத்துக்கு செம்ம பவர்ங்க. இந்த தாயத்து கழுத்தில் இருந்தால் உங்களை எந்த கெட்டதும் நெருங்காது. தைரியமாக வெளியே சென்று உங்கள் வேலையை பார்த்துவிட்டு தைரியமாக நல்லபடியாக வீடு திரும்பலாம். பெண்கள் தீட்டு காலத்திலும் இந்த தாயத்தை கட்டிக் கொள்ளலாம். மாதவிடாய் காலத்தில் வெளியில் செல்லும்போது காத்து கருப்பு உங்களை அண்டாமல் இருக்கும். வருடத்திற்கு ஒருமுறை தாயத்துக்கு உள்ளே இருக்கும் வேரை மாற்றினால் போதும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த ஆன்மீகம் சார்ந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -