இந்த தாயத்தை கழுத்தில் கட்டிக் கொண்டால் இராஜ வாழ்க்கையை இந்த ஜென்மம் முழுதும் வாழலாம்.

thayathu
- Advertisement -

குறைவாக சம்பாதித்தாலும் அதிகமாக சம்பாதித்தாலும், ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் ராஜ வாழ்க்கையை வாழ்வது என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. இந்த பூமியில் நாம் வாழக்கூடிய சிறிது காலத்தை ரசித்து ரசித்து சந்தோஷமாக வாழவேண்டும். எப்போதுமே கஷ்டப்பட்டுக் கொண்டு கண்ணீரோடு கவலையோடு வாழக்கூடாது. ராஜ வாழ்க்கை வாழ தேவையான அத்தனை அம்சங்களும் உங்களுக்கு கிடைக்க வேண்டுமென்றால் இந்த தாயத்தை நீங்கள் கழுத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

அப்படி இந்த தாயத்தை போட்டுக் கொண்டால் என்ன தான் நடக்கும். உங்களை சுற்றி எப்போதும் சந்தோஷம் இருக்கும். மன நிம்மதி கெடும் படி எந்த சம்பவம் நடக்காது. உங்கள் சொல்லுக்கு மரியாதை இருக்கும். உங்களை எல்லோரும் மதித்து நடப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, ஆண்கள் முதல் பெண்கள் வரை இந்த தாயத்தை போட்டுக்கொள்ளலாம். அவரவருடைய வயதிற்கு ஏற்ப வாழ்க்கை தரத்திற்கு ஏற்ப உண்டான எல்லா நன்மைகளும் உங்களை தேடி வர இந்த ஒரு தாயத்து உதவியாக இருக்கும்.

- Advertisement -

இந்த தாயத்திற்கு உள்ளே நாம் ஒரு வேர் போட போகின்றோம். நம் எல்லோருக்கும் சுலபமாக கிடைக்கக்கூடிய கொத்தமல்லித்தழை வேர் தான் அது‌. இதோடு ஒரு தர்ப்பைப் புல்லை சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள். தர்பை புல் எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் சுலபமாக நமக்கு கிடைக்கும்.

ஈரமில்லாமல் காயவைத்து கொத்தமல்லி தழை வேர் சிறிய துண்டு எடுத்துக்கொள்ளுங்கள். கத்தரிக்கோல் வைத்து கட் பண்ணாதீங்க. கையில் உடைத்து கொத்தமல்லி வேரை எடுத்துக் கொள்ளுங்கள். அதே அளவு சிறிய துண்டு தர்பை புல்லையும் உடைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த தாயத்து தயார் செய்ய கட்டாயமாக வெள்ளி தாயத்து தான் நமக்கு தேவைப்படும். சிறிய அளவில் வெள்ளி தாயத்தையும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். வாங்கிய தாயத்து சைஸில் இரண்டு வேரையும் மடித்து சுருட்டி ஒரு நூல் போட்டு கட்டி தாயத்தின் உள்ளே போட்டு மூடி போட்டு விடுங்கள். ஒரு சிவப்பு நிற கையிறில் இந்த தாயத்தை கட்டி பூஜை அறையில் வைத்து விட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு குலதெய்வத்தை மனதார நினைத்து தாயத்தை எடுத்து கழுத்தில் கட்டிக் கொள்ளலாம். கையில் கட்டிக்கொள்ளலாம். இடுப்பிலும் கட்டிக் கொள்ளலாம்.

இந்த தாயத்தை கட்டியவுடன் நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கை வேற லெவலில் மாறும். வருமானத்திற்கு பிரச்சனை இருக்காது. கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படாது. வீட்டில் சண்டை சச்சரவுகள் வராது. நிம்மதியான சூழ்நிலை இருக்கும். படிக்கும் மாணவ மாணவிகள் இந்த தாயத்தை கட்டிக் கொண்டால் அவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூட அதிகரிக்கும்.

சிறு குழந்தைகளுக்கு இந்த தாயத்தை கழுத்தில் கட்டி விட்டால் அவர்களுக்கு அது ஒரு பாதுகாப்பு கவசமாக இருக்கும். இப்படி பலவகையான நன்மைகள் நடந்தால் அது ராஜ வாழ்க்கை தானே. இந்த தாயத்தை யாருமே மிஸ் பண்ணாதீங்க. கட்டி நாற்பத்தி எட்டு நாட்களில் பலனை நிச்சயம் அடைவீர்கள் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -