கோவில் கோபுரத்தில் இருக்கும் பொம்மைகளை பற்றி தெரியுமா? கோவிலுக்கு சென்றால் இதை தரிசனம் செய்ய மறந்து விடாதீர்கள், கோடி புண்ணியத்தை இழந்து விடுவீர்கள்!

- Advertisement -

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று கூறுவார்கள். காலையில் எழுந்ததும் முதல் தரிசனமாக நீங்கள் கோவில் கோபுரத்தை கண்டால் அந்த நாள் முழுவதும் உங்களுக்கு லாபமும், அதிர்ஷ்டமும் பெருகும். கோபுர தரிசனம் செய்பவர்களுக்கு கோடி புண்ணியங்கள் வந்து சேரும் என்கிறது ஆகம விதிகள்! இப்படி இருக்க கோபுரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த பொம்மைகளுக்கு பின்னால் இருக்கும் சூட்சமம் என்ன? என்கிற ரகசியத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

கோவிலுக்கு சென்றால் முதலில் கோபுரம் வழியாக நுழைந்து பின்பு கருவறையை அடைவது வழக்கம். இப்படி கோபுரங்கள் இருக்கும் கோவில்களுக்கு அதிக சக்தி உண்டு. பெரிய பெரிய கோபுரங்கள் அமைத்து அதில் கலசங்களை வைப்பது காலா காலத்திற்கும் நிலைத்து நிற்கும் ஒரு அற்புதமான அறிவியல் ஆகும். இப்படி பார்த்து பார்த்து கம்பீரமாக எழுப்பப்பட்டிருக்கும் கோவில் கோபுரங்களில் இருக்கும் பொம்மைகளை என்றாவது நீங்கள் உற்று நோக்கியது உண்டா?

- Advertisement -

எதற்காக கோபுரங்கள் முழுவதும் பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது? கோவில் கோபுர பொம்மைகளை எப்படி வேண்டுமானாலும் அமைத்து விடக் கூடாது. எந்தந்த இடங்களில், எந்தெந்த தெய்வ உருவங்கள் இடம் பெற வேண்டுமோ, அந்த அமைப்பின் படி இருந்தால் தான் அதற்கு அதிக சக்தி உண்டு. கோபுரத்தின் மேல் பகுதியில் சிவபெருமான் தொடர்புள்ள பொம்மைகளும், நடுப்பகுதியில் விஷ்ணு பகவான் தொடர்புள்ள பொம்மைகளும், அடிப்பகுதியில் பிரம்ம தேவர் தொடர்புள்ள பொம்மைகளும் அமைக்கப்பட்டு இருக்கும். மற்ற பகுதிகளில் ரிஷிகள், பூதகணங்கள், தேவதைகள், பக்தர்கள் ஆகியோரின் திருஉருவங்கள் அமைக்கப்பட்டு இருக்கும்.

இப்படி ஒவ்வொரு பொம்மைகளையும் செதுக்கும் பொழுது அதில் இலக்கண விதி உண்டு. இந்த விதிக்கு ‘பிரதிமாலஷணம்’ என்பது பெயராகும். இந்த விதியின்படி கோபுர பொம்மைகள் செதுக்கப்பட வேண்டும். இதில் தெய்வ திருஉருவங்கள் அமைக்கப்படும் பொழுது அதன் கண்கள் அனுகிரக பார்வையுடன் சாந்தமாக அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். தெய்வத்தின் திருமுகத்தை விட, உடல் பத்து மடங்கு பெரியதாக இருக்க வேண்டும்.

- Advertisement -

அது போல மனித உருவங்கள் அமைக்கப்படும் பொழுது முகத்தைக் காட்டிலும் உடல் எட்டு மடங்கு அதிகம் இருக்க வேண்டும். தேவதைகளின் திரு உருவங்கள் முகத்தைக் காட்டிலும் 9 மடங்கு உடல் பெரியதாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். பூதகணங்கள், துவாரபாலகர்கள், அசுரர்கள் ஆகியோருடைய கண்கள் உக்கிரமாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். கோபுர பொம்மைகளில் இவர்கள் மட்டுமல்லாமல் தேவர்கள், பறவைகள், மிருகங்கள் கூட செதுக்கப்பட்டு இருக்கும். இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் தெய்வம் அருள் புரிவார் என்பதையும், எல்லோரும் இங்கு சமம் என்பதையும் உலக மக்களுக்கு புரிய வைக்க இவ்வாறு கோவில் கோபுர பொம்மைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கோவிலுக்கு செல்லும் பொழுது கட்டாயம் கோபுரத்தை தரிசனம் செய்து விட்டு வர வேண்டும். கோவிலுக்கு போனோமா, வந்தோமா என்றில்லாமல் கோபுரத்தில் இருக்கும் ஒவ்வொரு பொம்மைகளையும் பார்த்து கண் குளிர ரசிக்க வேண்டும். கோபுரத்தை இவ்வகையில் தரிசனம் செய்த பின்பு, கோவிலுக்குள் சென்று மூலவரை வணங்க வேண்டும். பின்பு எல்லா கடவுளரையும் வணங்கிவிட்டு பிரகாரத்தை வலம் வர வேண்டும். அதன் பிறகு கொஞ்ச நேரமாவது அங்கு அமர்ந்து விட்டு, பின்னர் வீட்டுக்கு புறப்படலாம். முறையாக ஒரு கோவிலை இந்த வகையில் தரிசனம் செய்தவர்களுக்கு மனதில் தீய எண்ணங்கள் எழுவதற்கு வாய்ப்பே கிடையாது.

- Advertisement -