தினமும் கிருஷ்ணர் நேரில் வந்து உணவு உண்ணும் அதிசய கோவில் எங்கு உள்ளது தெரியுமா?

nidhivan-temple
- Advertisement -

அமானுஷ்யங்களும் அதிசயங்களும் கலந்த சில நிகழ்வுகள் எப்போதாவது சில கோவில்களில் நிகழ்வதுண்டு. அந்த வகையில் தினமும் இரவில், கிருஷ்ணர் இராதையோடு வந்து உணவை உண்ணும் ஒரு அதிசய கோவிலை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

krishna

உத்தரபிரதேச மாநிலம், மத்தூர் மாவட்டத்தில் உள்ளது விரிந்தவன் என்னும் ஊர். இங்குள்ள நிதிவனம் என்னும் காட்டுப் பகுதியில் உள்ளது ராங் மகால் என்னும் அதிசய கோவில். இந்த கோவிலிலும் இது இருக்கும் காட்டுப்பகுதியிலும் பல அற்புதங்களும் அமானுஷ்யங்களும் தினமும் நிகழ்ந்த வண்ணமே உள்ளன.

- Advertisement -

இந்த இடத்தை இந்தியாவின் பிருந்தாவனம் என்று அழைக்கின்றனர். மகாபாரதத்தில் கிருஷ்ணர் தனது குழந்தை பருவத்தில் ஆடிப்பாடி விளையாடிய இடமாக இது கருதப்படுகிறது.

nidhivan

நிதிவனம் ஒரு வறண்ட காடு என்பதால் அங்கு நீரை பார்ப்பதே அரிது. அனால் இங்குள்ள மரங்கள் எப்போதும் பச்சை பசேலென காட்சி அளித்து வியப்பில் ஆழ்த்துகிறது. அதோடு இங்குள்ள மரங்கள் எதுவும் நேராக நிற்பது கிடையாது. மாறாக கிருஷ்ணருக்கு மரியாதை செலுத்துவது போல் நன்றாக வளைந்து நிற்கின்றன.

- Advertisement -

இந்தக் காட்டை சுற்றி அதிகப்படியான துளசி செடிகள் வளர்ந்திருக்கின்றன. அந்த துளசி செடிகள் அனைத்தும் ஜோடியாகவே வளர்ந்து நிற்பது மற்றொரு அதிசயம். இந்த துளசி செடிகளை, கிருஷ்ணருடன் சிறுவயதில் வாழ்ந்த கோபியர்கள் என்று நம்புகின்றனர்.

krishna

இந்த காட்டு பகுதியில் உள்ள ராங் மகால் கோவிலில் தினமும் மாலை நேர பூஜை முடிந்த பிறகு, புடவை, படையல் போன்றவை வைக்கப்பட்டு கோவில் சார்த்தப்படுகிறது. இந்த கோவிலில் சந்தன மரத்தில் செய்யப்பட்ட கட்டில் ஒன்று இருக்கிறது. அதன் அருகில் ஒரு பாத்திரத்தில் நீரும், கிருஷ்ணர் பல் துலக்குவதற்கு வேப்பங்குச்சியும் வைப்பதை பக்தர்கள் வழக்கமாக வைத்துள்ளனர். பிறகு அடுத்தநாள் கோவிலை திறந்து பார்க்கும்போது புடவை கலைக்கப்பட்டிருக்கிறது. அதுபோல் படையலும் உண்ணப்பட்டிருக்கிறது.

- Advertisement -

கோவில் சார்த்தப்பட்டபிறகு கோவிலுக்குள் யாரும் செல்வதில்லை. பகலில் இந்த காட்டைச் சுற்றி வரும் விலங்குகள், பறவைகள் கூட இரவில் இந்தப் பகுதியை விட்டு வெளியேறாமல் இருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று. அப்படி இருக்கையில் இங்கு இது போன்ற ஒரு நிகழ்வு தினமும் நடப்பது விசித்திரமாக உள்ளது. தினமும் இரவில் இங்கு கிருஷ்ணரும் இராதையும் வந்து செல்கின்றனர். அவர்களே ஆடையை உடுத்துகின்றனர். படையலையும் உண்ணுகின்றனர் என்று நம்பப்படுகிறது.

radha krishna

அதுமட்டுமல்லாமல் இரவில் இந்த காட்டுக்குள் வளர்ந்திருக்கும் துளசி செடிகள் கோபியர்களாக மாறி கிருஷ்ணர், இராதையுடன் ஆடிப்பாடுவதாக நம்பப்படுகிறது.

மேலும் இரவு நேரங்களில் இந்த காட்டுப்பகுதிக்குள் யாரேனும் நுழைந்து கிருஷ்ணரின் லீலைகளை காண முயன்றால் அவர்கள் குருடாகிறார்களாம் அல்லது மூளை கலங்கி பைத்தியமாகி விடுகிறார்களாம்.  இன்று வரை இந்த கோவிலில் நிகழும் இத்தகைய செயல்கள் விசித்திரமாகவே உள்ளது. எத்தனை ஆச்சரியம்? எண்ணிப்பார்த்தால் வியப்பாகத்தான் உள்ளது. இப்படிப்பட்ட அதிசயமான கோவில்களை பார்க்கும்போது கலியுகத்திலும் கடவுள் இருக்கிறார் என்பதை நம்ப வைக்கிறது. பல ஆராய்ச்சிகள் பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து வந்தாலும் இப்படிப்பட்ட ஆன்மீக நம்பிக்கைகளை நம் மக்கள் உடைத்தெறிய மாட்டார்கள்.

- Advertisement -