வாஸ்து தோஷம் நீங்கி செல்வ சம்பத்துகள் பெற உதவும் குடுவை.

kuduvai
- Advertisement -

ஒருவர் செல்வ செழிப்புடன் வாழ வேண்டுமென்றால், அவருக்கு குபேர பகவானின் அருள் என்பது பரிபூரணமாக தேவைப்படும். அதுமட்டுமல்லாமல் எந்தவித தோஷங்களும் குறைபாடுகளும் இல்லாமல் வாழ்ந்தால்தான் குபேர பகவானின் அருளையும் நம்மால் பெற முடியும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் குபேர பகவானின் அருளை பெறுவதற்கு உதவக்கூடிய குடுவையை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

ஒருவருக்கு நவகிரகங்களால் தோஷம் ஏற்பட்டால் அவருடைய வாழ்க்கையில் பல பிரச்சனைகளை அவர் சந்திக்க நேரிடும். அதேபோல்தான் ஒருவர் இருக்கும் வீட்டில் வாஸ்து குறைபாடுகள் ஏற்பட்டாலும் அதனால் அவருக்கு பல பிரச்சினைகள் ஏற்படும். இந்த பிரச்சனைகள் அனைத்தையும் நீக்குவதற்கும் அதே சமயம் செல்வ செழிப்புடன் வாழ்வதற்கு குபேர பகவானின் அருளை பெறுவதற்கும் நாம் செய்யக்கூடிய தாந்திரீக பரிகாரத்தை தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நமக்கு பஞ்சலோகத்தில் ஆன செம்பு தேவைப்படும் அல்லது மண் குடுவையை உபயோகப்படுத்தலாம். இவை இரண்டில் ஏதாவது ஒன்றை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த இரண்டிற்கு மட்டும்தான் நவகிரகங்களை உள்ளிருக்க கூடிய சக்திகள் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அதே சமயம் வாஸ்து கோளாறுகளையும் நீக்குவதற்கு இவை உதவி புரியும் என்று கூறப்படுகிறது.

இப்பொழுது இந்த குடுவைக்குள் தங்க நிறத்திலான ஐந்து ரூபாய் நாணயங்களை சிறிதளவு போட வேண்டும். மகாலட்சுமி தாயாரின் நாணயங்கள் இருந்தாலும் அதை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். தங்க நாணயங்களாக இருந்தாலும் அதையும் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். பிறகு அமிதிஸ்டு ஸ்டோன் என்று சொல்லக்கூடிய கல் ஆன்லைனில் விற்கப்படுகிறது அல்லது தங்க நகைகள் விற்கும் கடைகளிலும் நாம் இதை கேட்டால் அவர்கள் தருவார்கள். இந்த கல்லை வாங்கி வந்து சிலவற்றை அந்த குடுவையில் போட வேண்டும்.

- Advertisement -

அதற்கு மேலாக ஒரே ஒரு ஜாதிக்காயை வைக்க வேண்டும். இப்படி தயார் செய்த இந்த குடுவையை நம் வீட்டின் வடகிழக்கு மூலையில் வைக்க வேண்டும். குடுவையை மூடக்கூடாது. அது திறந்து தான் இருக்க வேண்டும். இந்தக் குடுவையை யார் கண்ணிற்கும் தெரியாமல் மறைத்து வைக்க வேண்டும். அதாவது வீட்டிற்கு வெளியில் இருந்து வரும் நபர்கள் இந்த குடுவையை பார்க்க கூடாது.

அந்த வகையில் குடுவை தெரியாத அளவிற்கு வேறு ஏதாவது பொருட்களை அந்த இடத்தில் வைத்து குடுவையை மறைத்து விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான வாஸ்து கோளாறுகளும் நீங்கிவிடும். அதே சமயம் நமக்கு இருக்கக்கூடிய நவக்கிரக தோஷங்களும் நீங்கிவிடும்.

- Advertisement -

இவை இரண்டும் நீங்கினால் நாம் எடுத்த செயல்கள் அனைத்திலும் வெற்றியை நம்மால் பெற முடியும். அது மட்டுமல்லாமல் குபேர பகவானின் அருளும் நமக்கு கிடைப்பதால் செல்வ செழிப்பிற்கு எந்தவித குறையும் இருக்காது.

இதையும் படிக்கலாமே: கொடுத்த பணத்தை திரும்ப பெற உதவும் பரிகாரம்.

இந்த அற்புதமான குடுவையை நாமும் நம் வீட்டில் வைத்து அனைத்து விதமான செல்வ செழிப்புகளையும் பெற்று எந்தவித தோஷங்களும் இன்றி நலமுடன் வாழலாம்.

- Advertisement -