இந்த 1 பொருளால் குபேர சம்பத்தை கொட்டிக் கொடுக்க முடியுமா என்ன? இதுவரை நீங்கள் கேள்விப்படாத குறிப்பு.

kuberar
- Advertisement -

ஓடி ஓடி உழைப்பது எதற்காக. கொஞ்சம் பணத்தை சம்பாதித்து சேர்க்க வேண்டும் என்பதற்காக தான். நம்முடைய குழந்தைகள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்காக தான். நம்முடைய குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக தான். ஆனால் இன்றைய சூழ்நிலையில் என்னதான் உழைத்தாலும் பணம் காசு நம் கைக்கு வருவது கிடையாது. அப்படியே 10 ரூபாய் சம்பாதித்து விட்டால், 100 ரூபாய்க்கு செலவு வரிசை கட்டி நிற்கின்றது. குபேர சம்பத்தை பெற சுலபமான முறையில் தாந்திரீக ரீதியாக என்ன செய்வது. இதுவரை நீங்கள் அறியாத இரண்டு புத்தம் புதிய குறிப்புகள் உங்களுக்காக. சுலபமான இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் வாழ்வில் நிறைய நல்ல மாற்றங்கள் நடக்கும்.

முதலாவதாக சொல்லப்பட்டுள்ள குறிப்பு. மிக மிக எளிமையான குறிப்பு. எல்லோர் வீட்டு சமையலறையிலும் இருக்கக்கூடியது இந்த வரமிளகாய் போதும். வீட்டில் இருக்கும் குண்டு வர மிளகாய் அல்லது நீள வரமிளகாய் எது வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள். காம்போடு இருக்கட்டும். 7 வர மிளகாய்களை எடுத்து உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு, குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். வீட்டில் இருக்கும் காரசாரமான பணக்கஷ்டம் அனைத்தும் நீங்க வேண்டும் என்று. அதன் பின்பு ஒரு வெள்ளை சதுர வடிவில் இருக்கும் துணியில் இந்த வரமிளகாயை வைத்து முடிச்சாக கட்டி அப்படியே பணம் வைக்கும் பெட்டியில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்கள் சவுகரியம் தான். எந்த நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்தாலும் சரி. பூஜை அறையில் வைத்து இந்த முடிச்சை கட்டுங்கள். குல தெய்வத்தை வேண்டிக்கொண்டு கட்டுங்கள். பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள். அடிக்கடி மாற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. 6 மாதத்திற்கு ஒருமுறை பழைய மிளகாய்களை தூக்கி கால் படாத இடத்தில் போட்டுவிட்டு புது மிளகாய்களை வைத்தால் போதும். இந்த சுலபமான தாந்த்ரீக பரிகாரம் நீங்கள் நம்ப முடியாத நிறைய மாற்றத்தை பண விஷயத்தில் செய்யும்.

இரண்டாவதாக குபேர சம்பத்து கிடைக்க குபேரனுக்கு உகந்த நெல்லிக்காய் மர பரிகாரம். நெல்லிக்காய் மரத்தில் செய்யப்பட்ட ஒரு பலகை நமக்குத் தேவை. அது சிறிய மரத் துண்டாக இருந்தாலும் சரி, கடையில் சொல்லிவைத்து வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வாங்கிய அந்த மரப்பலகையை முதலில் சுத்தமாக கழுவி விடுங்கள். மரப்பலகையை பூஜை அறையில் வைத்து விட வேண்டும். இந்த மரப்பலகைக்கும் மேலே ஒரு சிறிய வெள்ளி விளக்கு வைத்து அதனுள் நெய் ஊற்றி தீபமேற்றி, இந்த விளக்குக்கு பக்கத்தில் நிவேதனமாக டைமண்ட் கற்கண்டுகள் வைத்து, குபேர பகவானை மனதார நினைத்து வீட்டில் தீபம் ஏற்ற வேண்டும். கற்கண்டுகளை கிண்ணத்தில், தட்டில் வைத்து விடாதீர்கள். அந்த நெல்லி மரத்தின் மேல் தான் கற்கண்டு இருக்கவேண்டும். மரத்தின் மேல் தான் வெள்ளி விளக்கில் நெய் தீபம் போட வேண்டும்.

இந்த தீபத்தை தினமும் ஏற்றி தினமும் குபேர பகவானை நினைத்து வழிபாடு செய்தால், நல்ல பணவரவு இருக்கும். தினமும் இந்த தீப வழிபாடு செய்ய முடியாதவர்கள் வாரம்தோறும் வரக்கூடிய வியாழக்கிழமை அன்று இந்த தீபத்தை ஏற்றினால் போதுமானது.

பண கஷ்டம் தீரும். கடன் சுமை படிப்படியாக குறையத் தொடங்கும். நிவேதனமாக வைத்த கற்கண்டை வீட்டில் இருப்பவர்கள் பிரசாதமாக சாப்பிட வேண்டும். முயற்சி செய்து தான் பாருங்களேன். இரண்டில் ஒரே ஒரு பரிகாரத்தை செய்தாலும் பலன் உண்டு. இரண்டு பரிகாரம் செய்தாலும் பலன் தான். அது அவரவர் விருப்பம். நம்பிக்கையோடு செய்தால் நிச்சயம் நல்ல பலன் உண்டு என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -