சொந்த தொழிலில் கொடி கட்டி பறந்து, சொந்தமாக நிலம் வீடு எல்லாம் வாங்க வேண்டுமானால் இந்த வழிபாட்டை தான் செய்ய வேண்டும். வேண்டிய உடனே கை மேல் பலன் தரக் கூடிய குபேர சூட்டி வழிபாடு.

- Advertisement -

ஒரு மனிதன் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்றால், தன் வாழ்நாளில் உழைத்த அனைத்தையும் முதலீடாக போட்டு தான் ஆரம்பிக்க வேண்டும். எத்தனை சிறிய அளவு தொழிலாக இருந்தாலும் கூட நம்முடைய முதலீடு இல்லாமல் தொடங்க முடியாது. அப்படி தொடங்கிய ஒரு தொழில் மென்மேலும் பெருகினால் தான் நம் குடும்பம் முன்னேற்றம் அடைந்து நாமும் நல்ல முறையில் வாழ முடியும். அப்படி நாம் தொடங்கிய தொழில் நல்ல முன்னேற்றம் அடைந்து நம்முடைய குடும்பமும் நாமும் நல்ல முறையில் உயர இந்த குபேர சுட்டி வழிபாடு ஒரு நல்ல பலனை கொடுக்கும் என்று ஆன்மீகம் சொல்கிறது. அது என்ன அந்த வழிபாட்டை எப்படி செய்வது என்பதை எல்லாம் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த குபேர சுட்டி வழிபாட்டை நாம் இரண்டு வழிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒன்று தொழில் ஸ்தானத்தில் இதை செய்யும் போது வியாபாரம் பெருகி நம்முடைய நிலைமை உயரும். மற்றொரு முறையானது நாம் வீட்டில் இந்த குபேர சுற்றி வழிபாட்டை செய்யும் போது புதிதாக வீடு, நிலம், சொத்து போன்றவற்றை வாங்கக் கூடிய யோகங்களை தரக் கூடியது. இந்த இரண்டில் உங்களுடைய தேவை எதுவோ அதன்படி இந்த வழிபாட்டை செய்து கொள்ளுங்கள். இரண்டு இடங்களிலும் கூட இந்த வழிபாட்டை செய்து கொள்ளலாம்.

- Advertisement -

வாழ்க்கையில் அனைத்து செல்வத்தையும் பெற குபேர சுட்டி வழிபாடு:
குபேரருக்கு உகந்த தினம் வியாழக்கிழமை. இந்த வழிபாட்டையும் வியாழக்கிழமை தான் தொடங்க வேண்டும்.  அதே போல் குபேர வழிபாட்டிற்கு உகந்த நேரம் மாலை நேரம் தான். மாலை 5 மணிக்கு மேல் இந்த வழிபாட்டை செய்து கொள்ளுங்கள். இந்த வழிபாட்டை செய்வதற்கு மஞ்சள் நிறத்தில் பட்டால் ஆன ஒரு துணியை வாங்கிக் கொள்ளுங்கள். அதே போல் குபேரர் படத்தையும் வாங்கி வைத்து கொள்ளுங்கள்.

வியாழன் அன்று மாலை குபேரர் படத்திற்கு சந்தன குங்குமம் பொட்டு வைத்த பிறகு குபேரர் மகாலட்சுமி தாயார் போன்றவரின் படத்திற்கு நல்ல வாசனை மிக்க மலர்களால் அலங்காரம் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் வாங்கி வந்திருக்கும் மஞ்சள் நிற பட்டுத் துணியில் 108 ஒரு ரூபாய் நாணயங்களை வைத்து ஒரு முடிச்சாக போட்டுக் கொள்ளுங்கள். இந்த முடிச்சை ஒரு தட்டில் வைத்து கொள்ளுங்கள். (இதற்கு சில்வர் தட்டை பயன்படுத்த வேண்டாம் ). அந்த முடிச்சிக்கும் சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது குபேரர் படத்திற்கு முன்பாக நெய் தீபம் ஒன்றை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு குபேர விளக்கு வைத்து ஏற்றினால் விசேஷம். இல்லை என்றால் அகல் விளக்கை ஏற்றினாலும் தவறு ஒன்றும் கிடையாது. அதன் பிறகு உங்கள் கையில் மல்லிகை பூவை வைத்துக் கொண்டு நீங்கள் முடிந்து வைத்து அந்த முடிச்சின் மீது ஒவ்வொரு பூவாக போடும் போதும் ஓம் குபேராய நமக என்ற நாமத்தை 108 முறை சொல்ல வேண்டும். இதை தவிர்த்து குபேர அஷ்டோத்திரங்கள் உங்களுக்கு தெரியுமானால் அதையும் படிக்கலாம். இந்த வழிபாட்டை செய்யும் நாளில் அசைவத்தை தவிர்த்து விட வேண்டும்.

இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வரும் நல்ல விருட்சம் அடையும். அதாவது நீங்கள் வியாபாரம் தொழில் செய்யும் இடத்தில் இந்த குபேர பூஜையை செய்தீர்கள் ஆனால் அங்கு உங்கள் தொழில் விருத்தி ஆகும். உங்கள் இல்லத்தில் செய்தால் வீடு நிலம் தொடர்பான சொத்துக்கள் வாங்குவதற்கான யோகத்தையும் தரும்.

இதையும் படிக்கலாமே: நினைத்த ஆசைகள் நிறைவேற வீட்டில் ஏற்ற வேண்டிய தீபம் என்ன தெரியுமா? இந்த தீபம் ஏற்றினால் தீராத ஆசைகள் தீரும்.

இந்த பூஜையை மிகுந்த பக்தியுடனும், நம்பிக்கையுடனும் செய்யும் போது நிச்சயம் கை மேல் பலன் கிடைக்கும் என்பதை கவனத்தில் கொண்டு வழிபாட்டை செய்து பயன் அடையலாம்.

- Advertisement -