மலை போல் செல்வம் கூவிய வேண்டுமென்றால் இந்த குபேரரை வைத்து தான் வணங்க வேண்டுமாம், குபேரரை பற்றி இது வரை தெரியாத அதிசய தகவல்கள்.

kuber gold
- Advertisement -

இப்பொழுதெல்லாம் பெரும்பாலானோர் குபேரரை வைத்து வழிபாடு செய்கிறார்கள். குபேரரை வாஸ்துகாகவும் வைத்து வருகிறார்கள். அதே நேரத்தில் பணவரவிற்காகவும் வைத்து வழிப்படுகிறார்கள். அப்படி வணங்க கூடிய இந்த குபேரில் எந்த குபேரரை வைத்து வணங்கினால் நமக்கு பணவரவானது கிடைக்கும் என்பது போன்ற தகவல்களை இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

செல்வ வளத்தை வாரி வழங்குவது மகாலட்சுமி தாயார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் அவர் தரும் அந்த வளத்தை நமக்கு காப்பாற்றி தக்க வைத்து கொடுப்பது குபேரர் தான். இந்த குபேரரை நம் வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு அப்படி வழிப்பட முடியாதவர்கள் வரவேற்பு அறையில் கூட இவரை வைத்து வணங்கலாம். ஆனால் எப்படி வைத்தாலும் இவர் வடக்கு பார்த்து இருப்பது போல் தான் வைக்க வேண்டும் வேறு எந்த திசையிலும் வைக்கக் கூடாது.

- Advertisement -

பூஜை அறையில் வைத்து வழிபடும் குபேர நம் கட்டை விரல் அளவில் மட்டும் இருந்தால் தான் வழிப்பட வேண்டும். அதற்கு மேல் பெரியதாக உள்ள குபேரரை பூஜை அறையில் வைத்து வழிபடக் கூடாது. பூஜை அறையில் பெரிய குபேரரை வைத்து சரியாக பராமரிக்கவில்லையென்றால் கஷ்டம் தொடருமாம். வரவேற்பறையில் வைக்கும் குபேரர் எவ்வளவு பெரிய குபேரராக இருந்தாலும் வைக்கலாம்.

வீட்டில் செல்வ கடாட்சம் பெருக குபேரன்
பண வரவிற்காக நாம் வைக்க வேண்டிய குபேர பச்சை நிறத்தில் இருக்கும் குபேரர் அல்லது தங்க நிறத்தில் இருக்கும் குபேரர் தான் வைக்க வேண்டுமாம். இந்த குபேரர் இருக்கும் இடத்தில் செல்வ மழை அதிகம் பொழியும் என்றும் சொல்லப்படுகிறது. அது மட்டுமின்றி குபேரரின் வயிற்று பக்கத்தில் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை வைக்க வேண்டும். அந்த ஐந்து ரூபாயில் உள்ள ஐந்து என்ற எண் நம்மை பார்த்தபடி வைக்க வேண்டும்.

- Advertisement -

இப்படி வைத்த இந்த குபேரரை தினமும் வயிற்றுப் பகுதியில் லேசாக தடவி கொடுக்க வேண்டுமாம். அப்படி தடவும் பொழுது அவருடைய தொந்தியானது குலுங்கும். அப்பொழுது அவர் கையில் இருக்கும் மூட்டையிலிருந்து பணம் கொட்டும் என்று ஐதீகம் உள்ளது. எனவே தான் குபேரரை வாங்கி வீட்டில் வைத்திருப்பவர்கள் அவரின் தொப்பையை தடவி கொடுப்பார்கள் இது பலருக்கும் அறிந்த விஷயம் தான். தெரியாதவர்கள் இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இப்படி செய்வதோடு சேர்த்து வயிற்றுப் பகுதியை தடவி கொடுத்த பிறகு நாம் கைகளை தட்டி ஒலி எழுப்ப வேண்டுமாம். இப்படி எழுப்பும் போது குபேரர் மிகவும் சந்தோஷம் அடைவார் என்றும் சொல்லப்படுகிறது. இதனாலும் நம் வீட்டில் செல்வ மழை பொழியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த முறையை தினமும் வீட்டிலிருந்து வெளியே வேலைக்கு செல்லும் பொழுது தவறாமல் செய்து வர வேண்டும். வீட்டில் இருப்பவர்களும் குளித்து முடித்து பூஜை எல்லாம் முடித்த பிறகு இதை செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: உங்க மணி பர்சில் இதை 2 துண்டு வச்சு பாருங்க வராத பணம் கூட வந்து சேரும்! நம்மிடம் பணம் புழங்க பணத்துடன் இருக்க வேண்டியது என்ன?

இனி நீங்களும் பணவரவிற்காகவோ, அல்லது வாஸ்துவிற்காகவோ, பூஜைக்காகவோ எதற்காக குபேரர் வாங்கினாலும் இந்த இரண்டு நிறத்தில் உள்ள குபேரரை வாங்கி வைத்து பாருங்கள். இந்தப் பதிவில் உள்ள குபேரர் குறித்து இந்த தகவல்களில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், நீங்களும் இது போல செய்து உங்கள் வாழ்க்கையை நல்ல வளமாக மாற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -