வியாழக்கிழமைகளில் இந்த தீபத்தை இப்படி ஏற்றிப்பாருங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் செல்வம் படிப்படியாக இரட்டிப்பாவதை நீங்களே கண்கூடாக பார்ப்பீர்கள்.

kubera vilakku
- Advertisement -

செல்வம் பலமடங்கு பெருகவும், நமக்கு தேவையான செல்வத்தை சம்பாதிக்கவும், நாம் சேமித்து வைத்துள்ள செல்வத்தை பாதுகாக்கவும், எப்போதும் நம் வீட்டில் செல்வம் நிலைத்திருக்கவும், நமது வீட்டிற்கு எப்போதும் செல்வத்தை ஈர்க்கும் சக்தி கிடைப்பதற்கும், நாம் முழு மனதுடன் செய்ய வேண்டிய ஒரு விசேஷ விளக்கு பூஜையை பற்றி இப் பதிவில் பார்க்க இருக்கிறோம். என்ன செய்ய வேண்டும் அதை எப்படி செய்யதால் செல்வத்தை நம்மிடம் தக்க வைக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து பயணிப்போம்.

kuberan

செல்வச்செழிப்பான கடவுள் குபேர கடவுள். அவர் மற்ற கடவுள்களின் செல்வங்களை எல்லாம் பாதுகாத்து இரட்டிப்பாக பெருக்கி கொடுப்பார். குபேர கடவுளிடம் மட்டுமே செல்வம் குறையாது பெருகிக் கொண்டே இருக்கும். இவ்வாறு நம்மிடமும் செல்வம் பெருகிக் கொண்டே இருக்கவும் நம்மிடம் இருக்கும் செல்வத்தை குபேர கடவுள் பாதுகாத்து அதனை பல மடங்காக பெருகி கொடுக்கவும் நாம் குபேரருக்கு செய்ய வேண்டிய ஒரு உகந்த வழிபாடுதான் இந்த மகா லஷ்மி குபேர விளக்கு பூஜை வழிபாடு.

- Advertisement -

குபேரருக்கு உகந்த நாளான வியாழக்கிழமை அன்று இந்த விளக்குப் பூஜையை நாம் செய்ய வேண்டும். இந்த விளக்கை ஏற்ற நாம் குபேர விளக்கை பயன்படுத்த வேண்டும். குபேர விளக்கு பூஜை பாத்திரங்கள் விற்கும் கடைகளிலும் அல்லது கோவில்களிலும் கிடைக்கும். உங்களுக்கு குபேர விளக்கு கிடைக்கவில்லை என்றாலும் அகல் விளக்கில் விளக்கை ஏற்றி இந்த பூஜையை பின்பற்றலாம்.

kubera deepam

குபேர விளக்கை தினமும் பூஜை அறையில் ஏற்றி வரலாம். குபேரருக்கு உகந்த திசை வடக்கு. ஆகையால் பூஜை அறையில் வடக்கு திசை நோக்கி ஏற்றவேண்டும். ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலை 5 லிருந்து 8 மணிக்குள் இந்த விளக்கை ஏற்றினால் அது மிகவும் விசேஷம்.

- Advertisement -

முதலில் குபேர விளக்கிற்கும் குபேர விளக்கு வைக்கும் மனை அல்லது தட்டிற்க்கு ஒற்றைப்படையில் மஞ்சள் குங்கும பொட்டு வைக்க வேண்டும். பிறகு குபேர விளக்கு வைக்கும் தட்டில் சிறிதளவு பச்சரிசியை வைக்கவேண்டும். பச்சரிசி மகாலக்ஷ்மியின் அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது. குபேரருக்கு விசேஷமான எண் 5. எனவே ஐந்து ரூபாய் நாணயத்தை பச்சரிசியில் வைக்க வேண்டும்.

5-rupee-coin

குபேர விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து குபேர திரியினால் அதாவது குபேரருக்கு உகந்த நிறம் பச்சை. அதனால் பச்சை நிறத்தில் உள்ள திரியால் குபேர விளக்கு ஏற்றினால் மிகவும் சிறந்த பயனளிக்கும். பச்சை நிற தரி இல்லை எனில் பஞ்சு திரி வைத்தும் விளக்கு ஏற்றலாம். குபேர விளக்கில் ஐந்து கற்கண்டு சேர்க்கவேண்டும். கற்கண்டு சேர்ப்பதனால் பணவரவு அதிகரிக்கும். விளக்கைச் சுற்றி வாசனை மலர்கள் வைக்க வேண்டும்.

குபேர விளக்கை ஏற்றிய பின்னர் நம் வீட்டின் நிலை வாசலில் இடதுபுறம் வடக்கு நோக்கி வைக்க வேண்டும். வடக்கு திசை தெரியவில்லை எனில் கிழக்கு நோக்கியும் ஏற்றலாம். கிழக்கு திசை சூரிய பகவானுக்கு உகந்த திசை. நாம் எந்த கடவுளை நினைத்து விளக்கு ஏற்றினாலும் கிழக்கு திசை நோக்கி ஏற்றினால் சூரிய பகவான் அதற்கு உரிய கடவுளின் அருளை நமக்கு பெற்றுத் தருவார். ஏன் இந்த விளக்கை நிலை வாசலில் ஏற்ற வேண்டுமென்றால் குபேரர் மற்ற கடவுளின் செல்வங்களுக்கு எல்லாம் பாதுகாவலர். அவரை வாசலில் வைத்து பூஜித்தால் நமது செல்வத்திற்கும் பாதுகாவலாக இருப்பார்.

guberan

விளக்கை ஏற்றும்போது குபேர மந்திரத்தை மனதில் உச்சரித்துக் கொண்டு ஏற்றினால் மிகவும் நல்லது ஸ்ரீமகாலஷ்மி குபேராய நமஹ எனும் குபேர மந்திரத்தை மனதில் பக்தியுடன் உச்சரித்து கொண்டே இந்த விளக்கை ஏற்றி வர உங்கள் குடும்பத்தில் பண வரவு செழிப்புடன் வந்து கொண்டிருக்கும். ஒவ்வொரு வியாழக்கிழமையும் மாலை 5 லிருந்து 8 மணிக்குள் உங்கள் வீட்டு நிலை வாசற் படியில் இவ்வாறு வடதிசை நோக்கி குபேர விளக்கு ஏற்றி வர உங்கள் வீட்டில் எப்போதும் செல்வம் குறையாமல் பெருகிக் கொண்டே இருக்கும்.

- Advertisement -