குபேர அதிர்ஷ்டம் பெருக வீட்டில் செய்ய வேண்டிய 5 அருமையான வீட்டு குறிப்புகள். இவற்றைத் தொடர்ந்து செய்து வந்தால் வீட்டில் பண மழை பொழியவும் வாய்ப்பருக்கிறது

cash
- Advertisement -

என்னதான் ஓடிஓடி உழைத்தாலும் வருமானம் வாங்கிய அடுத்த நொடியே அதற்கான செலவுகளும் நம்மிடம் வந்து விடும். ஒரு சில சமயங்களில் வருமானத்தை விடவும் செலவுகள் தான் அதிக அளவு இருக்கும். அதுபோல் திடீர் செலவுகளான மருத்துவ செலவு, குழந்தைகளின் கல்வி செலவு, வண்டி வாகனம் இவ்வாறான எதிர்பாராத செலவுகளால் நம் கையில் இருக்கும் பணம் எளிதாக தண்ணீர் போல் கரைந்து விடுகிறது. இவ்வாறு வருமானம் அனைத்தும் செலவாகிக் கொண்டே இருந்தால் எப்படி நாம் சேமிக்க முடியும் என்ற யோசனை அனைவர் மனதிலும் ஓடிக் கொண்டிருக்கும். இவ்வாறு நாம் சம்பாதித்த பணம் வீட்டில் தங்க வேண்டும் என்றால் அதற்கு குபேரரின் அருள் முழுமையாக நமக்கு கிடைக்க வேண்டும். அவ்வாறு குபேரரின் அருளைப் பெற நாம் வீட்டில் செய்ய வேண்டிய எளிய குறிப்புகளை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

kubera

இன்றைய பொருளாதார ரீதியாக பார்த்தோம் என்றால் ஒவ்வொரு குடும்பத்திலும் கஷ்டம், நஷ்டம் இவை இரண்டும் கலந்த வாழ்க்கை தான் இருக்கிறது. இவை அனைத்தையும் கடந்து தான் நம் வாழ்வை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்ல வேண்டும். இவ்வாறான கஷ்டங்கள் தீர்ந்து வீட்டில் குபேரனின் அருள் நிலைத்திருக்க வீட்டில் நாம் செய்யும் சிறுசிறு விஷயங்களும் பயனளிக்கக் கூடியதாக இருக்கிறது. அவ்வாறு குபேரனின் அருள் கிடைக்க வியாழக்கிழமை தோறும் குபேரபூஜை செய்வதோடு மட்டுமல்லாமல் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து குறிப்புகளையும் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனை பெற முடியும்.

- Advertisement -

குறிப்பு: 1
வாரந்தோறும் வியாழக்கிழமையன்று செய்யக்கூடிய குபேர பூஜையுடன் சேர்த்து குருபகவானையும் வழிபட்டு வந்தால் பண தடைகள் நீங்கி வீட்டில் எப்பொழுதும் தனம், தானியம் நிறைந்து காணப்படும்.

guru-bhagavan

குறிப்பு: 2
வீட்டின் வடக்கு திசையில் ஒரு சிறிய மண் பானை வைத்து அதில் சில்லரை நாணயங்களைப் போட்டு வைக்க வேண்டும். அவ்வாறு செய்ய முடியவில்லை என்றாலும் சமையலறையிலாவது சிறிய மண் பானையை வைத்து கடைக்கு சென்று வரும் பொழுது மீதியாக கிடைத்த சில்லறை நாணயங்களையும் அல்லது கையிலிருக்கும் சில்லறைகளையும் இதில் போட்டு வைப்பதன் மூலம் நமது வீட்டில் எப்பொழுதும் குபேரனின் அருள் கிடைத்து பண வருகை அதிகரிக்கும்.

- Advertisement -

குறிப்பு: 3
மிகுந்த வாசனையுடன் இருக்கும் ஆன்மீக ரகசிய பொருளான ஏலக்காயை எப்பொழுதும் வீட்டில் வாங்கி வைத்திருக்க வேண்டும். ஏலக்காயின் விலை அதிகமாக இருக்கிறது என்பதற்காக அதனை வாங்குவதை தவிர்த்து விடுவதென்பது நமக்கு வரவிருக்கும் அதிர்ஷ்டத்தை நாமே தட்டிக் கழிப்பதற்கு சமமாகும். எனவே கையில் எவ்வளவு பணம் இருக்கிறதோ அதற்கு ஏற்றார் போல் குறைந்த அளவு ஏலைக்காயை வாங்கி நமது வீட்டில் எப்பொழுதும் வைத்திருக்க வேண்டும். இந்த தெய்வீக பொருளான ஏலக்காய்க்கு பணத்தை ஈர்க்கும் சக்தி அதிகமாக இருக்கிறது.

kubera-panai3

குறிப்பு: 4
வீட்டில் எப்பொழுதும் தனம் தானியத்திற்கு குறைவில்லாமல் இருக்க வேண்டுமென்றால் ஏதேனும் ஒரு சில்லரை நாணயத்தை நமது மளிகை டப்பாவில் போட்டு வைக்க வேண்டும். இதற்காக அந்த சில்லரை நாணயத்தை உப்பு நீரில் சுத்தமாக கழுவி விட்டு அதற்குப் பிறகு அரிசி பானை, பருப்பு, புளி டப்பா அல்லது அஞ்சறைப் பெட்டியிலும் வைத்துவிடலாம்.

anjarai-petti1

குறிப்பு: 5
நமது பூஜை அறையில் காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றுவதற்கு முன்னர் விளக்கு வைக்கும் தட்டின் மீது ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை வைத்து விட்டு, அதன் மீது விளக்கை வைத்து தீபம் ஏற்றி இறைவனை வழிபட்டு வருவதன் மூலம் நமது வீட்டிலிருக்கும் பணத்தடை, வருமான தடை நீங்கி அள்ள அள்ள குறையாத செல்வம் சேர்ந்துகொண்டே இருக்கும்.

- Advertisement -