குபேர வசியம் உண்டாக செய்ய வேண்டியது

kuberar dheepam
- Advertisement -

ஒரு வீட்டில் பொருளாதார நிலை மேன்மையாக இருந்தாலே பல்வேறு பிரச்சனைகள் சுமுகமாக தீர்ந்து விடும். ஏன் பல பிரச்சனைகள் உருவாகாமல் கூட இருக்கும். பணம் மட்டும் இருந்தால் பிரச்சனை ஏதும் வராதா? என்று கேட்கலாம். பணம் இல்லாமல் பிரச்சனை வருமா வராதா என்பதை விட பணம் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்பது மட்டும் உண்மை.

அத்தகைய பணவரவு தாராளமாக இருக்க வேண்டுமெனில் நமக்கு பணத்திற்கு அதிபதியான தெய்வங்களின் அனுகிரகம் நிச்சயமாக தேவை. அதில் மகாலட்சுமி தாயார் குபேரர் போன்றவை முக்கியமானவர்கள். இப்போது ஆன்மிகம் குறித்த இந்த பதிவில் குபேரர் நம் வீட்டில் நிரந்தரமாக தங்கி பணமழை பொழிய என்ன செய்ய வேண்டும் என்பதை தான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

குபேர வசியம் உண்டாக

வீட்டில் மகாலட்சுமி தாயாரின் அனுக்கிரகம் கிடைக்க நாம் சில விஷயங்களை பின்பற்ற வேண்டும். அதே போல குபேரர் நம் வீட்டில் தங்கவும் சில வழிமுறைகளை நாம் கடைபிடிக்க வேண்டும். அதைப் பற்றி தான் இப்போது தெரிந்து கொள்ளப் போகிறோம். முதலாவதாக குபேரரின் படம் நம் பூஜை அறையில் கட்டாயமாக இருக்க வேண்டும்.

அடுத்து குபேராய நமக, எக்க்ஷ ராஜாய நமக என்ற இந்த மந்திரத்தை உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஜெபித்துக் கொண்டே இருக்க வேண்டும். இத்துடன் இந்த மந்திரத்தை சொல்லி ஒரு எளிய வழிபாட்டு முறையும் நாம் செய்ய வேண்டும். ஒரு தாம்பாள தட்டில் சில்லறை காசுகளை நிரப்பிக் கொள்ளுங்கள். அதன் மேல் வெற்றிலை பாக்கு அல்லது வெறும் வெற்றிலை கூட வைக்கலாம்.

- Advertisement -

இப்போது கையில் நல்ல மனம் மிக்க சுத்தமான குங்குமத்தை எடுத்துக் கொண்டு ஓம் எக்க்ஷராஜாய நமக என்ற மந்திரத்தை 54 முறை சொல்லி குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த முறையில் தினமும் கூட அர்ச்சனை செய்யலாம். தினமும் செய்ய முடியாதவர்கள் வியாழன் வெள்ளி போன்ற நாட்களில் செய்வதை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

பூஜை செய்த இந்த குங்குமத்தை தினமும் நெற்றியில் இட்டு கொள்ளுங்கள். காலையில் எழுந்து வீட்டின் கதவை திறக்கும் போது குபேரரை நினைத்துக் கொண்டு குபேரரின் இந்த மந்திரத்தை சொல்லி திறந்தால் குபேரர் வசியம் உண்டாகும். அத்துடன் நிலை வாசலில் இரண்டு குபேர தீபம் ஏற்ற வேண்டும்

- Advertisement -

அதற்கு இரண்டு குபேர விளக்கை வைத்து நெய் ஊற்றி மஞ்சள் நிற திரி போட்டு குபேரரை நினைத்து தீபம் ஏற்ற வேண்டும். இந்த தீபத்தையும் தினமும் நெய் ஊற்றி ஏற்ற முடியவில்லை என்றாலும் வியாழன், வெள்ளி போன்ற முக்கியமான நாட்களில் ஏற்றங்கள் வீட்டில் குபேர சம்பத்து நிச்சயம் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே: சூரிய பகவானை வணங்கும் முறை

குபேர சம்பத் நமக்கு கிடைத்துவிட்டாலே தாயாரின் அனுக்கிரகமும் வந்துவிடும் இந்த இரண்டு பேரில் அனுகிரகம் ஒருவருக்கு இருந்தால் அவர்கள் வாழ்க்கையில் எந்த குறையும் இல்லாமல் சுபிட்சமாக நல்ல பணவரவுடன் ஆனந்தமாக வாழ்வார்கள் என்று சொல்லப்படுகிறது. குபேர வசியம் ஆகக்கூடிய இந்த வழிப்பாட்டு முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நம்பிக்கையுடன் செய்து பலன் பெறுங்கள்.

- Advertisement -