தினம் தினம் குடித்து விட்டு வரும் கணவரால் நிலை குலைந்து நிற்கும் பெண்கள் மனம் தளராமல் ஒரே ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்தால் போதும். இனி குடிக்கும் திசை பக்கம் கூட உங்கள் கணவர் போக மாட்டார்.

bhairavar sad lady
- Advertisement -

இன்று பெருமளவு குடும்பங்கள் பாதிக்கப்படுவது இந்த குடியால் தான். குடியால் அழிந்த குடும்பங்கள் எத்தனையோ. அவையெல்லாம் எண்ணிக்கையில் அடங்காதவை. அதிலும் இந்த குடியின் பிடியில் சிக்கிய கணவன்களின் பிடியில் சிக்கித் தவிக்கும் மனைவிகளின் நிலைமை படு மோசம். இவர்களின் குடும்பம் பிள்ளைகளின் எதிர்காலம் அனைத்துமே கேள்விக்குறி தான். இவற்றை எல்லாம் சரி செய்வதற்கும் ஆன்மீகம் ஒரு பரிகாரத்தை நமக்கு தந்திருக்கிறது அதைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

கணவரின் குடியை நிறுத்த மனைவி செய்ய வேண்டிய பரிகாரம்

இந்த தலைப்பை படித்த உடனே உங்களுக்கு தோன்றலாம் குடியை நிறுத்த கூட பரிகாரம் உண்டா இதை செய்வதனால் மட்டும் அவர்கள் குடியை நிறுத்தி விடுவார்களோ, எத்தனையோ செய்தும் நிறுத்தாதவர்கள் இந்த பரிகாரத்தின் மூலம் எப்படி நிறுத்துவார்களாபோன்ற கேள்விகள் உங்களுக்கு எழலாம். ஆனால் இந்த பரிகாரத்தின் மூலம்நல்ல பலன் அடையலாம் என்று சொல்லப்படுகிறது. எத்தனையோ முயற்சிகளை செய்த நீங்கள் இந்த ஒரு சிறு முயற்சியும் செய்து பார்க்கலாம் தானே வாங்க இப்போ பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை நாம் எந்த கிழமையில் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் இதை காலபைரவர் ஆலயத்தில் செய்ய வேண்டும். அதற்கு நாம் ஒரே ஒரு பொருளை கடையில் வாங்க வேண்டும். அது உங்கள் கணவர் குடிக்கும் ரகத்தின் பாட்டிலை யாரிடமாவது காசு கொடுத்து வாங்கி கொள்ளுங்கள். இது கொஞ்சம் சங்கோஜமாக தான் இருக்கும். நம் குடும்ப நலனை கருத்தில் கொண்டு சிரமம் பாராமல் செய்யுங்கள்.

இந்தபாட்டிலை கால பைரவர் ஆலயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். ஒருவேளை உங்கள் வீட்டின் அருகில் இல்லை என்றாலும் கொஞ்சம் சிரமப்பட்டு கோவில் எங்கு உள்ளததோ அங்கு கொண்டு சென்று காலபைரவர் கோவிலில் ஐயரிடம் கொடுத்து பைரவரின் பாதத்தில் வைத்து வாங்கிக் கொள்ளுங்கள். இதை செய்த ஐயருக்கு கொஞ்சம் அதிகமான அளவில் காணிக்கை கொடுங்கள். இதுவும் பரிகாரத்தில் சேர்ந்தது தான்.

- Advertisement -

இதை அப்படியே வீட்டிற்கு கொண்டு வந்து மாலை உங்கள் கணவர் வந்தவுடன் அவரை இந்த பாட்டில் வைத்து மூன்று முறை திருஷ்டி சுற்றுவது போல சுற்றுங்கள். ஒருவேளை அவர் நிலை தவறி வந்திருந்தாலும் கூட படுக்க வைத்து கூட சுற்றலாம். இதை சுற்றிய பிறகு கொண்டு சென்று அரச மரத்தடியில் புதைத்து விட்டு வந்து விட வேண்டும் அவ்வளவு தான் பரிகாரம். இந்த பரிகாரத்தை ஒரே ஒரு முறை செய்தாலே போதும் உங்கள் கணவரிடம் அதிகமான மாறுதல்களை காண முடியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கலாமே: குடும்பத்தில் சண்டை சச்சரவு குறைந்து, ஒற்றுமை அதிகரிக்க வியாழக்கிழமை அன்று இந்த கோவிலுக்கு போங்க.

இந்த பரிகாரமானது கணவனுக்கு மனைவி செய்ய வேண்டியது மற்றவர்கள் இதை செய்யக் கூடாது. இதையும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இது போல ஒரு பரிகாரம் செய்தால் சரியாகுமாஎன்று உங்களுக்கும் தோன்றலாம் கேலி செய்யலாம். ஆனால் இந்த ஒரு பரிகாரம் குடியை நிறுத்தும் என்றால் ஒருமுறை முயன்று பார்ப்பதில் தவறில்லையே. நம்பிக்கை இருந்தால் முயற்சி செய்து பாருங்கள் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

- Advertisement -