குடும்ப சண்டைகள் தீர எளிய பரிகாரம்

karupooram
- Advertisement -

எல்லோ குடும்பத்திலும் சண்டை வருவது என்பது இயல்பான ஒரு விஷயம் தான். ஆனால் சில குடும்பங்களில் ஒரு நல்ல விசேஷம் நடந்தால் போதும், உடனடியாக அடுத்த ஒரு சில நாட்களில் பெரிய சண்டை வரும். குடும்பத்தோடு சேர்ந்து வாய்விட்டு பேசி சிரித்தால் அடுத்த சில மணி நேரங்களில் சண்டை வந்துவிடும்.

இயல்பாக வரக்கூடிய சண்டை என்பது வேறு. சந்தோஷமாக இருந்தாலே அடுத்து சண்டை வந்துவிடுகிறது என்பது வேறு. அதாவது வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் கலந்து தான் வரும் என்று சொல்லுவார்கள். அதிகமாக சிரித்தால், நீ அழ போகிறாய் என்று பெரியவர்கள் சொல்லி நாம் கேள்விப்பட்டது உண்டு.

- Advertisement -

சந்தோஷம் வரும் போது துக்கம் சேர்ந்து வருவதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் சில குடும்பங்களில் அந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்து குடும்ப உறவுகளுக்குள் விரிசலை ஏற்படுத்தி விடும். அப்படி ஒரு பிரச்சனை உங்கள் குடும்பத்தில் வராமல் இருக்க குடும்பத்தில் ஒற்றுமை நிலவ செய்ய வேண்டிய பரிகாரம்.

குடும்ப ஒற்றுமைக்கு செய்ய வேண்டிய பரிகாரம்

வாரத்தில் ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்து விட்டால் உங்கள் குடும்பத்தில் பெரிய அளவில் சண்டை சச்சரவுகள் வந்து பிரச்சனைகள் ஏற்படாது. குடும்ப உறவுகள் பிரியாது. ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறு மணிக்கு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, இறைவனை வழிபாடு செய்து விடுங்கள்.

- Advertisement -

பிறகு ஒரு சின்ன கிண்ணத்தில் கட்டி கற்பூரத்தை ஏற்றி கொள்ளவும். அந்த கட்டி கற்பூரத்தில் இரண்டு பிரியாணி இலைகளை போட்டு விடுங்கள். கூடவே இரண்டு கிராம்பு போட்டு பொசுக்கி விடுங்கள். இதிலிருந்து வெளியே வரக்கூடிய புகையை வீடு முழுவதும் காண்பியுங்கள். வீட்டில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜியை எல்லாம் இந்த புகையானது பொசுக்கி விடும்.

அதுமட்டுமில்லாமல் வீட்டில் இருப்பவர்களுடைய மன அழுத்தத்தையும் இந்த புகை குறைப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இதனால் எப்போதுமே எரிந்து எரிந்து விழுபவர்கள் கூட அவர்களுடைய கோபங்கள் தணிந்து நிதானமாக பேசுவார்கள். வாரத்தில் ஒரு நாள் மட்டும் நீங்கள் இந்த பரிகாரத்தை செய்யுங்கள் போதும். பிறகு உங்கள் குடும்பத்தில் ஏற்படும் நல்ல மாற்றங்களை நீங்களே உணர்வீர்கள்.

- Advertisement -

அதேபோல தினமும் உங்களுடைய வீட்டில் பூஜையறையில் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்யும் வழக்கத்தை வைத்துக் கொள்ளுங்கள். அந்த சூடத்திற்கு, சூடத்தில் இருக்கும் நெருப்பிற்கு நெகட்டிவ் எனர்ஜியை அழிக்கக்கூடிய சக்தி உள்ளது. எந்த ஒரு வீட்டில் தினமும் விளக்கு ஏற்றி கற்பூர ஆரத்தியை இறைவனுக்கு காண்பித்து வழிபாடு செய்கிறார்களோ அந்த வீட்டில் எந்த ஒரு கெட்ட சக்தியும் தங்காது. எதிர்பாராத துன்பங்கள் நம் குடும்பத்தை நெருங்காமல் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: நவராத்திரியில் மகாலட்சுமி தாயாரை இப்படி வழிபாட்டால் வீட்டில் செல்வ வளத்திற்கு குறைவே இருக்காது

கற்பூரம் என்றால் மெழுகு கற்பூர வழிபாட்டை மேற்கொள்ள வேண்டாம். கட்டி கற்பூரம் கடைகளில் கிடைக்கும். அது மெழுகு கற்பூரத்தை விட கொஞ்சம் விலை கூடுதலாக இருக்கும். அந்த கட்டி கற்பூரத்தை வாங்கி வைத்து சின்ன சின்ன துண்டுகளாக உடைத்து தினமும் வழிபாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆன்மீகம் சார்ந்த இந்த எளிமையான வழிபாட்டு முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -