தீராத கஷ்டம் குடும்பத்தை துரத்தி துரத்தி அடித்தால், இதை மட்டும் ஒரு முறை செய்ய மறக்காதீங்க. இது உங்கள் குடும்பத்தை காப்பாற்றி கஷ்டத்தில் இருந்து மீட்டுக் கொண்டு வந்து கரை சேர்க்கும்.

pray
- Advertisement -

நடப்பவை எல்லாம் நன்மைக்கே. எந்த ஒரு காரியமும், எந்த காரணமும் இல்லாமல் நம்முடைய வாழ்க்கையில் நடப்பது கிடையாது. நாம் முன் ஒரு காலத்தில் அடுத்தவர்களுக்கு செய்தது, பின்னால் நமக்கே திரும்பும். அவ்வளவுதான். வினை விதைத்தவன் வினையை அறுத்தே ஆக வேண்டும். ஆகவே கஷ்டங்கள் எதனால் வந்தது, எப்படி வந்தது என்று அலசி ஆராய்வதை விட்டுவிட்டு வந்த கஷ்டத்திலிருந்து எப்படி வெளி வருது என்று சிந்திப்போம். தீராத துன்பம் ஏதோ ஒரு துயரம் வீட்டில் வந்துவிட்டது. அந்த பிரச்சனையில் இருந்து வெளிவர முடியவில்லை. என்னதான் செய்வது என்று குழம்பிக் கொண்டிருப்பவர்களுக்காக ஆன்மீகம் சொல்லும் ஒரு எளிய பரிகாரம் இதோ உங்களுக்காக.

கஷ்டத்தை தீர்ப்பதற்கு செலவே இல்லாத ஒரு பரிகாரம்னா அது இதுதாங்க. இது பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் கஷ்டம் என்று வரும்போது அது நமக்கு நினைவுக்கு வராது. அது என்ன பரிகாரம் தெரியுமா. சமுத்திரத்தில் நீராடுவது.

- Advertisement -

குடும்ப கஷ்டத்தை தீர்க்கும் பரிகாரம்:
உடனடியாக சமுத்திரத்திற்கு அருகில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலுக்கு குடும்பத்தோடு செல்லுங்கள். உங்களுடைய இஷ்டம் தான். இந்த கோவில், அந்த கோவில் என்று சொல்ல வரவில்லை. எந்த கோவிலாக இருந்தாலும் சரி அந்த கோவிலுக்கு சென்று முதலில் சமுத்திரத்தில் நன்றாக மூழ்கி குளித்து விடுங்கள். உங்களை பிடித்த பீடை அனைத்தும் நீங்கும்.

பிறகு அந்த சமுத்திரத்திற்கு அருகில் இருக்கும் இறைவனை மனதார வழிபாடு செய்யுங்கள். உங்களுடைய மனதில் இருக்கும் கஷ்டங்களை எல்லாம் சொல்லுங்கள். வழிபாட்டை முடித்துவிட்டு ஒரு நாள் இரவு அந்த கோவிலிலேயே தங்கி விட்டு, வீடு திரும்பும் போது கடலில் இருந்து கொஞ்சமாக தீர்த்தத்தை ஒரு பாட்டிலில் எடுத்து வீட்டிற்கு வரவும். அந்த கடல் தீர்த்த தண்ணீரில் மஞ்சள் பொடி போட்டு, நன்றாக கலந்து வீடு முழுவதும் தெளித்து விடலாம். அப்படி இல்லை என்றால் இந்த தண்ணீரை நிறைய தண்ணீரில் ஊற்றி கலந்து அந்த தண்ணீரைக் கொண்டு வீட்டை கழுவி விடலாம். வீட்டை மாப் போட்டு விடலாம்.

- Advertisement -

வீட்டை முழுமையாக சுத்தம் செய்த பிறகு பூஜையறையில் குலதெய்வத்தை நினைத்து குடும்பத்தோடு சேர்ந்து குலதெய்வ வழிபாடை செய்ய வேண்டும். அந்த வழிபாட்டில் உங்களுடைய பிரச்சனையை தெய்வத்திடம் சொல்லி முறையிடுங்கள். இந்த கஷ்டத்திலிருந்து நான் எப்படியாவது வெளிவர வேண்டும் என்று. இந்த வழிபாட்டை செய்தாலே உங்கள் பிரச்சினையில் பாதி முடிந்து விடும்.

இதையும் படிக்கலாமே: மணி பர்சில் இந்த வார்த்தையை இப்படி மட்டும் எழுதி வச்சுக்கிட்டா போதும். பணம் எப்போதும் உங்கள் கையில் தாராளமாக தாண்டவம் ஆடும்.

பெரிய பாரம் குறைந்தது போல தோன்றும். பிறகு படிப்படியாக எல்லா பிரச்சனைகளும் சரியாகிவிடும். இது ஒரு எளிமையான பரிகாரம் தான். நம்பிக்கை உள்ளவர்கள் கஷ்டத்தில் இருக்கும்போது இதை நினைவு வைத்து செய்து பாருங்கள். நிச்சயம் நல்ல மாற்றம் தெரியும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -