தூங்க செல்வதற்கு முன்பு நிலை வாசலுக்கு வெளியில் இந்த 1 பொருளை போட்டு விட்டு தூங்க சென்றால், குடும்பத்திற்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும். அடுத்த தலைமுறையையும் சேர்த்து வாழ வைக்கும் பரிகாரம்.

nila-vasal1
- Advertisement -

நம்முடைய குடும்பம் ஒவ்வொரு நாளும் சந்தோஷமாக இருக்க வேண்டும். நம்முடைய சந்ததி தழைக்க வேண்டும். பிறகு நம்முடைய பேரன் பேத்திக்கு திருமணம் நடக்க வேண்டும். அவர்களுக்கு பிள்ளை குட்டிகள் என்று இப்படி பல தலைமுறைக்கும் நம்முடைய குடும்பம் இந்த பூலோகத்தில் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்றால் தினமும் நாம் என்ன பரிகாரத்தை செய்ய வேண்டும் என்பதை பற்றிய ஒரு சிறு குறிப்பை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். நாம் நன்றாக வாழ வேண்டும் என்றாலும் சரி, நம் வாரிசுகள் நன்றாக இருக்க வேண்டும் என்றாலும் சரி, பரிகாரம் செய்வதை விட அடுத்தவர்களுக்கு பாவம் விளைவிக்க கூடிய எந்த செயலையும் செய்யக்கூடாது.

பாவமே செய்யாமல் ஒரு மனிதனால் வாழ முடியுமா என்று கேட்டால் நிச்சயம் அது முடியாது. ஆனால் அந்த பாவத்தை தெரிந்து அறிந்து அடுத்தவர்களுக்கு நாம் செய்யும்போது அதன் மூலம் ஏற்படக்கூடிய விளைவுகள் நம்மை தாக்குகின்றதோ இல்லையோ நமக்கு அடுத்து வரக்கூடிய வாரிசுகளை நிச்சயமாக தாக்கும். நம்முடைய குடும்பம் நம்முடைய தலைமுறை கஷ்டப்படுவதற்கு நாம் செய்யக்கூடிய பாவமும் நிச்சயம் ஒரு காரணமாக அமைந்துவிடும். ஆக பாவம் செயல்களை செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். புண்ணியம் செய்கின்றோமோ செய்யவில்லையோ அது அப்பாற்பட்ட விஷயம்.

- Advertisement -

அறிந்தோ அறியாமலோ செய்த பாவத்திற்கு பிராயசித்தம் தரும் வகையில் தான் இந்த பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது. இந்த பரிகாரத்திற்கு நாம் பயன்படுத்தப் போகும் பொருள் கருப்பட்டி. இனிப்பு சுவையில் நிறைய பொருட்கள் நம் வீட்டில் இருக்கும். சர்க்கரை வெள்ளம் நாட்டு சர்க்கரை என்று நிறைய பொருட்கள் இருந்தாலும் இந்த பரிகாரத்திற்கு கருப்பட்டியை பயன்படுத்துங்கள்.

பொதுவாகவே குடும்ப தலைவி தான் எல்லா வேலையையும் முடித்துவிட்டு வாசல் கதவு பூட்டி இருக்கிறதா என்பதை பார்த்துவிட்டு இரவு தூங்கச் செல்வார்கள். அந்த சமயம் வாசல் கதவை திறந்து சிறிது கருப்பட்டியை வாசலுக்கு வெளிப்பக்கத்தில், இரண்டு பக்கத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக தூவி விடுங்கள். (ஆண்கள் இந்த பரிகாரத்தை செய்தாலும் தவறு கிடையாது.)

- Advertisement -

இரவு நேரத்தில் எறும்பு வண்டுகள் என்று வாயில்லா ஜீவன்கள் வந்து அந்த உணவினை சாப்பிட்டு விட்டு செல்லும். தினமும் நீங்கள் இந்த இனிப்பு சுவை நிறைந்த கருப்பட்டியை நிலை வாசலில் போட்டு வரும் வழக்கத்தை கொண்டு வாருங்கள். இரவு நேரத்தில் நீங்கள் தூவும் அந்த கருப்பட்டி நிச்சயமாக காலையில் இருக்காது. ஏதாவது ஒரு ஜீவ ராசி இரவு நேர பசிக்கு அதை எடுத்துக் கொண்டு சென்றிருக்கும். இந்த இனிப்பு சுவை நிறைந்த பொருளை வாயில்லா ஜீவனுக்கு தினமும் உங்கள் கையால் தானமாக போட்டு வரும் பட்சத்தில் அந்த வாயில்லா ஜீவனின் வாழ்த்து உங்கள் குடும்பத்தை வந்து சேரும்.

அறிந்து அறியாமலும் நீங்கள் செய்த பாவத்திற்கான மன்னிப்பும் ஏதாவது ஒரு வகையில் கிடைத்துவிடும். இந்த ஒரு சின்ன பரிகாரத்தை செய்வதன் மூலம் உங்களுடைய தலைமுறையை வாழ்வாங்கு வாழும் என்றால் பாருங்களேன். நம்பிக்கை இருந்தால் நம்பிக்கையோடு இந்த சின்ன பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -