குடும்ப பிரச்சினைகள் தீர பரிகாரம்

water1
- Advertisement -

குடும்பம் என்றால் சில பல பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகளோ, பிரச்சனைகளோ ஒரு நாளும் வரக்கூடாது என்று நினைப்பது ரொம்ப தவறு. ஆனா பிரச்சனையே வாழ்க்கையாக மாறிவிட்டால், அது ரொம்ப கஷ்டம் அல்லவா. வாழ்க்கை நரகமாக மாறிவிடும். நல்லா தான் இருந்தோம்.

ஆனால் இந்த ஒரு சில நாட்களாக, எங்கள் வீட்டில் இருந்த சந்தோஷம் காணாமல் போய்விட்டது. காரணம் என்ன என்று தெரியவில்லை. குடும்பத்தில் கஷ்டத்திற்கு பின்னால் கஷ்டம் வரிசை கட்டி நிற்கின்றது. நிம்மதி இல்லை. குடும்பத்தில் எப்படியாவது ஒரு நிம்மதியை வர வைக்க வேண்டும் என்றால் என்ன செய்யலாம். ஆன்மீகம் சொல்லும் ஒரு தாந்திரீக பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

குடும்பத்தில் நிம்மதி பிறக்க பரிகாரம்

நாளைய தினம் மாத ஏகாதேசி திதி. பெருமாளுக்கு உகந்த நாள். பெருமாளின் மீது பாரத்தை போடுங்க. காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து விடுங்கள். பெருமாளே நீ தான் எங்கள் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்று முழுமையாக எம்பெருமான் பாதங்களில் சரணாகதி அடைந்து விடுங்கள். பிறகு காலை முதல் வேலையாக வீட்டில் இருக்கும் பெண்கள் அடுப்பை பற்ற வைத்து சுடுதண்ணீர் வையுங்கள்.

பாத்திரத்தில் தண்ணீர் நன்றாக சூடானதும் அந்த தண்ணீரில் 2 கிராம்பு, 1 நட்சத்திர சோம்பு ஸ்டார் அனீஸ் சொல்லுவாங்க இல்லையா அத போடுங்க. ஒரு சின்ன கட்டி பச்சை கற்பூரத்தை அதுல போடுங்க. அடுப்பை அணைத்து விடுங்கள். இந்த தண்ணீரில் இருந்து ஒரு தெய்வீக நறுமணம் வெளியே வரும்.

- Advertisement -

அந்த பாத்திரத்தில் இருக்கும் சுடுதண்ணீரை பத்திரமாகக் கொண்டு வந்து உங்கள் வீட்டின் வரவேற்பறையில் வைத்து விடுங்கள். சிறு பிள்ளைகள் உங்கள் வீட்டில் இருந்தால் இதை ஒரு அலமாரிக்கு மேல் பக்கத்தில் வைத்திருங்கள். இந்த வாசம் உங்கள் வீடு முழுவதும் அப்படியே லேசாக பரவும். வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் இந்த வாசத்தை சுவாசிக்கட்டும்.

காலையில் இதுபோல செஞ்சுட்டீங்க. மாலை 6:00 மணிக்கு இதே போல இந்த பரிகாரத்தை செய்யுங்கள். ஏகாதேசியான இன்றைய தினம் தொடங்கிய இந்த பரிகாரத்தை, அடுத்த ஏகாதேசி வரை தினமும் செய்யுங்க. வீட்டில் இருக்கும் பெண்கள் இதை தவறாமல் செய்து வர வேண்டும். இந்த தண்ணீரில் இருந்து வெளிவரக்கூடிய அந்த நேர்மறை ஆற்றல் நிரம்பிய வாசமானது, உங்கள் வீட்டில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜியை அழித்துவிடும்.

- Advertisement -

சந்தோஷமே இல்லாமல் கஷ்டத்தில் இருக்கும் உங்கள் குடும்பத்திற்கு நிச்சயம் ஒரு விடிவு காலம் வரும். வீட்டில் அடிக்கடி மூட் அவுட் ஆகுறவங்க கூட கோபத்தை குறைத்துக் கொண்டு சந்தோஷமா இருப்பாங்க. பெருமாளை நினைத்து நம்பிக்கை இருந்தால் மட்டும் இதை செய்யவும். நம்பிக்கை இல்லாதவர்கள் பின்பற்றும் போது நிச்சயம் பரிகாரம் பலனளிக்காது.

இதையும் படிக்கலாமே: தங்கம் சேர்க்கும் தேங்காய் பரிகாரம்

நல்லது நடக்க பெருமாளை வேண்டிக்கோங்க எவ்வளவு பெரிய துன்பமாக இருந்தாலும் 30 நாட்களில் நிச்சயம் சரியாக, வாய்ப்புகளை அந்த எம்பெருமான் காட்டிக் கொடுப்பான் என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -