தங்கம் சேர்க்கும் தேங்காய் பரிகாரம்

gold
- Advertisement -

சில நேரங்களில் நாம் தங்கம் வாங்கக்கூடிய நேரம், நமக்கு அடுத்தடுத்து தங்கத்தை சேர்க்கக்கூடிய யோகத்தை கொடுத்து விடும். ஒரு கிராம் தான் வாங்கி இருப்போம். ஆனால் அந்த தங்கம் வாங்கிய ராசி, அடுத்து ஒரு பவுன் வாங்கச் செய்யும். அடுத்தடுத்து ஒவ்வொரு பவுன் ஆக சேர்ந்துவிடும். ஒரு சின்ன குண்டுமணி தங்கம், நம் வீட்டில் தங்கத்தை குவித்து விடும். இப்படி நீங்கள் வாங்கும் ஒரு குண்டுமணி தங்கம் ராசியான தங்கமாக மாற வேண்டும் என்றால் என்ன பரிகாரம் செய்வது. ஆன்மீகம் சார்ந்த தகவலை தெரிந்து கொள்வோம் வாங்க.

தங்கம் சேர்க்கும் தேங்காய் பரிகாரம்

நாம் வாங்கக்கூடிய எல்லா தங்க நகைகளும் புத்தம் புதுசாக பூமியிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட தங்கத்தில் தான் செய்தது என்று உறுதியாக சொல்லிவிட முடியாது. பழைய நகைகளை உருக்கி செய்யக்கூடிய தங்கமும், கடைகளில் புது தங்கமாக மாற்றப்பட்டு விற்கப்படும். தங்கத்தை நெருப்பில் போட்டு உருக்கி புது தங்கமாக மாற்றித் தான் செய்கிறார்கள்.

- Advertisement -

அதில் பெரிய அளவில் எந்த தோஷமும் இல்லை என்றாலும், அந்த பழைய தங்கத்தை விற்றவர்கள் எந்த மன நிலமையில் விற்றார்கள் என்பது நமக்கு தெரியாது. அந்த தங்கம் யார் கையில் இருந்து எடுக்கப்பட்ட தங்கம் என்பதும் நமக்கு தெரியாது. இப்படி கண்ணுக்குத் தெரியாத, அடுத்தவர்களுடைய எதிர்மறை ஆற்றல் அந்த தங்கத்தில் இருந்தால், அது தோஷமான தங்கமாக மாறிவிடுகிறது. சரி இப்போது நாம் வாங்கிய தங்கத்தில் இருக்கும் தோஷத்தை நீக்க என்ன செய்வது.

முதலில் தங்கம் வாங்கி வந்த உடனேயே அணிந்து கொள்ள கூடாது. பீரோவில் எடுத்தும் வைக்கக் கூடாது. வாங்கி வந்த தங்கத்தை கல்லுப்புக்கு மேல் வைத்து எடுக்க வேண்டும். ஒரு வெள்ளைத் துணியில் கல் உப்பை பரப்பி வைத்துவிட்டு இந்த தங்கத்தை அந்த துணியின் மேல் வைத்து சின்னதாக முடிச்சு போட்டு விடுங்கள். ஒருநாள் முழுவதும் அந்த தங்கம் கல் உப்பில் இருக்கட்டும்.

- Advertisement -

அடுத்த நாள் அந்த தங்கத்தை எடுத்துக் கொண்டு, கல்லுப்பை தண்ணீரில் கரைத்து விடுங்கள். அடுத்து இந்த தங்கத்தை ஏதாவது ஒரு சாமிக்கு அணிவிக்கலாம். பூஜை அறையில் இருக்கும் தெய்வத்துக்கும் போடலாம், அல்லது கோவிலுக்கு கொண்டு போய் ஜாக்கிரதையாக அம்பாளின் பாதத்தில் வைத்து எடுக்கலாம்.

அது உங்களுடைய விருப்பம். பிறகு வீட்டிற்கு வந்து புதுசாக ஒரு தேங்காயை வாங்கி உடைச்சுக்கோங்க. உடைச்ச தேங்காய் இருக்கும் தண்ணீர் வெளியே வந்துவிடும். ஒரு பாதி மூடிக்கும் நடுவே இந்த தங்கத்தை ஒரு நிமிடம் வைத்து எடுத்து விடுங்கள் போதும். தங்கத்தில் இருக்கும் தோஷங்கள் நீங்கிவிடும். அது மட்டுமில்லாமல் மீண்டும் மீண்டும் தங்கம் வாங்கக்கூடிய யோகத்தையும் இந்த தேங்காய் பரிகாரம் உங்களுக்கு கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: மனக்குழப்பத்தை நீக்கும் வழிபாடு

எப்பவோ உடைத்த பழைய தேங்காயில் எல்லாம் இந்த பரிகாரத்தை செய்யக்கூடாது. புதுசாக ஒரு தேங்காய் வாங்கி உடைத்து உடனேயே அந்த தேங்காய்க்குள் இந்த தங்கத்தை வைத்து எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்மீகம் சொல்லும் இந்த எளிய பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -