கடுகு அளவு கூட சந்தோஷம் இல்லாத வீட்டில், கடலளவு மகிழ்ச்சியை கொண்டு வந்து சேர்க்கும் கடுகு. இதை மட்டும் செய்தால் குடும்ப கஷ்டங்கள் எல்லாம் நொடிப்பொழுதில் தீரும்.

kadugu
- Advertisement -

எல்லோருடைய வீட்டிலும் அவரவருடைய தகுதிக்கு ஏற்ப குடும்ப கஷ்டம் இருக்கத்தான் செய்கிறது. கோடீஸ்வரராக இருப்பவர்களுக்கு கஷ்டமே இல்லை. ஏழையாக இருப்பவர்களுக்கு தான் கஷ்டம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். அப்படியெல்லாம் கிடையாது. மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்குமே கஷ்டம் இருக்கத்தான் செய்யும். ஏழையாக இருப்பவன் கீழே விழுந்தால் அவனுக்கு அவ்வளவு பெரிய அடிபடாது. பட்ட கஷ்டத்தில் இருந்து அவன் சுலபமாக வெளிவந்து விடலாம். அதுவே, பணக்காரன், வாழ்க்கையின் உயரத்தில் இருப்பவர், கீழே விழுந்தால் படக்கூடிய அடி மிகப்பெரிய அடியாக இருக்கும். உயரத்திலிருந்து கீழே விழுந்தவனால் எந்திரிப்பது அவ்வளவு சுலபம் அல்ல. ஆகவே நாம் இன்னும் பணக்காரராகவில்லையே என்ற கஷ்டம் அதிகமாக உங்கள் மனதில் இருந்தால் அதை இன்றோடு அழித்து விடுங்கள். கடவுள் நமக்கு தேவையானதை கொடுத்திருக்கின்றான். அதை வைத்து நாம் திருப்தி அடைந்து கொள்ள வேண்டும் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவிற்குள் செல்வோம்.

குடும்ப கஷ்டம் தீர பரிகாரம்
குடும்ப கஷ்டம் தீருவதற்கு குடும்பத்தில் சந்தோஷம் பிறப்பதற்கு ஒரு எளிமையான தாந்திரீக பரிகாரத்தை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். இந்த தாந்திரீக பரிகாரத்திற்கு நம் வீட்டு சமையல் அறையில் இருக்கக்கூடிய பொருட்களே போதுமானது. ஒரு கண்ணாடி டம்ளர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் வர மிளகாய் உள்ளே இருக்கும் விதை சிறிதளவு (இரண்டு வரமிளகாய்க்கு உள்ளே இருக்கும் விதைகளை எடுத்துக் கொள்ளலாம்), கடுகு 1 ஸ்பூன், கல் உப்பு 1 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு அது நிரம்ப நல்ல தண்ணீரை ஊற்றி, உங்கள் வீட்டு வரவேற்பறையில் வைத்து விட வேண்டும்.

- Advertisement -

அலமாரிக்கு மேல் வைத்தால் கூட தவறு கிடையாது. இந்த தண்ணீர் மூன்று நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். உள்ளே இருக்கக்கூடிய பொருட்களோடு சேர்த்து எங்காவது மண் பாங்கான இடத்தில் இந்த தண்ணீரை ஊற்றிவிட்டு, டம்ளரை கழுவி மீண்டும் புதிய தண்ணீரை ஊற்றி, மீண்டும் மூன்று பொருட்களையும் புதியதாக போட்டு வரவேற்பரையில் வைத்து விட வேண்டும்.

இந்த தண்ணீருக்கு உள்ளே இருக்கக்கூடிய பொருள் உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலை நிமிடத்திற்கு நிமிடம் அழித்துக் கொண்டே இருக்கும். எந்த ஒரு கெட்ட சக்தியையும் வீட்டில் தங்க விடாது. உதாரணத்திற்கு திருஷ்டி சுத்தி போடும்போது, வர மிளகாய், உப்பு, கடுகு, சேர்த்து சுற்றி போடுவார்கள் அல்லவா. அதேபோலத்தான் அந்த மூன்று பொருட்களையும் நாம் தண்ணீரில் போட்டு நம் வீட்டு பாதுகாப்பிற்காக வைத்துள்ளோம்.

- Advertisement -

இதேபோல இன்னொரு டம்ளரை தயார் செய்து படுக்கையறையில் வைக்கலாம். இப்படி செய்தால் கணவன் மனைவிக்குள் சண்டை வராமல் இருக்கும். அடுப்படியில் வைக்கலாம். அடிப்படையில் இந்த டம்ரை வைக்கும் போது உங்கள் வீட்டு சமையல் அறைக்கும், உங்கள் சமையலுக்கும் எந்த கண் திருஷ்டியும் படாது. அதாவது சில பேர் நம் வீட்டிற்கு வந்தால் இவர்கள் இவ்வளவு அழகாக சமைத்து சாப்பிடுகிறார்களே, என்று கண் வைத்து விடுவார்கள். சில பேர் சமைக்கும் போதே பக்கத்து வீட்டு வரைக்கும் வாசம் போகும். இந்த வீட்டில் இருந்து இவ்வளவு அருமையான வாசனை வருகிறதே சமையல் எவ்வளவு ருசியாக இருக்கும் என்று கண் வைப்பார்கள். அடுத்த நாளிலிருந்து நம் வீட்டில் இருப்பவர்கள் நாம் சமைத்த சாப்பாட்டை நன்றாக சாப்பிட மாட்டார்கள். இப்படிப்பட்ட கண்திருஷியில் இருந்து தப்பிக்கவும் இந்த குறிப்பு நமக்கு பயன்படும்.

இதையும் படிக்கலாமே: நூறு ரூபாய் கையை விட்டு சென்றாலும், அது ஆயிரம் ரூபாயாக திரும்பி வர வேண்டுமா? அப்படியானால், இனி பணத்தை கொடுக்கும் போதும், வாங்கும் போதும் இதை மட்டும் மறக்காமல் செய்து விடுங்கள்.

முயற்சி செய்து பாருங்கள். மூன்று நாட்கள் இந்த டம்ளர் தண்ணீர் உங்கள் வீட்டில் இருக்கும் போதே, வீட்டில் மன நிறைவான சந்தோஷத்தை பெறுவீர்கள். எப்போது பார்த்தாலும் சண்டை சச்சரவோடு இருக்கும் குடும்பம் கூட அமைதியான சூழ்நிலையை பெறும். வீட்டில் நல்லது நடக்கும். எங்க வீட்ல கடுகு அளவு கூட சந்தோஷம் இல்லை என்பவர்களுக்கு கடலளவு சந்தோஷத்தை பெற்று தரக்கூடிய எளிமையான பரிகாரங்களில் இதுவும் ஒன்று. நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பார்த்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -