நூறு ரூபாய் கையை விட்டு சென்றாலும், அது ஆயிரம் ரூபாயாக திரும்பி வர வேண்டுமா? அப்படியானால், இனி பணத்தை கொடுக்கும் போதும், வாங்கும் போதும் இதை மட்டும் மறக்காமல் செய்து விடுங்கள்.

- Advertisement -

பணம் வேண்டாம் என்று சொல்லும் மனிதர்கள் ஏன், நினைக்கும் மனிதர் கூட பூமியில் இல்லை. பணம் இல்லாமல் எந்த இடத்திலும் நம்மால் பயணம் செய்ய முடியாது. அதனால் தான் பணம் பாதாளம் வரை செல்லும் என்கிற பழமொழியே உருவாகி இருக்கிறது. அந்த பணமானது நம் கையில் எப்போதும் அதிகரித்து கொண்டே இருக்க வேண்டும் என்றால், அதற்கு ஆன்மீகத்தில் சில வழிகள் சொல்லப்பட்டு இருக்கிறது. அது என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சிலர் என்ன தான் பார்த்து பார்த்து செலவு செய்தாலும், அவர்களிடம் பணம் தங்கவே தங்காது. எவ்வளவு பணம் வந்தாலும் வரவிற்கு மீறிய செலவு தான் அதிகரிக்கும். இது மட்டும் இன்றி கடனும் வாங்கி விடுவார்கள். இதையெல்லாம் போக்க ஒரே வழி பணம் நம் கையில் தங்க வேண்டும், தங்கிய பணம் அதிகரிக்க வேண்டும். இதற்கு நம் பணத்தை எண்ணும் போது ஒரு வார்த்தையை சொன்னால் போதும் அந்த பணம் நம் கையில் தங்கிப் பெருகும் என்கிறது சொல்லப்படுகிறது.

- Advertisement -

நாம் ஒவ்வொருவரின் எண்ணத்திற்கும், செயலுக்கும், வார்த்தைக்கும் பலன் அதிகம். அதனால் பணம் நம் கையில் வரும் போதே இந்த பணம் நமக்கு நல்ல முறையில் செலவு ஆக வேண்டும். இது நான் மிச்சப்படுத்த வேண்டும் இதை வைத்து நான் என் குடும்பத்தை நல்ல முறையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இது ஆண், பெண் யாராக இருந்தாலும் இப்படி நினைத்துக் கொண்டு பணத்தை கையாள வேண்டும்.

பணம் சேர சொல்ல வேண்டிய வார்த்தை | Panam Sera solla vendiya varthai
இப்போது பணம் கையில் வந்தவுடன் சொல்ல வேண்டிய அந்த வார்த்தை லாபம். பணத்தை எண்ணும் போது முதல் பணத்தை லாபம் என்று சொல்லி எண்ண தொடங்க வேண்டும்.

- Advertisement -

உங்கள் கையில் ஆயிரம் ரூபாய்க்கு, பத்து நூறு ரூபாய் நோட்டுக்களாக இருக்கிறது என்றால், முதல் நூறு ரூபாயை லாபம் என்று சொல்லி எண்ண துவங்கி அடுத்த ரூபாய்களை 200, 300 என்று எண்ணி வந்தால் பணம் கையில் தங்குவதோடு அதிகரிக்கும். லாபம் என்ற வார்த்தை உங்களுக்கு பண வரத்து அதிகரித்து கொடுக்கும் என்று சொல்ல படுகிறது. வியாபார ஸ்தலங்கள் கூட நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து லாபம் என்று எழுதி இருப்பார்கள். சில இடங்களில் வெறும் லாபம் என்றும் எழுதி இருப்பார்கள் இந்த வார்த்தைக்கு அவ்வளவு பலன் உண்டு.

அதுமட்டும் இன்றி பணத்தை கொடுக்கும் போது கூட சில முறைகளை கடைப்பிடிக்க வேண்டும். நீங்கள் மற்றவருக்கு பணத்தை கொடுக்கும் போது ரூபாயின் தலை பக்கம் (அதாவது எண்கள் இருக்கும் பக்கம்) உங்களை பார்த்தவாறு இருக்க வேண்டும். இப்படி கொடுக்கும் போது ஒரு ரூபாய் உங்களை விட்டு சென்றால் கூட அது நூறு ரூபாயாக திரும்ப வரும்.

- Advertisement -

பணம் கையில் வந்து கொடுக்கும் போதும், எண்ணும் போதும் இந்த வார்த்தையை நாம் சொல்லுவதாலும், பணத்தை இப்படி கொடுப்பதாலும் நமக்கு எந்த கெடுதலும் கிடையாது, மாறாக இவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்றால் இதில் செய்வதில் தவறு ஏதும் இல்லை தானே.

இதையும் படிக்கலாமே: வறுமை இல்லாத வாழ்வுக்கு வியாழன் கிழமையில் பூஜை அறையில் வைக்க வேண்டிய முக்கிய பொருள் என்ன? இத வச்சு வழிபட்டா வாழ்வில் வறுமையே வராதா?

நாம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஒரு வார்த்தை சொல்லி தான் பார்க்கலாமே, இதன் மூலம் நமக்கு பணவரத்து நன்றாக இருந்தால் சந்தோஷம் தானே. நீங்களும் நம்பிக்கையுடன் இதை பின்பற்றி பாருங்கள்.

- Advertisement -