குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க மந்திரம்

dhakshana murthy om manthiram
- Advertisement -

ஒவ்வொரு குடும்பத்திலும் ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் இருவரும் இரவும் பகலும் பாடுபட்டு உழைப்பது தங்கள் குடும்பமும் பிள்ளைகளும் நன்றாக இருக்க வேண்டும் என்று தான். அதிலும் குழந்தைகள் நன்றாக கல்வி கற்று நல்ல வேலை கிடைத்து நல்ல முறையில் வாழந்து விட்டால் அதைவிட பெற்றோர்களுக்கு வேறு மகிழ்ச்சியே இருக்காது.

இப்படி அனுதினமும் குடும்பத்திற்காகவும் பிள்ளைகளுக்காகவும் தங்கள் வாழ்க்கையே அர்ப்பணிக்கும் பெற்றோர்களின் இந்த துயர் தீர்க்க சாஸ்திரங்கள் பல எளிய வழிகளை நமக்குத் தந்திருக்கிறது. அதில் ஒரு அற்புதமான எளிய மந்திர முறையை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க மந்திரம்

இந்த மந்திர பரிகாரத்தை யார் வேண்டுமானாலும் செய்யலாமா என்றால், குடும்பம் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்று மனதார நினைப்பவர்கள் மட்டும் தான் செய்ய வேண்டும். குடும்பத்தின் மீது அக்கறை இல்லாமல் பொறுப்பற்று இருப்பவர்கள் குடும்பத்திற்காக எதுவும் செய்யாமல் ஊதாரித்தனமாக தெரியும் யாரும் இந்த மந்திர வழிபாட்டை செய்யும் போது நிச்சயம் பலன் இருக்காது. இது ஆண்கள் பெண்கள் இருவருக்கும் பொதுவானது.

வியாழன் என்றாலே குருபகவானுக்கு உகந்த நாள் தான். குழந்தைகள் கல்வி அறிவில் ஞானத்தில் சிதைந்து விளங்க வேண்டும் என்றாலும் குரு பகவானின் தயவு நிச்சயம் தேவை. ஒருவருடைய வாழ்க்கை செல்வ செழிப்புடன் சீரும் சிறப்புமாக மாற வேண்டும் என்றாலும் குரு பகவானுடைய அருள் தேவை. ஆகையால் தான் நம் முன்னோர்கள் அன்றே குரு பார்க்கின் கோடி நன்மை என்று ஒரே வார்த்தையில் அதை சொல்லி வைத்தார்கள்.

- Advertisement -

அப்படியான குரு பகவானை நினைத்து தான் இப்போது இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை வியாழன் அன்று காலை முதல் இரவு வரை உங்களுக்கு எப்பொழுது நேரம் கிடைக்கிறதோ அந்த நேரத்தில் செய்து கொள்ளலாம். இந்த மந்திரத்தை சொல்வதற்கென பூஜை புனஸ்காரங்கள் எதுவும் செய்ய தேவையில்லை.

உங்கள் வீட்டின் பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து விட்டு அங்கே அமர்ந்து விடுங்கள். மனதை அமைதியாக ஒரு நிலைப்படுத்திக் கொண்டு கடவுளிடம் உங்களுடைய குடும்பம் குழந்தை குறித்தான வேண்டுதலை மனதார ஒரு முறை வேண்டிக் கொண்டு இந்த மந்திரத்தை ஒரு முறை சொன்னால் போதும். நீங்கள் நினைத்த அனைத்தும் நிறைவேறும்.

- Advertisement -

ஓம் வில்வ பிரியனே போற்றி ஓம்
ஓம் வேதாந்த நாயக போற்றி ஓம்
ஓம் வேதத்தின் சரமே போற்றி ஓம்
தட்சணமூர்த்தியே போற்றி ஓம்

இதை வியாழன் தோறும் தொடர்ந்து செய்து வரும் போது உங்கள் குடும்பத்தில் நல்ல மாற்றங்கள் நிகழும். பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள், ஒழுக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள். பிறர் போன்ற நல்ல நிலையில் வாழ்வார்கள் உங்கள் குடும்பமும் செல்வ செழிப்பில் நல்லபடியாக உயரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கலாமே: தரித்திரம் நீங்க துளசி இலை பரிகாரம்

இந்த மந்திர வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -