குலதெய்வக் கோவில் உண்டியலில் இந்த ஒரு முடிச்சை மட்டும் போடுங்கள். உங்களுடைய நீண்ட நாள் கஷ்டம் நொடிப்பொழுதில் சரியாகும்.

kuladheivam1
- Advertisement -

கோவிலுக்கு செல்லாதவர்கள், இறைவனின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் கூட கஷ்டம் என்று வரும்போது கடவுளை நம்புவார்கள். கடவுளே இந்த கஷ்டத்திலிருந்து என்னை எப்படியாவது காப்பாற்றி விடு என்று, சாமி கும்பிடுவார்கள். இது இயல்பாக எல்லோருக்கும் நடக்கக்கூடிய விஷயம் தான். ஆனால் திடீரென்று எதிர்பாராத பெரிய கஷ்டம் வரும்போது நமக்கு என்ன செய்வது என்றே புரியாது. அந்த சமயத்தில் குல தெய்வத்திற்கு இந்த ஒரு வேண்டுதலை வைத்துக் கொள்ளுங்கள். குலதெய்வ கோவிலுக்கு கொண்டு போய் இந்த முடிச்சை உண்டியலில் போட்டுவிட்டு வாருங்கள். நிச்சயமாக உங்களுடைய தீராத பெரிய துன்பம் கூட கூடிய சீக்கிரத்தில் தீர்ந்து விடும். மலைபோல் இருக்கும் கஷ்டம் பனி போல உருகிப் போக, சுலபமான சக்தி வாய்ந்த ஒரு பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

குலதெய்வ காணிக்கை. உங்களால் முடிந்த காணிக்கையை மஞ்சள் துணியில் முடிந்து வைக்கலாம். சதுர வடிவில் ஒரு வெள்ளை துணியை எடுத்து அதை மஞ்சளில் நனைத்து நிழலிலேயே உலர வைத்து, அதில் காணிக்கையை முடிந்து வைக்க வேண்டும். நேரடியாக மஞ்சள் துணியை எடுத்து இந்த பரிகாரத்தை செய்யாதீங்க. சுத்தமான மஞ்சள் என்பது குரு பகவானின் ஆசிர்வாதத்தை பெற்றது. அந்த மஞ்சளை பயன்படுத்தி நாம் இந்த பரிகாரத்தை செய்யும் போது நமக்கு நல்லது சீக்கிரம் நடக்கும். அதற்காகத்தான் சுத்தமான மஞ்சளில் நனைத்த துணியை பரிகாரத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

- Advertisement -

இந்த மஞ்சள் துணிக்குள் எவ்வளவு காணிக்கை வைக்க வேண்டும். குறைந்தபட்சம் 1 ரூபாய், அதிகபட்சம் ஒற்றைப்படையில் உங்களால் எவ்வளவு ரூபாய் வைக்க முடியுமோ அதை வைத்து முடிந்து அந்த காணிக்கையை வீட்டில் குலதெய்வ கோவிலின் பாதங்களில் வைத்துவிட்டு, உங்களுடைய பெரிய அந்த பிரச்சனை தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பிரச்சனை சரியாக ஆனதும் உடனடியாக குலதெய்வ கோவிலுக்கு வந்து அந்த காணிக்கையை உண்டியலில் செலுத்துவதாக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

இந்த வேண்டுதலை வைத்த ஒரு சில நாட்களுக்குள் நிச்சயமாக உங்களுடைய கஷ்டங்கள் சரியாகும். அதில் சந்தேகத்திற்கு இடமில்லை. ஏனென்றால் உங்கள் குலதெய்வம், உங்கள் குலத்தை காக்கத்தான் இருக்கிறது. ஆகவே, இந்த பரிகாரத்தை முழு நம்பிக்கையோடு செய்து விடுங்கள். உங்களுடைய பிரச்சனை தீர்ந்தவுடன் உடனடியாக குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு சென்று குலதெய்வத்தை வழிபாடு செய்து, இந்த காணிக்கையை குலதெய்வ உண்டியலில் செலுத்தி வர வேண்டும். மஞ்சள் துணியை பிரிக்கக் கூடாது. மஞ்சள் துணையோடு காணிக்கையை உண்டியலில் போட்டு விடுங்கள்.

- Advertisement -

முதல் பரிகாரமாக மேல் சொன்ன பரிகாரத்தை செய்து விடுங்கள். இரண்டாவதாக ஒரு பரிகாரம் உள்ளது. அதிகப்படியான பண கஷ்டத்தில் இருப்பவர்கள் இதை செய்யும்போது பணக்கஷ்டத்திலிருந்து வெளிவருவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. சுத்தமான பசும்பால் வாங்கி வீட்டிலேயே காய்ச்சி அதில் வாசனை நிறைந்த ஏலக்காய், மிகக் குறைந்த அளவு குங்குமப்பூ, முடிந்த அளவுக்கு பாதாம் பருப்பு, இவைகளை போட்டு நாட்டு சர்க்கரை போட்டு, அந்தப் பாலை சுவை நிறைந்த பாலாக தயார் செய்து கொள்ள வேண்டும். இந்த பாலை உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது கோவிலுக்கு கொண்டு போய் வைத்து இறைவனுக்கு நிவேதனம் செய்து அங்கு வரக்கூடிய குழந்தைகளுக்கு பக்தர்களுக்கு இந்த பசும்பாலை தானம் கொடுத்தால் உடனடியாக பணக்கஷ்டம் தீரும்.

இதையும் படிக்கலாமே: ஒரு எழுத்து உங்கள் தலையெழுத்தை மாற்றுமா? நிச்சயமாக, இந்த இலையில் எழுதும் அந்த ஒரு எழுத்து உங்கள் தலையெழுத்தை மாற்றி, எப்பேற்பட்ட ஏழ்மையையும் போக்கி செல்வந்தராகும் யோகத்தை உங்களுக்கு தேடி தரும்.

பெரிய பண கஷ்டம் இருக்கிறது உடனடியாக இவ்வளவு பணம் தேவை, அல்லது உடனடியாக இந்த கடனை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் இந்த பரிகாரம் செய்யும் போது அந்த பண பிரச்சனைக்கு உடனடியாக ஏதாவது ஒரு வகையில் தீர்வு கிடைக்க நிறையவே வாய்ப்புகள் உள்ளது. முடிந்தால் ஏதாவது ஒரு குழந்தைகள் ஆசிரமத்திற்கு கூட இப்படி ஒரு பாலை உங்கள் கையாலேயே தயார் செய்து அதை தானம் செய்யலாம். இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள் நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -